காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும். சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளது. பட்டு கைநெசவு சேலைகளுக்கு புகழ் பெற்ற மாவட்டம். தமிழ் நாட்டின் வடகிழக்கு கடற்கரையோரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் அமைந்துள்ளது. இது சென்னை மாநகரருக்கு அருகே உள்ளது. இது மேற்கில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் வழியாக வடக்கே திருவள்ளூர் மாவட்டத்தாலும், சென்னை மாவட்டத்தாலும் தெற்கில் விழுப்புரம் மாவட்டத்தாலும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் அமைந்துள்ளது. 11.00 முதல் 12.00 வரை வடக்கு அட்சரேகை மற்றும் 77.28 முதல் 78.28 முதல் 78.50 வரை கிழக்கு நீளம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மொத்த பூகோள பரப்பளவு 4393.37 சதுர கி.மீ மற்றும் 87.2 கி.மீ ஆகும். காஞ்சிபுரம் கோயில் நகரம் மாவட்டத்தின் தலை நகரம் ஆகும். நிர்வாக காரணங்களுக்காக மாவட்டம் 4 வருவாய் கோட்டங்கள்,, 13 வட்டங்களுடன் 1137 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளது. 633 கிராம பஞ்சாயத்துகளாகவும் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[1]

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் காஞ்சிபுரம்
மிகப்பெரிய நகரம் காஞ்சிபுரம்
ஆட்சியர்
பொன்னையன். இ. ஆ. ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்


ஆக்கப்பட்ட நாள்
பரப்பளவு 1,448 கி.மீ² (வது)
மக்கள் தொகை
(2011
வருடம்
அடர்த்தி
1,441,829 (வது)
1000/கி.மீ²
வட்டங்கள் 5
ஊராட்சி ஒன்றியங்கள் 5
நகராட்சிகள் 1
பேரூராட்சிகள் 6
ஊராட்சிகள் 633
வருவாய் கோட்டங்கள் 2
{{{பின்குறிப்புகள்}}}

2019-இல் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து புதிய செங்கல்பட்டு மாவட்டம் நிறுவப்பட்டப் பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வட்டம், உத்திரமேரூர் வட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வாலாஜாபாத் வட்டம் மற்றும் குன்றத்தூர் வட்டம் என 5 வருவாய் வட்டங்களுடன் செயல்படும்.

வரலாறு

மகாபலிபுரம் கடற்கரைக் கோயில்

கிமு இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பதஞ்சலி மகாபாஷ்யம் எனும் வட மொழி நூலில், காஞ்சிபுரம் பற்றிய குறிப்புகள் உள்ளது. மணிமேகலை, பெரும்பாணாற்றுப்படை போன்ற தமிழ் இலக்கியங்களில் காஞ்சி நகரத்தைப் பற்றிய செய்திகள் உள்ளது.

சோழப் பேரரசில் இருந்த தொண்டை மண்டலப் பகுதிகளை பின்னர் பல்லவர்கள் வென்று காஞ்சி நகரத்தை தங்கள் தலைநகராகக் கொண்டு கிபி 300 முதல் கிபி 850 முடிய ஆண்டனர். பல்லவர்கள் தொண்டை மண்டலத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் எழுப்பினர். அவைகளில் சிறப்பு மிக்கது மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள் ஆகும். பல்லவர்கள் மாமல்லபுரம் துறைமுகத்திலிருந்து சீனா, சயாம், பிஜி போன்ற வெளிநாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பல்லவர்களை வீழ்த்தி மீண்டும் சோழர்கள் காஞ்சிபுரத்தை கைப்பற்றி 10ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை ஆண்டனர். பிரித்தானியர்கள் காஞ்சிபுரம் பகுதிகளை கைப்பற்றி ஆள்வதற்கு முன்னர் விஜயநகர மன்னர்கள் 14ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு முடிய ஆண்டனர்.

காஞ்சி நகரம், இந்து, பௌத்தம் மற்றும் சமண சமயங்களின் தலைமையகமாக விளங்கியது. தண்டி எனும் வட மொழிப் புலவர், நறுமணமிக்கப் பூக்களில் மல்லிகையும்; அழகிய பெண்களில் அரம்பையரும், மனித வாழ்வின் நால்வகை ஆசிரமங்களில் கிரகஸ்தம் போன்று; நகரங்களில் காஞ்சி சிறப்பு மிக்கது எனப்புகழ்கிறார்.

காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களில் பெரும் புலமை படைத்த முதலாம் மகேந்திரவர்மன் இசை மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். கிபி ஏழாம் நூற்றாண்டில் காஞ்சி நகரத்திற்கு வருகைபுரிந்த, பௌத்த அறிஞரும், யாத்திரிகருமான யுவான் சுவாங், காஞ்சி நகரம் ஆறு மைல் சுற்றளவு கொண்டிருந்தது என்றும், வட இந்தியாவின் காசி நகரத்திற்கு இணையான கல்வி நிலையங்களை காஞ்சி நகரம் கொண்டிருந்தது என்றும்; காஞ்சி மக்கள் கல்வி அறிவு படைத்தவர்கள் என்றும் தமது பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய இந்தியா அரசினர் 1788ல் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட ஆட்சியரை நியமித்தனர். 1859 வரை காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்த கருங்குழி, பின்னர் சைதாப்பேட்டைக்கு மாற்றப்பட்டது. 1859 முதல் 1968 வரை சைதாப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக விளங்கியது. 1 சூலை 1968 முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமையிடமாக காஞ்சிபுரம் விளங்கியது.

1 சூலை 1977 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தைப் பிரித்து காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

29 நவம்பர் 2019 அன்று காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு புதிய செங்கல்பட்டு மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3]

இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், வாலாஜாபாத் மற்றும் செய்யூர் என எட்டு வருவாய் வட்டங்கள் கொண்டுள்ளது.[4]

பொருளாதாரம்

உண்டாய் சிற்றுந்து உற்பத்தி நிறுவனம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர்

இம்மாவட்டத்தின் 47% மக்களின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும். நெல், கரும்பு, நிலக்கடலை, பயறு வகைகள், நவதானியங்கள் முக்கியப் பயிர்கள் ஆகும். இம்மாவட்டத்தின் பாயும் பாலாறு மற்றும் ஏரிகள் நீர் ஆதாரம் ஆகும்.

காஞ்சிபுரத்தை கோயில் நகரம் என்றும், பட்டு நகரம் என்றும் அழைப்பர். இம்மாவட்டத்தில் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் காணப்படும் 163 பெருங்கற்கால இடங்களில், 70% காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணப்படுகிறது அவைகளில் குறிப்பிடத்தக்கது எருமையூர், சிறுகளத்தூர், சிக்கராயபுரம், அய்யன்சேரி, கீழம்பாக்கம் மற்றும் நன்மங்கலம் ஆகும்.[5]

இந்தியாவின் பெருந்தொழில் நகரங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் மாவட்டம் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் உண்டாய், நிஷான், மிட்சுபிசு, போர்டு, பிஎம்டபிள்யு, யமகா போன்ற கார் நிறுவனங்கள் உள்ளது. ஸ்ரீபெரும்புதூரும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பெருந்தொழில் முனையமாக உள்ளது. மேலும் சாம்சங், டெயிம்ளர், டெல் போன்ற மின்னனு பொருட்கள் உற்பத்தி நிலையங்கள் உள்ளது. செயிண்ட் கோபன் கட்டிட கண்ணாடிகள் உற்பத்தி நிறுவனமும் உள்ளது. பல பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் தங்கள் கிளைகளைக் கொண்டுள்ள்து.

மக்கள் தொகையியல்

4,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 3,998,252 ஆகும். அதில் ஆண்கள் 2,012,958; பெண்கள் 1,985,294 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 38.95% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 892 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 986 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 84.49% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 89.89% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 79.02% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 431,574 ஆக உள்ளனர்.[6]

இம்மாவட்டத்தில் இந்துக்கள் 3,537,399 (88.47%); கிறித்தவர்கள் 256,762 (6.42%); இசுலாமியர்கள் 173,785 (4.35%); மற்றவர்கள் 0.75% ஆக உள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.

அரசியல்

மக்களவைத் தொகுதிகள்

  1. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
  2. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி

சட்டமன்றத் தொகுதிகள்

  1. காஞ்சிபுரம்
  2. திருப்பெரும்புதூர்
  3. உத்திரமேரூர்

மாவட்ட நிர்வாகம்

காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்திலிருந்த் புதிய செங்கல்பட்டு மாவட்டம் நிறுவிய பின்னர் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் என இரண்டு வருவாய் கோட்டங்களும்; 5 வருவாய் வட்டங்களும் கொண்டுள்ளது.[7]

வருவாய் வட்டங்கள்

  1. உத்திரமேரூர் வட்டம்
  2. காஞ்சிபுரம் வட்டம்
  3. வாலாஜாபாத் வட்டம்
  4. ஸ்ரீபெரும்புதூர் வட்டம்
  5. குன்றத்தூர் வட்டம்

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

நகராட்சிகள்

  1. காஞ்சிபுரம்

பேரூராட்சிகள்

  1. உத்திரமேரூர்
  2. செவிலிமேடு
  3. குன்றத்தூர்
  4. வாலாஜாபாத்
  5. ஸ்ரீபெரும்புதூர்
  6. மாங்காடு

ஊராட்சி ஒன்றியங்கள்

  1. காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம்
  2. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்
  3. உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம்
  4. வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம்
  5. ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம்

வேளாண்மை

கீழ்கண்ட தரவுகள் வருடா வருடம் மாறக்கூடியவை. எனவே, அரசின் மாவட்ட வேளாண்மைத் துறைத் தளங்களையும், மாநில தகவல் நடுவங்களையும் ஒப்பிட்டறிக.[8] இம்மாவட்டத்தில் கணிசமான உயரத்தில் சில மலைகள் உள்ளன. மதுராந்தகம் வட்டத்தில் சிறிய மலைகள் பல அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் வழியாக இயங்கும் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று பாலாறு ஆகும். எனினும், இந்த மாவட்டத்தில் நீர்பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக ஏரிகளும், கிணறுகளும் உள்ளன. இம்மாவட்டத்தின் மொத்த வனப்பகுதி 23.586 எக்டேர் ஆகும். அது உள்பகுதியையும் மாவட்டத்தையும் சுற்றியுள்ளது. இந்த வனப்பகுதியில் 366.675 எக்டேர் நிலப்பரப்பு உள்ளது. 76.50 மெட்ரிக் டன்னும் எண்ணெய் வித்துக்கள் 8.039 டன்கள் பயிரடப்பட்டுள்ளன. அரிசி 145966 இடங்களிலும், கம்பு மற்றும் தானியங்கள் 1217 இடங்களிலும், பருப்பு வகைகள் 2966 இடங்களிலும், கரும்பு 7586 இடங்களிலும், நிலக்கடலை 28766 இடங்களிலும், எள் 912 இடங்களிலும், பருத்தி 53 இடங்களிலும், பயிரிடப் பட்டுள்ளன. பருவநிலையானது, கோடை காலத்தில் அதிகபட்சம் 36.6° செல்சியஸ் ஆகவும், குறைந்த அளவு 21.1° செல்சியஸ் ஆகவும் இருக்கும். குளிர் காலத்தில் உயர்ந்த பட்சம் 28.7° செல்சியஸ் ஆகவும், 19.8° செல்சியஸ் ஆகவும் காணப்படுகின்றன. மழைக்காலத்திற்கு முன்னர் மழைப்பொழிவு கிட்டத்தட்ட முழுவதும் சீராக இருக்கும். கடற்கரை வட்டங்களில் உள்வட்ட பகுதிகளை விட அதிக மழையைப் பெறுகின்றன. இந்த மாவட்டத்தின் முக்கிய பருவநிலை, பருவ மழையைப் பொறுத்து, மழை பெய்யாத நிலையில் துன்பகரமான சூழ்நிலைகள் நிலவுகின்றன வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவக்காற்றுகள 54 சதவீதம் மற்றும் 36 சதவீதம் வருடாந்தர மழைக்காலத்திற்கான முக்கிய பங்களிப்பாகும். இந்த மாவட்டம் முக்கிய பருவ நிலை மழை பொருத்து வளர்ச்சி உள்ளது. மழை பெய்யாத காலங்களில் வறட்சி நிலவுகிறது. மழையளவு காலம், இயல்பாக இருக்கும் போது, 1213.3 மி.மீ அளவும், ஒட்டுமொத்த அசல் மழையளவு 1133.0 மி.மீ ஆகவும் இருக்கிறது.

சுற்றுலா

காஞ்சிபுரம் மாவட்டம் கோயில் நகரமென்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் விளக்கும் நகரமாக விளங்குகின்றது. பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மாமல்லபுர கற்கோயில்கள் தமிழர்களின் கலை நுணுக்கத்தை பறைசாற்றும்படியாக அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் பிறந்த இடம். வைஷ்ணவம் உருவாக காரணமான ராமானுஜர் வசிஷ்ட தத்துவத்தை தோற்றுவித்த இடம். இன்றும் வைஷ்ணவர்களின் புனித யாத்திரை தலமாகவுள்ளது. ஏகாம்பரேஸ்வரர் சிவன் கோயில், 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் ஆகியவை பெரும் பெயர் பெற்றவை. சிவனின் ருத்ர தாண்டவத்தை விளக்கும் பல்லவர்களின் கலை புகழ்பெற்ற ஒன்றாகும். மேலும் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட உலகநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், விஜயராகவ பெருமாள் கோயில், சுப்பரமணிய சுவாமி கோயில் போன்றவை வரலாற்று சிறப்பு மிக்கவையாகக் கருதப்படுகின்றன.மேலும், முட்டுக்காடு ஏரி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், அண்ணா நினைவிடம் போன்றவை சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்களாக உள்ளன.[9]

வழிபாட்டுத்தலங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. https://kancheepuram.nic.in/ta/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/
  2. காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது
  3. தமிழகத்தின் 37-ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு உதயம்: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைப்பு
  4. History of Kanchipuram Archived 2006-05-18 at the வந்தவழி இயந்திரம்.
  5. Madhavan, D. (20 December 2012). "National Institute of Siddha modifies expansion plan". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/national-institute-of-siddha-modifies-expansion-plan/article4218676.ece. பார்த்த நாள்: 23 Dec 2012.
  6. Kancheepuram District : Census 2011 data
  7. மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு
  8. https://kancheepuram.nic.in/about-district/
  9. https://www.trawell.in/itineraries/chennai/one-day-trip/must-visit-of-kanchipuram

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.