ஈர்க்குச்சம்பா (நெல்)

ஈர்க்குச்சம்பா (Irkkuccampa) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[1] சம்பா வகைகளில், உடல் பித்தத்தை இந்த ஈர்க்குச்சம்பாவின் அரிசிச்சோறு, மிகவும் சுவையுடையதாக கருதப்படுகிறது.[2]

ஈர்க்குச்சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஈர்க்குச்சம்பா பாடல்

அந்தமொழி கேட்டு உத்தமி அழைத்தாளே தாதிகளை
அழகு முழிராமி அபிராமி வாருமிங்கே
திரண்ட முழியாளே திருவே நீ வாருமினி
தாதியரைத் தானழைத்து உத்தமி தானுமப்போ ஏதுசொல்வார்
ஈர்க்குச் சம்பா அரிசியதை இணை இணையாய்த் தீட்டியேதான்
[3]

அகத்தியர் குணபாடம்

ஈர்க்குச்சம் பாஎன் றியம்பும் அரிசியது
நார்க்குக் கதியுரிசை நல்குங்காண் – பார்க்குமிடத்
தெல்லார்க்குங் காதல் இயற்றுமற்பப் பித்தமென்பார்
வில்லாரும் பூசைகட்காம் விள்

  • பொருள்:

கடவுளுக்குப் படைப்பதற்காக வழங்கும் ஈர்க்குச்சம்பா அரிசி, நாவுக்குச் சுவையையும், பார்க்க விருப்பத்தையும் தரும். கொஞ்சம் தீக்குற்றத்தையும்(Elevate Pitham) உண்டுபண்ணும்.[4]

இவற்றையும் காண்க

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.