திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் திருவண்ணாமலை ஆகும்.
திருவண்ணாமலை மாவட்டம் TIRUVANNAMALAI DISTRICT திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
திருவண்ணாமலை மாவட்டம் அமைந்துள்ள இடம் | |
நாடு | |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
நிர்மாணித்தவர் | தமிழ்நாடு அரசு |
மண்டலம் | தொண்டை நாடு |
அரசு | |
• வகை | மாவட்டம் |
• Body | திருவண்ணாமலை மாவட்டம் |
• பெரிய நகரம் | திருவண்ணாமலை |
• மக்களவைத் தொகுதிகள் | திருவண்ணாமலை, ஆரணி |
• சட்டமன்றத் தொகுதிகள் | ஆரணி, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், போளூர், திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு, |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
• வட்டங்கள் | திருவண்ணாமலை, ஆரணி, தண்டராம்பட்டு, செங்கம், கலசப்பாக்கம் சமுனாமரத்தூர், போளூர், சேத்துப்பட்டு, கீழ்பெண்ணாத்தூர், வந்தவாசி, செய்யாறு, வெம்பாக்கம் |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 6,188 |
ஏற்றம் | 171 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 24,64,875 |
• தரவரிசை | 4வது |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | ஆரணி - TN97, திருவண்ணாமலை - TN25 |
இதரப் பெரிய நகரம் | ஆரணி, செங்கம் |
வருவாய் கோட்டங்கள் | ஆரணி, திருவண்ணாமலை, செய்யாறு |
ஊராட்சி ஒன்றியம் | ஆரணி, திருவண்ணாமலை, ஆரணி மேற்கு, அனக்காவூர், தண்டராம்பட்டு, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், புதுப்பாளையம், துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம், போளூர், சவ்வாதுமலை, பெரணமல்லூர், தெள்ளாறு, செய்யாறு, சேத்துப்பட்டு, வெம்பாக்கம், வந்தவாசி |
பேரூராட்சிகள் | 10 |
ஊராட்சிகள் | 850 |
நகராட்சிகள் | ஆரணி, திருவத்திபுரம்(செய்யாறு), வந்தவாசி, திருவண்ணாமலை, தாமரைக்குளம், செங்கம் |
காவல் துறைக் கண்காணிப்பாளர் | ஏ.ஜி. பாபு |
இணையதளம் | திருவண்ணாமலை மாவட்டம் |
வரலாறு
இந்தியாவில் முக்கிய மற்றும் பாரம்பரியமான ஆன்மீகத் சைவத்தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. தமிழ்நாட்டில் மிக அதிக பக்தர்கள் வருகைதரும்கோயில்களில் திருவண்ணாமலையும் ஒன்று. பண்டைய காலத்தில் அண்ணாமலை என்பது அடையமுடியாத மலை என்று பொருள்கொள்ளத்தக்கதாய் இருந்தது. பின்பு இம்மலையின் புனிதத்தன்மையினால் இப்பெயருடன் “திரு” என்ற அடை மொழி முன்னொட்டாக சேர்த்து திருவண்ணாமலை என்று வழங்கப்படுகிறது.அண்ணாமலை மலையும் அதன் மலைவலமும் தமிழர்களால் மிகவும் வணங்கப்பட்டு வருகிறது. கட்டக்கலையிலும், பெருவிழாக்களினாலும் திருவண்ணாமலை கோயில் மிகப் புகழ்பெற்றுள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் தீபத்திருவிழா தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர். இவை தவிர்த்து ஆரணி, தேவிகாபுரம், வந்தவாசி போன்ற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கிய கேந்திரமாக விளங்கி வந்துள்ளது. சோழர்களின் கீழ் குறுநில மன்னராக விளங்கிய சம்புவராயர்கள் பின்பு படைவீட்டை தலைமையிடமாகக் கொண்டு தனிஅரசாட்சி அமைத்து ஆண்டுவந்துள்ளார். ஆரணியின் உள்ள கோட்டை கைலாசநாதர் கோயிலும் கோட்டை பகுதிகளும் அதற்கு சாட்சியாக விளங்குகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் அன்றைய வடஆற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிந்து 1989 ஆம் அண்டு செப்டம்பர் 30 தேதி முதல் இயங்கிவருகிறது.1989 ஆண்டு வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் மற்றும் வடஆற்காடு வன்னியர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம் வன்னிய மன்னன் சம்புராயர் என்று இருந்த பெயரை 1989 வட ஆற்காடு மாற்றியது தமிழக அரசு. பின்னர் 1996 ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது.[2]
புவியியல்
திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டத்தினாலும், வடக்கே வேலூர் மாவட்டத்தினாலும், மற்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தினாலும், தெற்கே விழுப்புரம் மாவட்டத்தினாலும் மற்றும் மேற்கே தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களாலும் சூழப்பெற்ற 6188 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட 28 வது மாவட்டமாகும்.
மக்கள் வகைப்பாடு
6,188 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 2,464,875 ஆகும். அதில் ஆண்கள் 1,235,889 ஆகவும்; பெண்கள் 1,228,986 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 12.75% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 930 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 398 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 83.11 ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 272,569 ஆகவுள்ளனர்.[3]
மாவட்ட நிர்வாகம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் திருவண்ணாமலையின் புறநகர் பகுதியான வேங்கிக்கால் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
மாவட்ட வருவாய் நிர்வாகம்
இம்மாவட்டம் மூன்று வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 54 உள்வட்டங்களும், 1064 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[4]
வருவாய் கோட்டங்கள்
இவற்றில் ஆரணி வருவாய் கோட்டம் மற்றும் திருவண்ணாமலை வருவாய் கோட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் வருவாய் ஈட்டித்தரும் கோட்டமாக விளங்குகிறது.[]
வருவாய் கோட்டம் மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி)
வ.எண் | வருவாய் கோட்டம் | வட்டம் | மக்கள் தொகை | வருவாய் கிராமங்கள் |
---|---|---|---|---|
1. | திருவண்ணாமலை | திருவண்ணாமலை | 409826 | 135 |
2. | கீழ்பெண்ணாத்தூர் | 169757 | 77 | |
3. | தண்டராம்பட்டு | 179559 | 63 | |
4. | செங்கம் | 280581 | 121 | |
5. | ஆரணி | ஆரணி | 294976 | 55 |
6. | போளூர் | 251655 | 111 | |
7. | கலசப்பாக்கம் | 140301 | 52 | |
8. | சமுனாமரத்தூர் | 47271 | 42 | |
9. | செய்யார் | செய்யாறு | 218188 | 131 |
10. | வந்தவாசி | 274079 | 161 | |
11. | சேத்துப்பட்டு | 146806 | 76 | |
12. | வெம்பாக்கம் | 124188 | 91 | |
வருவாய் வட்டங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
இம்மாவட்டம் 34 உறுப்பினர்கள் கொண்ட ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 18 ஊராட்சி ஒன்றியங்களையும்[5], 850 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[6]. மேலும் இம்மாவட்டம் நான்கு நகராட்சிகளையும், 10 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.[7]
ஊராட்சி ஒன்றியம்
- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்
- துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம்
- கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம்
- ஆரணி ஊராட்சி ஒன்றியம்
- ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம்
- போளூர் ஊராட்சி ஒன்றியம்
- சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம்
- சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம்
- செங்கம் ஊராட்சி ஒன்றியம்
- தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம்
- புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்
- கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்
- செய்யாறு ஊராட்சி ஒன்றியம்
- வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்
- அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம்
- வந்தவாசி ஊராட்சி ஒன்றியம்
- பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம்
- தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்
மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்
மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்
அரசியல்
இம்மாவட்டம் இரண்டு மக்களவைத் தொகுதிகளும், எட்டு சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.[8]
மக்களவைத் தொகுதிகள்
17 வது மக்களவைத் தொகுதி(2019)
தொகுதி | வேட்பாளர் | கட்சி |
---|---|---|
திருவண்ணாமலை | சி.அண்ணாதுரை | திமுக |
ஆரணி | எம்.கே.விஷ்ணுபிரசாத் | காங்கிரசு |
சட்டமன்றத் தொகுதிகள்
15-வது சட்டமன்ற தொகுதி
தொகுதி | வேட்பாளர் | கட்சி |
---|---|---|
கலசப்பாக்கம் | பன்னீர் செல்வம் | அதிமுக |
ஆரணி | சேவூர்.இராமச்சந்திரன் | அதிமுக |
திருவண்ணாமலை | எ.வ.வேலு | திமுக |
கீழ்பெண்ணாத்தூர் | கு. பிச்சாண்டி | திமுக |
வந்தவாசி | அம்பேத்குமார் | திமுக |
போளூர் | சேகரன் | திமுக |
செங்கம் | மு.பெ.கிரி | திமுக |
செய்யாறு | தூசி மோகன் | அதிமுக |
போக்குவரத்து
சாலை வசதிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தின் வழியாக சில முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கிறது.
- தேசிய நெடுஞ்சாலை 77 - புதுச்சேரி - திண்டிவனம் - திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலை
- தேசிய நெடுஞ்சாலை 234 - விழுப்புரம் - திருவண்ணாமலை - போளூர் - வேலூர் - மங்களூரு சாலை
- தேசிய நெடுஞ்சாலை 38 - கடலூர் - திருவண்ணாமலை - போளூர் - வேலூர் - சித்தூர் சாலை
- மாநில நெடுஞ்சாலை 6 - திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி - திருச்சி சாலை
- மாநில நெடுஞ்சாலை 6A - திருவண்ணாமலை - தண்டராம்பட்டு - அரூர் - சேலம் சாலை
- மாநில நெடுஞ்சாலை 42 - திருவண்ணாமலை - போளூர் - ஆரணி - செய்யாறு - காஞ்சிபுரம் சாலை
- மாநில நெடுஞ்சாலை 4 - விழுப்புரம் - செஞ்சி - சேத்துப்பட்டு - ஆரணி - ஆற்காடு - இராணிப்பேட்டை சாலை
- மாநில நெடுஞ்சாலை - வேலூர் - ஆரணி - வந்தவாசி - திண்டிவனம் - புதுச்சேரி சாலை
- மாநில நெடுஞ்சாலை 5 - திண்டிவனம் - வந்தவாசி - செய்யாறு - ஆற்காடு சாலை
- மாநில நெடுஞ்சாலை - போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - மேல்மருவத்தூர் - செய்யூர் சாலை
பேருந்து சேவைகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து வசதிக்காக 10 பேருந்து பணிமனைகள் உள்ளன.
எண் வரிசை | பணிமனை | அமைந்துள்ள இடம் |
---|---|---|
1 | திருவண்ணாமலை | காஞ்சி சாலை, திருவண்ணாமலை |
2 | திருவண்ணாமலை-2 | காஞ்சி சாலை, திருவண்ணாமலை |
3 | திருவண்ணாமலை-3 | காஞ்சி சாலை, திருவண்ணாமலை |
4 | ஆரணி | ஆற்காடு சாலை, ஆரணி |
5 | வந்தவாசி | ஆரணி சாலை, வந்தவாசி |
6 | வந்தவாசி-2 | ஆரணி சாலை, வந்தவாசி |
7 | செய்யாறு | காஞ்சிபுரம் சாலை, செய்யாறு |
8 | சேத்துப்பட்டு | விழுப்புரம் சாலை, சேத்துப்பட்டு |
9 | செங்கம் | போளூர் சாலை, செங்கம் |
10 | போளூர் | கடலூர் சாலை, போளூர் |
11 | திருவண்ணாமலை மற்றும் ஆரணி பேருந்துகள் மட்டும் | கோயம்பேடு, சென்னை |
ஆகிய பேருந்து பணிமனைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.[]
வேளாண்மை
நெல் சாகுபடி மற்றும் அரிசி பதனிடுதல் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியத் தொழில் ஆகும். பதினெட்டு சிறு அணைகள் மற்றும் 1965 ஏரிகளின் மூலம் சுமார் 112013 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யபடுகிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தனியார் நெல் மண்டிகள் மாவட்டம் பரவியுள்ளன. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் 2007 ஆம் ஆண்டில் 271411 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆரணி நகருக்கு அருகிலுள்ள அரசு நெல் அரவை ஆலை மாவட்டத்திலேயே பெரிய அரிசி ஆலை ஆகும். ஆரணி மற்றும் போளூர் வட்டங்களில் சுமார் 278 அரிசி ஆலைகள் உள்ளன. களம்பூர் பொன்னி என்னும் ஒரு வகை அரிசி இம்மாவட்டத்தின் ஆரணி அருகே உள்ள களம்பூர் என்னுமிடத்தில் தயாரிக்கப்படும் புகழ் பெற்ற அரிசி வகை ஆகும். திருவண்ணாமலை மாவட்டம் அரிசி உற்பத்தியில் முன்னயில் உள்ள மாவட்டமாகும். இங்கு உருவாகும் முதல்தரமான ரகம் என்பதால் மாநிலத்தின் பிற பகுதிக்கும் பிறமாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நெற் சாகுபடி தவிர, கரும்பு சாகுபடியும் சிறந்து விளங்குகிறது. செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, இந்தியாவின் பெரிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்று ஆகும். நெற்பயிர் தவிர்த்து கரும்பு, வாழை போன்ற நன்செய் பயிர்களும் வேர்கடலை, சோளம், கம்பு போன்ற புன்செய் பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. ஜவ்வாதுமலையில் தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு பலா, சீத்தா போன்ற பழவகைகளும் பயிரிடப்படுகின்றன. படவேடு பகுதியில் அதிக அளவு வாழை பயிரிடப்படுகிறது. மொத்த மக்கள் தொகையில் சுமார் 56 சதவீதம் விவசாயத்தை சார்ந்து வாழ்கின்றனர்.
மண் வகைமை
பெரும்பாலன மாவட்ட மண்ணானது, சிவப்பு அல்லாத சுண்ணாம்பு வகை மண் வகையாகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 2,61,040 எக்டேர் ஆகும். அத்தோடு,வண்டல் கருப்பு நிறத்திலும், சுண்ணாம்பு மண் 19,196 எக்டேர் பரப்பளவில்காணப்படுகிறது. இம்மாவட்டத்தில் நீர்ப்பாசனத்தின் முக்கிய ஆதாரமாக குளங்கள், தோண்டப்பட்ட கிணறுகள் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாகும். மொத்த மற்றும் நிகர சாகுபடி பகுதி முறையே 3, 04,929 மற்றும் 2,30,282 எக்டேர் ஆகும்.[9] நெல், நிலக்கடலை, பருப்பு வகைகள், தினை, மற்றும் கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்கள் மரவள்ளிக்கிழங்கு, காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்றவை முக்கிய பயிர்கள். இது தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் பயனடைகிறது. பொதுவான காலநிலை வெப்பமண்டலமாகும். பால் மற்றும் பட்டு வளர்ப்பு என்பது மாவட்டத்தில் வருமானம் ஈட்டும் மற்ற நடவடிக்கைகளாகும். 356எக்டேர்கள், மல்பெரி சாகுபடியின் கீழ் உள்ளன. வேளாண் வணிகங்கள் மற்றும் விவசாய பொருட்களின் ஏற்றுமதிக்கு, இந்த மாவட்டம் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
நெசவுத் தொழில்
மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய தொழில் பட்டு நெசவு ஆகும்.ஆரணி பட்டு பிரசித்தி பெற்றது ஆகும். கைத்தறி பட்டு நெசவு தவிர விசைத்தறி பருத்தி ஆடைகளும் நெய்யப்படுகின்றன.
நகரத்தில் பட்டு நெசவாளர்கள் நிபுணத்துவம் செய்யும் பட்டு புடவைகள், கைத்தறிகள்உள்ளன. அடிக்கடி பயன்படுத்தப்படும் நெசவு, என்றாலும் சமீபத்தில் இயந்திரமயமான முறைகள் போன்ற மின் தறிகள் உள்ளன. இந்தியாவின் பட்டு ஆடைகளை உற்பத்தி செய்யும் நகரம் ஆரணி பட்டு நகரம் ஆகும். ஆரணி சேலை(Arani sarees) என்பது இந்தியநாட்டில் உள்ள தமிழ்நாட்டின் ஆரணி நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் சேலை ஆகும்[1]. இந்த சேலைகளை ஆரணியில் உருவாக்கப்படுகிறது. சேலை என்பது நான்கு கெஜம் முதல் ஒன்பது கெஜம் வரை நீளமுள்ள தைக்கப்படாதத் துணி ஆகும்[2]. சாடி என்ற சமஸ்கிருத சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்ட சேலை குறித்த குறிப்புகள் ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.[3]தங்கச் சரிகை வேலைப்பாடுகள் இச்சேலையில் உள்ளது. ஆரணி சேலை உற்பத்தியில் மற்றும் விற்பனையில் ஆரணி பட்டுப் புடவைகளுக்கு 2018 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளது. ஆரணி சேலை புவிசார் குறியீடுபெற்றுள்ளது.[4]
சுற்றுலாத் தலங்கள்
மாவட்டத்தின் தலைநகரான திருவண்ணாமலை நகரம், இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்று. இந்நகரில் உள்ள அருள் மிகு அண்ணாமலையார் கோவிலும், இரமண மகரிஷி ஆசிரமமும் உலகப் புகழ் பெற்றவை. திரு அண்ணாமலை பஞ்சபூத தலங்களுள் ஒன்று. இங்கு இறைவர் நெருப்பின் வடிவில் வணங்கப் பெறுகிறார். பௌர்ணமி கிரிவலம் தமிழ்நாட்டில் புகழ் பெற்று வருகிறது ஜவ்வாது மலைத் தொடர் மற்றும் அதைச் சுற்றி உள்ள நிர்வீழ்ச்சிகள் மற்றும் வனம் சுற்றுலா மற்றும் கோடைஸ்தலமாக உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணை மற்றும் சவ்வாது மலை மலை அடிவாரத்தில் கமண்டல நாகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செண்பகத்தோப்பு அணை ஆகியவை புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். செய்யாறு நகரில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலமான வேதபுரிஸ்வரர் ஆலயம், வந்தவாசிக்கு அருகில் தென்னாங்குரிலுள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் ஆலயம், ஆரணி கோட்டை, தேவிகாபுரம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயம் மற்றும் அருள்மிகு கனககிரிஸ்வர் மலைக்கோயில், ஏரிக்குப்பம் சனீஸ்வரன் கோயில், வாழைப்பந்தல் பச்சையம்மன் கோவில், ஆரணி நகரிலுள்ள புத்திர காமேட்டீஷ்வரர் கோவில், ஆரணிக்கு அருகில் விஜய நகரில் உள்ள கோட்டை, நடுக்காட்டில் அமைந்துள்ள ஜாகிர்தார் தன் காதலிக்காக கட்டிய ஆரணி அரண்மனை மற்றும் சத்தியவிஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ஆரணி அரண்மனை மாளிகை ஆகியவை முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.
கோயில் சொத்துகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் வரும் கோயில் சொத்தின் பரப்பளவு 1967.05 ஹெக்டேர் ஆகும்.[10][11]
மேற்கோள்கள்
- "District Census Handbook : Tiruvannamalai" (PDF). பார்த்த நாள் 21 June 2017.
- https://tiruvannamalai.nic.in/about-district/
- Tiruvannamalai District : Census 2011 data
- திருவண்ணாமலை மாவட்ட வருவாய் நிர்வாகம்
- திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்
- ஊரக வளர்ச்சி அமைப்புகள்
- உள்ளாட்சி அமைப்புகள்
- Elected Representatives
- http://agritech.tnau.ac.in/govt_schemes_services/pdf/govt_schemes_nadp_dap_Tiruvannamalai.pdf
- http://tnhrce.org.in/a_reg/Tiruvannamalai/District%20Koil%20Land%20Abstract.xls
- http://tnhrce.org/areg.html