காடைக் கழுத்தான் (நெல்)

காடைக் கழுத்தான் (Kadaikazhuthan) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள, “சுக்கன் கொள்ளை” எனும் நாட்டுப்புறப் பகுதியில் பிரதானாமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1350 கிலோ நெல் தானியமும், சுமார் 1200 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாக கூறப்படுகிறது.[1]

காடைக் கழுத்தான்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
165 - 170 நாட்கள்
மகசூல்
சுமார் 1350 கிலோ ஒரு ஏக்கர்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா[1]

பருவகாலம்

மத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான சம்பா பட்டம் எனும் இப்பருவத்தில், 165 - 170 நாள் வயதுடைய காடைக் கழுத்தான் பயிரிடப்படுகிறது.[1] மேலும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்கக்கூடிய சம்பா பட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக விளங்குகிறது.[2]

வளருகை

நாற்று நடவு முறைக்கு ஏற்ற இராகமான இது, சிறந்த வடிகால் வசதியுடனான நிலப்பகுதிகளில் செழித்து வளரக்கூடிய நெல் வகையாகும். வெள்ளை நிறத்துடனும், சிறந்த தரத்துடனும் காணப்படும் இந்நெல்லின் அரிசியில், தென்னிந்திய சிறப்பு உணவுப் பண்டமாக கருதப்படும் "பிட்டு" செய்வதற்கு ஏற்றதாக கூறப்படுகிறது.[1]

குறிப்புகள்

  • காடைக் கழுத்தான் நெல்மணிகள் முனையின் கூம்புப் பகுதியில் வெண்ணிற வளையம் காணப்படுவதால், இந்த நெல்லிற்கு காடைக் கழுத்தான் என்றழைக்கப்பதாக கூறப்படுகிறது.[3]

இவற்றையும் காண்க

சான்றுகள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.