முட்டைக்கார் (நெல்)

முட்டைக்கார் (Muttaikar) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டராத்தில் உள்ள "இடையூர்" எனும் நாட்டுப்புறப் பகுதியில் பிரதானாமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1350 கிலோ நெல் தானியமும், சுமார் 1200 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாக கூறப்படுகிறது.[1]

முட்டைக்கார்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
120 – 125 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1350 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

பருவகாலம்

குறுகியகால வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான நவரைப் பட்டம் எனும் இப்பருவத்தில், 30 நாட்கள் நாற்றங்கால் உட்பட 120 நாள் வயதுடைய முட்டைக்கார் நெற்பயிர் பயிரிடப்படுகிறது.[1] மேலும் டிசம்பர் - சனவரி மாதங்களில் தொடங்கக்கூடிய இப்பட்டத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், இதுபோன்ற குறுகியகால நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக விளங்குகிறது.[2]

வளருகை

ஈரநில நேரடி நெல் விதைப்பு, மற்றும் நாற்று நடுதல் என இரண்டு முறைகளையும் பின்பற்றி விளைவிக்கப்படும் இந்த நெற்பயிர், 4½ - 5 அடிகள் உயரம் வரை வளர்ந்து, தண்டுடைந்து சாயும் தன்மை உடையதாகும்.[1]

குறிப்புகள்

  • முட்டைக்காரின் அரிசி சிவப்பு நிறத்தில் பெரு நயத்துடன் (தடித்து) காணப்படுகிறது.[1]
  • தென்னிந்திய பிரதான உணவாக கருதப்படும், இட்லி, மற்றும் தோசைப் போன்ற சிற்றூண்டி வகைகள் தயாரிக்க ஏற்றதாக உள்ள இது, பூச்சிகள், மற்றும் நோய்களிலிருந்து காத்துகொள்ளும் திறன் கொண்டதாகும்.[3]

இவற்றையும் காண்க

சான்றுகள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.