ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)

ஆரணி (ஆங்கிலம்: ARANI அல்லது ARNI) நகரம் ஆரணி பட்டு நகரம் (அ) ஆரணி அரிசி நகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, ஆரணி வட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம், ஆரணி (சட்டமன்றத் தொகுதி), ஆரணி மக்களவைத் தொகுதி, தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆரணி வருவாய் கோட்டம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், அதுமட்டுமில்லாமல் 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கூடிய தேர்வு நிலை நகராட்சியும் அமைந்துள்ளது. கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆரணி நகரம். இங்கு அமைந்துள்ள புத்திர காமேட்டீஸ்வரர் கோவில், ஆரணி பட்டு மற்றும் ஆரணி அரிசி மூலம் அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் ஆரணி நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆரணி
ARANI
பட்டு நகரம் (அ) சில்க் சிட்டி
தேர்வு நிலை நகராட்சி
அடைபெயர்(கள்): சில்க் மற்றும் ரைஸ் சிட்டி மற்றும் வேலூர் ஆரணி
ஆரணி
ஆரணி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 12.6751077°N 79.2843245°E / 12.6751077; 79.2843245
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மாகாணம்தொண்டை நாடு
சட்டமன்றத் தொகுதிஆரணி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
வருவாய் கோட்டம்ஆரணி வருவாய் கோட்டம்
நிர்மாணித்தவர் தமிழ்நாடு அரசு
அரசு
  வகைதேர்வு நிலை நகராட்சி
  Bodyஆரணி நகராட்சி
  முதலமைச்சர்திரு.எடப்பாடி.பழனிச்சாமி
  மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்
  சட்டமன்ற உறுப்பினர்திரு.சேவூர் ராமச்சந்திரன்
  மாவட்ட ஆட்சியர்திரு கே.எஸ்.கந்தசாமி, இ.ஆ.ப.
  நகராட்சித் தலைவர்திருமதி.ஆனந்தகுமாரி
பரப்பளவு[1]
  தேர்வு நிலை நகராட்சி35.64
பரப்பளவு தரவரிசை151 மீட்டர்கள்
ஏற்றம்171
மக்கள்தொகை (2011)
  தேர்வு நிலை நகராட்சி92,375
  தரவரிசை30
  நகர்ப்புறம்1,19,574
  நாட்டுப்புறம்1,75,402
இனங்கள்ஆரணிக்காரன்
மொழிகள்
  அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு632301, 632316
இந்தியாவில் தொலைபேசி எண்கள்04173
வாகனப் பதிவுTN 97
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
சென்னையிலிருந்து தொலைவு141 கி.மீ (88 மைல்)
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு64 கி.மீ (40 மைல்)
வேலூரிலிருந்து தொலைவு38 கி.மீ (24 மைல்)
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு63 கி.மீ (40 மைல்)
விழுப்புரத்திலிருந்து தொலைவு93 கி.மீ (58 மைல்)
புதுச்சேரியிலிருந்து தொலைவு120 கிமீ (75 மைல்)
பெங்களூரிலிருந்து தொலைவு241 கிமீ (150 மைல்)
இணையதளம்ஆரணி நகராட்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு காஞ்சிபுரத்திற்க்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் தஞ்சாவூருக்கு அடுத்தப்படியாக பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றது இந்த ஆரணி நகரம். ஆரணி பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றிருப்பதனால் ஆரணியை ஆரணி பட்டு நகரம் (ஆரணி சில்க் சிட்டி) எனவும் அழைப்பர். ஆரணி பட்டு சேலையானது, புவிசார் குறியீடு பெற்று தேசிய விருதும் பெற்றுள்ளது. அதேபோல் ஆரணி அரிசிக்கும் தேசிய விருது பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆரணி 30 வது பெரிய நகரமாக உள்ளது.

ஆரணி பட்டு நகரம்

இங்கு நகராட்சி நிர்வாக அலுவலகம்,ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்(TN 97), ஆரணி வருவாய் கோட்ட அலுவலகம், ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகம், ஆரணி மற்றும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் , ஆரணி பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் துறை அலுவலகம், ஆரணி மின் பகிர்மான கோட்டம் தலைமை அலுவலகம், ஆரணி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஆரணி பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி மற்றும் ஆரணி கல்வி மாவட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் ஆரணி நகரில் அமைந்துள்ளது.

ஆரணி நகரம் உருவாக்கம்

ஆரணி நகரம்
  • ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் உள்ளார். நகராட்சி தன் செயல்பாடுகளை பொது நிர்வாகம், பொறியியல், வருவாய், பொது சுகாதாரம், நகரமைப்புத் திட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்ற ஆறு துறைகளுக்கு பகிர்ந்தளித்துச் செயல்பட்டு வருகிறது. இந்த துறைகள் அனைத்தும் ஆட்சித்துறைத் தலைவரான நகராட்சி ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. நகராட்சித் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி உறுப்பினர்கள் 33 பேர் கொண்ட அமைப்பு சட்டமியற்றும் பணியை மேற்கொள்கிறது.
  • தமிழ்நாடு காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான உட்பிரிவு மூலமாக நகரின் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. நகரத்தில் உள்ள 3 காவல் நிலையங்களில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்றும் அடங்கும். மேலும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மாவட்ட குற்றவியல் பிரிவு மற்றும் குற்றப்பதிவேடுகள் பிரிவு முதலிய சிறப்புப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12.67°N 79.28°E / 12.67; 79.28 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 151 மீட்டர் (495 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஆரணி கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஆரணி (1951–1980)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.3
(95.5)
39.8
(103.6)
42.8
(109)
44.4
(111.9)
45.0
(113)
44.3
(111.7)
40.9
(105.6)
39.4
(102.9)
39.6
(103.3)
39.2
(102.6)
35.8
(96.4)
35.0
(95)
45.0
(113)
உயர் சராசரி °C (°F) 29.2
(84.6)
32.0
(89.6)
35.0
(95)
37.1
(98.8)
38.5
(101.3)
36.3
(97.3)
34.6
(94.3)
34.0
(93.2)
34.0
(93.2)
33.0
(91.4)
29.5
(85.1)
28.3
(82.9)
33.46
(92.23)
தாழ் சராசரி °C (°F) 18.2
(64.8)
19.2
(66.6)
21.3
(70.3)
24.8
(76.6)
26.3
(79.3)
26.0
(78.8)
25.1
(77.2)
24.6
(76.3)
24.1
(75.4)
22.9
(73.2)
20.8
(69.4)
19.2
(66.6)
22.71
(72.88)
பதியப்பட்ட தாழ் °C (°F) 10.2
(50.4)
12.0
(53.6)
12.1
(53.8)
13.8
(56.8)
18.1
(64.6)
19.6
(67.3)
18.8
(65.8)
18.7
(65.7)
18.7
(65.7)
15.6
(60.1)
12.1
(53.8)
9.3
(48.7)
9.3
(48.7)
பொழிவு mm (inches) 9.0
(0.354)
7.1
(0.28)
5.9
(0.232)
21.8
(0.858)
83.9
(3.303)
71.0
(2.795)
117.0
(4.606)
124.9
(4.917)
149.6
(5.89)
176.9
(6.965)
155.2
(6.11)
78.6
(3.094)
1,000.9
(39.406)
சராசரி பொழிவு நாட்கள் 0.8 0.5 0.4 1.3 4.7 5.3 6.6 7.8 7.6 9.4 7.7 3.9 56
ஆதாரம்: India Meteorological Department,[3]

அமைவிடம்

மக்கள் வகைப்பாடு

 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆரணி நகரம், 33 வார்டுகளில் இருந்து மக்கள் தொகை 63,671. ஆண், பெண் விகிதம், 1,036 பெண்களுக்கு ஒவ்வொரு 1,000 ஆண்கள் ஆகும். தேசிய சராசரியை விட 929 அதிகம், ஆனால் நீட்டிக்கப்பட்ட நகரம் உட்பட அனைத்து துணை நகர்ப்புற பகுதியில் இருந்து மக்கள் தொகை 92,375.[4]

Linguistic census
Linguistic groups Percent(%)
தமிழ்
 
71.57%
தெலுங்கு
 
13.07%
உருது
 
12.39%
கன்னடம்
 
1.01%
மலையாளம்
 
0.4%
இதர மொழி
 
0.51%



ஆரணியின் சமயங்கள் (2011)

  இந்து (89.16%)
  சைனம் (0.19%)
  மற்றவை (0.19%)

ஆறு வயதுக்கு  கீழ் 6,346 பேரும் அவர்களில் 3,200 ஆண்களும்  மற்றும் 3,146 பெண்களும் ஆவர். சராசரி கல்வியறிவு சதவிகிதம்  76.9% . இது தேசிய சராசரியை ஒப்பிடும்போது 72.99%. மொத்தம் 14889 குடும்பங்களில்  23,298 தொழிலாளர்களில், 153  பேர்பயிர், 343 பேர் முக்கிய விவசாய தொழிலாளர்கள், 2,185 பேர் வீட்டு தொழில்கள், 17,919 பேர் மற்ற தொழிலாளர்கள், 2,698 பேர்குறு தொழிலாளர்கள், 33 பேர்குறு விவசாயிகளும், 100 பேர்குறு வேளாண் தொழிலாளர்களும், 224 பேர்குறு தொழிலாளர்கள் வீட்டு தொழில்கள் மற்றும் 2,341 பிற குறு தொழிலாளர்கள்.[5] என உள்ளனர்.  2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, அரணி (எம்) இருந்தது மத வாரியாக 89.16% இந்துக்கள், 7.39% முஸ்லிம்கள், 1.8% கிரிஸ்துவர், 0.01% சீக்கியர்கள், 0.01% புத்த மதத்தினர், 1.43% சமணர்கள், 0.19% ஆவர்.[6]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1901 9,299     
1911 13,394 +44.0%
1921 14,286 +6.7%
1931 17,446 +22.1%
1941 19,668 +12.7%
1951 24,567 +24.9%
1961 31,351 +27.6%
1981 38,668 +23.3%
1991 54,881 +41.9%
2001 60,888 +10.9%
2011 92,375 +51.7%
Sources:

[]

சொற்பிறப்பியல்

பழங்காலத்தில் ஆரணி ஆரண்யம் என அழைக்கபட்டது. ஆர் என்பது அத்தி மரம். ஆரணிக்கு வடக்கே கமண்டல நாகநதி ஆறு உள்ளது. நதியும் மரமும் ஆபரணமாக உள்ளதால் ஆரணி எனப்படுகிறது.

வரலாறு

பல்லவர்களை தோற்கடித்தபின் சோழர்கள் ஆரணியை ஆட்சி செய்தனர். பிறகு விக்கிரம சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆகிய சோழ அரசர்கள் ஆண்டனர்.[சான்று தேவை]ஆரணியில் விஜயநகரப் பேரரசு ஆட்சி செய்த போது தசரா விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மன்னர் ஆட்சியின் போது விஜயநகர கூட்டரசு தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

ஆரணியிலிருந்து, பூசிமலைக்குப்பம் 12 கிலோமீட்டர் (7 மைல்) தொலைவில் உள்ளது. இங்கு ஒரு மன்னர் காலத்து அரண்மனை அமைந்துள்ளது. ஐந்தாவது திருமலை சாகிப் அங்கு அவரது காதலிக்காக கட்டிய அரண்மனை பங்களா அமைந்துள்ளது. ஒரு ஆங்கிலேய பெண்ணின் மீது கொண்ட காதலால் தனி பங்களாவை கட்டி அங்கு வாழ்ந்து வந்தார். அதன் பிறகு பிரெஞ்சு நாட்டிற்கும் நவாப் மன்னருக்கும் போர் மூண்டது. 1640 இல் ஆரணி ஜாகிர் வேதாஜி பாஸ்கர் பந்த் ஒரு மராத்தி பிராமின் வழங்கப்பட்டது. பின்னர், முதலாம் திருமலை ராவ் சாஹிப், ஐந்தாவது ஜாகிர்தார் 1751 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆரணி போரின் போது முதலாம் திருமலை ராவ் சாஹிப் இந்த போரில் இறந்தார்.பின்னர் அவரது வாரிசான முதலாம் ஸ்ரீனிவாசா ராவ் சாஹிப் ஆட்சி செய்து வந்தார். இவருக்கு இன்னொரு பெயர் ஸ்ரீனிவாச ஐயர் எனவும் அழைப்பர். அதன் பின்னர், எஸ்.வி.நகரத்தில் தலைமையிடாக கொண்டு புகழ்பெற்ற மைசூர் மகாராஜா மாலிகாய் ஆட்சி புரிந்து வந்தனர். இது தீர்வுக்கு வருகை பின் எனது ஆரணி டோடோ பட்டியலில் உள்ளது. எப்படியிருந்தாலும், பிரஞ்சு பங்களா என்று அழைக்கப்படுவது பூசிமலைக்குப்பம் காட்டில் தனித்து நிற்கிறது.பிரெஞ்சு கட்டிடக்கலை என்றால் என்னால் ஒரு தொழில்முறை கருத்தைப் பெற முடியவில்லை, இருப்பினும் இது பல பிரெஞ்சு கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டிருக்கலாம்

ஆரணி அரண்மனையின் முன்புறத்தோற்றம்

இந்த அரண்மனை பூசிமலைக்குப்பம் “பிரெஞ்சு பெண்” பற்றிய காதல் கதையையும் மற்றும் பிரெஞ்சு பங்களா என்று அழைக்கப்படும் ஆரணி ஜாகிர்தாரின் அரண்மனைகளில் ஒன்றாக இருக்கும் என்பதற்கான சான்றுகளும் கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள லத்தீன் குடும்ப குறிக்கோள் ஆகும். .

ஆரணிக் கோட்டை

தொண்டை மண்டலத்தில் பல்லவர் வரலாற்று பக்கங்களிலும், சம்புவராயர் வரலாற்று பக்கங்களிலும் தனியிடத்தை பிடித்து இருப்பது ஆரணி பகுதி..

பிற்கால சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்களாக குறுகிப்போன பல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள் படைவீட்டை தலைநகராக கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் சோழர்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக தங்கள் மூதாதையர்களின் பெருமையை நிலைநாட்ட முயன்றனர் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. இவர்களில் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் சேந்தமங்கலத்தில் சோழர் படையை வென்று 50 ஆண்டுகளுக்கும் மேல் அங்கிருந்தபடியே ஆட்சி செய்தான் என்பதும் வரலாறு. இவ்வாறு படைவீடு சாம்ராஜ்யத்துடன் இணைந்திருந்த ஆரணி, படைவீடு படிப்படியாய் தனது பெருமையை இழந்த நிலையில் விஜயநகர பேரரசின் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது.

விஜயநகர பேரரசின் வேலூர் சிற்றரசுக்கு உட்பட்ட மண்டலமாக ஆரணி விளங்கியது. ஆரணி மண்டலேஸ்வரர்கள், தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், நிர்வாகம் செய்யவும் வசதியாக கோட்டை கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்படி கட்டப்பட்டதுதான் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் அடித்தளமாக மாறிப்போயுள்ள ஆரணி கோட்டை. இந்த கோட்டைக்காக ஆரணியை அடுத்த படைவீட்டை சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. விஜயநகர பேரரசர்களின் கோட்டை கொத்தளங்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குமோ அத்தனை சிறப்பம்சங்களும் ஆரணி கோட்டையிலும் இடம்பெற்றிருந்தன. மண்டலேஸ்வரர்களுக்கான அரண்மனைகள், அதிகாரிகள், படைவீரர் குடியிருப்புகள், ஆயுத கிடங்கு, குதிரைகளுக்கான லாயம் என அனைத்து அம்சங்களுடன், சுற்றிலும் அகழியுடன் இந்த கோட்டை விளங்கியது. அதோடு சூரியகுளம், சந்திர குளம், சிம்மக்குளம் போன்ற குளங்களும் கோட்டையை ஒட்டி அமைந்தன. இதில் இரண்டு குளங்கள் மட்டுமே இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. அகழியும் தூர்ந்து ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது.

ஆரணி கோட்டை மைதானம் (அ) விளையாட்டு அரங்கம்

விஜயநகர பேரரசுக்கு பிறகு இஸ்லாமியர் வசம் சிக்கிய ஆரணி பகுதி பின்னர் மராட்டியர் வசம் சென்றது. அதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பிடியில் இது சிக்கியது. பின்னர் நடந்த ஆற்காடு நவாபு வாரிசு பூசலில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக கிளம்பிய பிரெஞ்சுப்படைக்கும், ராபர்ட் கிளைவ் தலைமையிலான கிழக்கிந்திய படைக்கும் இடையே கி.பி.1760ல் நடந்த கர்நாடக போரில் ஆற்காடு கோட்டையும், ஆரணி கோட்டையும் கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது.

அப்போது மதுரையை ஆண்ட மகமூத்கான் என்ற மருதநாயகம், ராபர்ட்கெல்லி ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனி படைக்கு ஆதரவாக ஆரணி கோட்டையை தாக்கினர். இந்த தாக்குதலில் ஆரணி கோட்டையின் பெரும் பகுதி நாசமானது. இந்த போரில் வீரமரணம் அடைந்த ராபர்ட் கெல்லி, கர்னல் வைசூப் உட்பட பலரின் நினைவாக நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டன. இதில் கெல்லியின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இப்போதும் கோட்டை மைதானத்தில் கம்பீரமாக நிற்கிறது. மற்றவர்களின் நினைவுத்தூண்கள் அருகருகே அமைந்துள்ளன. பல நினைவுத்தூண்கள் இருந்த இடங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. கிழக்கிந்திய கம்பெனியின் வசம் கோட்டை வந்த பின்னர் ஆரணியின் நிர்வாகம் முழுவதும் அவர்கள் வசமே சென்றது.

பின்னாட்களில் வட ஆற்காடு மாவட்டத்தின் அங்கமாக ஆரணி மாறி, பட்டு நெசவு, விவசாயம் என்ற இரண்டு பிரதான தொழில்களில் புகழ்பெற்று வளர்ச்சியடைய தொடங்கியது. இங்கிலாந்து ராணியின் நேரடி பார்வையில் நடந்த பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது ஆரணி தாலுகா தலைநகராக பரிணமித்தது. அப்போது இதன் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களும் கோட்டைக்குள் இருந்த கட்டிடங்களில் பிரிட்டிஷாரால் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த அலுவலகங்கள் இப்போதும் அங்கு அதே கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அதோடு கோட்டை வளாகத்தில் புதிய கட்டிடங்களும் எழுப்பப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஜமீன்தார் ஒழிப்பு 1948 ல் நிறைவேற்றப்பட்டும் வரை ஜாகிர் பாஸ்கர் பந்த் வழிவந்தோரால் தலைமையில் ஆரணி நகரம் ஆட்சி தொடர்ந்தது.

தற்போது, அகழியால் சூழப்பட்ட ஒரு கோட்டை பகுதியில் உள்ள நகரம் ஆகும். இக்கோட்டை பகுதியில் வீடுகள் வன துறை, துணை சிறை, பதிவு அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், விவசாய அலுவலகம், அரசு சிறுவர்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் சுப்ரமணிய சாஸ்திரி உயர்நிலைப்பள்ளி ஆகியன அமைந்துள்ளன .

ஆரணி போர்

ஆரணி போர் (அல்லது) ஆரணி சண்டை இரண்டாம் கர்நாடக போரின் போது, டிசம்பர் 3 1751 அன்று ஆரணி என்ற இடத்தில் நடந்த போரைக் குறிக்கிறது. ராபர்ட் கிளைவ் தலைமையில் ஒரு பிரிட்டிஷ் படை ரஸா சாஹிப்பின் தலைமையின் கீழ் இருந்த ஒரு பெரிய பிரெஞ்சு-இந்தியப் படையை தோற்கடித்து.[8]

நிர்வாகம் மற்றும் அரசியல்

நகராட்சி அதிகாரிகள்
நகராட்சிஆரணி நகராட்சி
தலைவர்
ஆணையர்
தொகுதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
வட்டம்ஆரணி வட்டம்
தாசில்தார்
வருவாய் கோட்டம்ஆரணி வருவாய் கோட்டம்
வருவாய் கோட்டாட்சியர்
சட்டமன்றத் தொகுதிஆரணி (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்ற உறுப்பினர்திரு.சேவூர். இராமச்சந்திரன்
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட ஆரணி தலைமை வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகும். 1988 முதல் 2018 ஆம் ஆண்டு வரை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமாக திருவண்ணாமலை குறியீடு TN 25 மூலம் இயங்கி வந்தது. அதன் பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேவூர் ராமச்சந்திரன் அவர்களின் முயற்சியால் புதிய தலைமை வட்டார போக்குவரத்து அலுவலகம் குறியீடு TN 97 உருவாக்கப்பட்டது.. தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமையகம் ஆரணி ஆகும்.
ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

வருவாய் கோட்டம்

வருவாய் வட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஆரணி வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகம் ஆரணியில் அமைந்துள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 55 வருவாய் கிராமங்கள் உள்ளது. இந்த வட்டத்தில் 2,94,976 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வட்டத்தில் ஆரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆகிய ஒன்றியங்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த வட்டத்தில் ஆரணி நகராட்சி, கண்ணமங்கலம் பேரூராட்சி, தேவிகாபுரம் பேரூராட்சி, எஸ்.வி.நகரம் பேரூராட்சி ஆகியவை அடங்கும். []

சட்டமன்றத் தொகுதி

மக்களவைத் தொகுதி

ஆரணி மக்களவைத் தொகுதி வரைபடம்
வ.எண் தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை
1 66 போளூர் 2,34,004
2 67 ஆரணி 2,60,571
3 68 செய்யார் 2,47,565
4 63 வந்தவாசி (SC) 2,28,346
5 64 செஞ்சி 2,51,310
6 65 மயிலம் 2,12,517
14,45,781[]

பொருளாதாரம்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஆரணி நகர தொழிலாளர் பங்கு விகிதம் 35.50% ஆகும். ஆரணி வட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. அரிசி தொழிற்சாலை, பட்டுப்புடவை, விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 50 சதவீதமும் பெண்களின் பங்கு 20 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அன்றாட வேலைக்காக சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், திருச்சி போன்ற இடங்களுக்கு இங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து வேலை செய்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், ஆரணி பட்டு புடவைகளுக்கு புவிசார் குறியீடு மற்றும் தேசிய விருது பெற்றும் ஆரணி நகரில் பட்டு பூங்கா அமைக்கப்படாமல் உள்ளது. இந்த பட்டு பூங்கா அமைத்தால் ஆரணி பட்டுப் புடவை அதிகப்படியான வருவாய் ஈட்டும் நகரமாக வளரும். .

தொழில் வளம்

ஆரணியில் பட்டுச்சேலை மற்றும் அரிசிக்கு மிகவும் பெயர் பெற்றது.

ஆரணிப் பட்டுச் சேலைகள்

ஆரணியில் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகள்
ஆரணி பட்டுப்புடவைகள்
  • நகரத்தில் பட்டு நெசவாளர்கள் நிபுணத்துவம் செய்யும் பட்டு புடவைகள், கைத்தறிகள்உள்ளன. அடிக்கடி பயன்படுத்தப்படும் நெசவு, என்றாலும் சமீபத்தில் இயந்திரமயமான முறைகள் போன்ற மின் தறிகள் உள்ளன. இந்தியாவின் பட்டு ஆடைகளை உற்பத்தி செய்யும் நகரம் ஆரணி ஆகும்.
  • ஆரணி சேலை(Arani sarees) என்பது இந்தியநாட்டில் உள்ள தமிழ்நாட்டின் ஆரணி நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் சேலை ஆகும்[1]. இந்த சேலைகளை ஆரணியில் உருவாக்கப்படுவதால் ஆரணியை ஆரணி சில்க் சிட்டி (ARANI SILK CITY) எனவும் அழைப்பர்.
  • சேலை என்பது நான்கு கெஜம் முதல் ஒன்பது கெஜம் வரை நீளமுள்ள தைக்கப்படாதத் துணி ஆகும்[2]. சாடி என்ற சமஸ்கிருத சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்ட சேலை குறித்த குறிப்புகள் ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.[3]தங்கச் சரிகை வேலைப்பாடுகள் இச்சேலையில் உள்ளது.
  • காஞ்சிபுரம் திற்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றது இந்த ஆரணி பட்டு நகரம். மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது.
  • ஆரணி சேலை உற்பத்தியில் மற்றும் விற்பனையில் ஆரணி பட்டுப் புடவைகளுக்கு 2018 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளது. ஆரணி சேலை புவிசார் குறியீடுபெற்றுள்ளது.[4]

ஆரணி அரிசி

ஆரணி - திருவண்ணாமலை சாலையிலுள்ள ஒரு நெல் வயல்
ஆரணி பொன்னி அரிசி நெல் வயல்
  • ஆரணி நகரம் அரிசி, விவசாய மற்றும் நெசவு பட்டுக்கு போன்றவைக்கு புகழ்பெற்ற ஊராகும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக முக்கிய பங்களிப்புவருவாய் நகரம் ஆகும்.
  • இங்கு 250க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. மாநில அளவில் அரிசி உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தான் முதல் நகரம் ஆகும்.
  • ஆரணி அரிசி (Arni Rice) என்பது இந்திய[1]நாட்டில் உள்ள தமிழ் நாட்டைச் சேர்த்த ஓர் நகரமான ஆரணியில் தயாரிக்கப்படும் தரமான அரிசி ஆகும்.[2] இந் நகரில் நூற்றுக்கணக்கான ஆலைகள் உள்ளன. மேலும் இந் நகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மற்றும் அண்டை நாடுகளுக்கும் இவ்வரிசி விற்பனைக்கு செல்கிறது.[3] இவை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நெல் வகைகள் இங்கிருக்கும் அரிசி ஆலைகளில் அரைக்கப்படுகிறது.
  • ஆரணி பகுதியில் விளையும் நெல்லுக்கு நீராதாரமாக விளங்குவது செய்யாறு ஆறும், கமண்டல நாகநதி ஆறும் ஆகும். இவ்விரு நதிகளும் ஜவ்வாது மலையில் உற்பத்தி ஆகி ஆரணி அருகே செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையில் விளைவிக்கப்படும் நெல்லுக்கு கிடைக்கும் நீர் ஜவ்வாது மலையிலுள்ள காடுகளிலும், கனிமவளங்களிலிருந்தும் நுண் ஊட்டச் சத்துகள் கொண்டு வருவதும் ஒரு காரணமாக குறிப்பிடப்படுகிறது.இந்தப் பகுதியில் கிடைக்கும் நன்னீரில் அரிசி வேகவைக்கப்படுவதால் தமிழகத்தில் எங்கிருந்து நெல்லைப் பெற்றாலும் சுவை கூடி விடுகிறது என்பது தான் ஆரணி அரிசியின் சிறப்பு. எனவேதான் சென்னை போன்ற பெருநகரங்களில் எங்கு கிடைக்கும் ஆரணி அரிசி என்று விளம்பரப்படுத்துகின்றன.
  • கடந்த ஆகஸ்ட் மாதம் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியில் ஆரணி அரிசி முக்கிய பங்கு வகித்துள்ளது. அரிசி உற்பத்தியில் ஆரணி அரிசியானது தஞ்சாவூர் அரிசியை பின் தள்ளியுள்ளது.
  • தற்போது தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் தான் முன்னனியில் உள்ளது.அரிசி உற்பத்தியில் முன்னணி பெற்றதால் ஆரணி அரிசிக்கு ஜிம் விருதும் மற்றும் தேசிய அளவில் தேசிய விருதும் 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது.

போக்குவரத்து

ஆரணி தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கபட்டுள்ளது.

சாலை வசதிகள்

பல்வேறு நன்கு அமைக்கப்பட்ட சாலைகள் மூலம் ஆரணி‌ நகரம் இணைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் - இராணிப்பேட்டை சாலையில் உள்ள ஆற்காடு மற்றும் செஞ்சியையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண்-4 ஆரணி வழியாக செல்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்-132 மூலம் வேலூர், திருப்பதி, பெங்களூர் மற்றும் திண்டிவனம், புதுச்சேரியையும் இணைக்கிறது.

வேலூர் - புதுச்சேரி சாலை
ஆரணி - சேலம் சாலை

ஆகிய முக்கிய சாலைகள் ஆரணியை இணைக்கின்றன.ஆரணிக்கு வெளியே ஆரணியை இணைக்க சென்னை (ஆற்காடு) சாலை, சென்னை சாலை மற்றும் கடலூர் சாலை ஒரு பைபாஸ் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன.

பேருந்து வசதிகள்

தமிழ்நாட்டின் முதல் பேருந்து சேவையை ஆரணி முதல் சென்னை வரை முதல் பேருந்து சேவைத் தடத்தை 1967 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது.

ஆரணி - திருப்பூர் செல்லும் பேருந்து


ஆரணியில் பேருந்து போக்குவரத்து நிர்வாக வசதிக்காக இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை:

1.புதிய பேருந்து நிலையம் (அ) ஆரணி கோட்டை பேருந்து நிலையம்

ஆரணி கோட்டை பேருந்து நிலையம் (அ) புதியப் பேருந்து நிலையம்

2.பழைய பேருந்து நிலையம் (அ) புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (அ) பழையப் பேருந்து நிலையம்
ஆரணி - சென்னை இடையே குளிர்ச்சாதனப் பேருந்து

ஆரணி நகரிலிருந்து பிற பகுதிகளிலும், அதற்கு அப்பாலும் செல்வதற்க்கு பல பேருந்துகள் இயக்கப்படுகிறது. அவற்றில் சில:

தடம் எண் புறப்படும் இடம் சேரும் இடம் வழி
202 ஆரணி சென்னை ஆற்காடு
477 ஆரணி பெங்களூரு போளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி
135 ஆரணி காஞ்சிபுரம் கலவை, வெம்பாக்கம்
502 திருவள்ளூர் ஆரணி காஞ்சிபுரம், ஆற்காடு
217 ஆரணி வேலூர் கண்ணமங்கலம், கணியம்பாடி, அடுக்கம்பாறை
434 (TNSTC) ஆரணி கோயம்புத்தூர் போளூர், திருவண்ணாமலை, அரூர், சேலம்
434A/UD (SETC) கோயம்புத்தூர் ஆரணி சேலம், அரூர், திருவண்ணாமலை, போளூர்
435 ஆரணி திருப்பூர் போளூர், திருவண்ணாமலை, அரூர், சேலம்
432 ஆரணி ஈரோடு போளூர், திருவண்ணாமலை, அரூர், சேலம்
304 ஆரணி திருச்சி போளூர், கலசப்பாக்கம், திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர்
279 ஆரணி தாம்பரம் செய்யாறு, காஞ்சிபுரம், படப்பை
234 ஆரணி தியாகராய நகர் ஆற்காடு, பூவிருந்தவல்லி, கிண்டி, சைதாப்பேட்டை
315 ஆரணி திருவண்ணாமலை களம்பூர், போளூர், கலசப்பாக்கம்
210 ஆரணி திருவண்ணாமலை களம்பூர், போளூர், கலசப்பாக்கம்
207 ஆரணி திருவண்ணாமலை களம்பூர், போளூர், கலசப்பாக்கம்
204/UD போளூர் சென்னை களம்பூர், ஆரணி, ஆற்காடு, பூவிருந்தவல்லி
200 திருவண்ணாமலை சென்னை கலசப்பாக்கம், போளூர், ஆரணி, ஆற்காடு, பூவிருந்தவல்லி
235 திருவண்ணாமலை காஞ்சிபுரம் கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு
423 திருவண்ணாமலை சென்னை கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், பூவிருந்தவல்லி
163 திருவண்ணாமலை திருத்தணி போளூர், ஆரணி, ஆற்காடு
438 காஞ்சிபுரம் சேலம் செய்யாறு, ஆரணி, போளூர், திருவண்ணாமலை, அரூர்
444 வந்தவாசி பெங்களூரு ஆரணி, வேலூர், கிருஷ்ணகிரி
666 காஞ்சிபுரம் திருச்சி செய்யாறு, ஆரணி, போளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர்
242 செங்கம் சென்னை போளூர், ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், பூவிருந்தவல்லி
216 வேலூர் விழுப்புரம் ஆரணி, சேத்துப்பட்டு, செஞ்சி
277 திட்டக்குடி வேலூர் கடலூர், விழுப்புரம், செஞ்சி, ஆரணி
204 வேலூர் புதுச்சேரி ஆரணி, வந்தவாசி, திண்டிவனம்,
838/UD (SETC) வேலூர் தூத்துக்குடி ஆரணி, விழுப்புரம், திருச்சி
UD (SETC) வேலூர் தஞ்சாவூர் ஆரணி, விழுப்புரம்
665 வேலூர் புதுக்கோட்டை ஆரணி, விழுப்புரம்
UD (SETC) வேலூர் மயிலாடுதுறை ஆரணி, விழுப்புரம்

ரயில் போக்குவரத்து வசதிகள்

ஆரணி சாலை தொடருந்து நிலையம்

ஆரணி வழியாக ரயில்கள் இணைக்க விழுப்புரம்- காட்பாடி தொடருந்து பாதை ஆரணி சைதாபேட்டையில் அமைய வேண்டிய நிலையம் தனியார் பேருந்து நல முதலாளிகள் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளதால் ரயில் நிலையம் ஆரணி - திருவண்ணாமலை சாலையிலுள்ள களம்பூர் எனுமிடத்திற்கு மாற்றப்பட்டது.ஆரணி நகரத்திற்கு ரயில் நிலையம் ஏதும் இல்லை. ஆயினும் வணிகப் புகழ் பெற்ற நகரத்திற்கு 8 கிமீ தொலைவில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு அந்த ரயில் நிலையத்திற்கு ஆரணி சாலை தொடருந்து நிலையம் எனப் பெயரிடப்பட்டது. ஆரணி வர விரும்பும் புதிய மக்கள் இந்த இரயில் நிலையத்திலிருந்து ஆரணிக்குச் சுலபமாக செல்ல வழி வகுக்கும்.திருவண்ணாமலை நகரம் மற்றும் சந்திப்பு இரயில் நிலையங்களுக்கு அப்பால் , மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ரயில் நிலையம் ஆகும். மக்கள் பயன்பாட்டிற்கு 1889 ஆம் வருடம் திறக்கப்பட்டது.

இங்கிருந்து பெங்களூரு, எஸ்வந்த்பூர், வேலூர் - காட்பாடி, கொல்கத்தா, ஹௌரா, திருப்பதி, கடலூர், பாண்டிச்சேரி, மன்னார்குடி, மாயவரம், கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சென்னை சென்ட்ரல், அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய ஊர்களும் ரயில் சேவை உள்ளது.

அதுமட்டுமின்றி, ஆரணி நகரின் வழியாக ரயில்கள் இணைக்க ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வரை ரயில் பாதை அமைக்க கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய அரசு மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது [].

வண்டியின் பெயர் வண்டி எண் புறப்படும் இடம் சேருமிடம்
திருப்பதி விழுப்புரம் பயணிகள் வண்டி56885திருப்பதிவிழுப்புரம்
விழுப்புரம்- காரக்பூர் விரைவு வண்டி22603விழுப்புரம்திருப்பதி
விழுப்புரம் காட்பாடி பயணிகள் வண்டி56886விழுப்புரம்காட்பாடி
காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி56881காட்பாடிவிழுப்புரம்
விழுப்புரம்-திருப்பதி56882விழுப்புரம்திருப்பதி
காட்பாடி-விழுப்புரம்56883காட்பாடிவிழுப்புரம்
காட்பாடி-விழுப்புரம்56884காட்பாடிவிழுப்புரம்
புருலியா SF விரைவு வண்டி22606விழுப்புரம்புருலியா
பாமணி SF விரைவு வண்டி17407திருப்பதிமன்னார்குடி
காரக்பூர் விரைவு வண்டி22604புதுச்சேரிகாரக்பூர்
சாலுக்யா விரைவு வண்டி11005மும்பை தாதர் சென்ட்ரல்புதுச்சேரி
புதுச்சேரி-திருப்பதி வாரந்திர விரைவு வண்டி17414புதுச்சேரிதிருப்பதி
ஆரணி-கடலூர் பயணிகள் வண்டி12694ஆரணிகடலூர்
சாலுக்யா விரைவு வண்டி11006புதுச்சேரிபெங்களூரு

விமானப் போக்குவரத்து

ஆரணியில் விமான நிலையம் ஏதுமில்லை. இருந்தாலும் அருகிலுள்ள விமான நிலையங்கள் மூலம் ஆரணி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கோவில்கள் மற்றும் சிறப்புகள்

திருமலை சமணர் கோயில்


கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இச்சமண வளாகம், மூன்று சமணக் குடைவரைகளும், இரண்டு சமணக் கோயில்களும் கொண்டது. 12ம் நூற்றாண்டில், இச்சமணக் கோயிலில் தீர்த்தங்கரரான நேமிநாதரின் 16 மீட்டர் உயரச் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆரணியிலிருந்து திருவண்ணாமலைச் செல்லும் சாலையில் இச்சமணக் கோயில் வளாகம் உள்ளது.

படவேடு ரேணுகாம்பாள் கோயில்

படவேடு ரேணுகாம்பாள் கோயில்

ஆரணி அருகே படவேடு ரேணுகாம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது.இது மிக முக்கியமான சக்தி ஸ்தலங்களில் ஒன்றாகும் . வருடந்தோறும் ஆடி மாதத்தில் 7 வெள்ளிக்கிழமைகளில் மிகவும் பெரிய அளவில் திருவிழா நடைபெறும். இந்த கோயிலுக்கு செல்ல ஆரணியிலிருந்து ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை பேருந்து வசதிகள் உள்ளது.

புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம்

அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவர்த்திக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லை. தனக்குப் பின்னர் ராஜ்ஜியத்தை ஆள்வதற்கு வாரிசு இல்லாததால் மிகவும் கவலையில் ஆழ்ந்தார் மன்னர். குழந்தைப் பேறுக்கு வழி சொல்லுமாறு தம் குலகுரு வசிஷ்டரிடம் அறிவுரை கேட்டார். அவரோ "புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் புத்திரப் பேறு உண்டாகும்' என்று ஆலோசனை கூறினார்.

கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் உள்ள புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம்

அதனை ஏற்ற தசரதச் சக்ரவர்த்தி யாகம் செய்ய தகுந்த இடத்தைக் கூறுமாறு வசிஷ்டரிடம் வேண்டினார். வசிஷ்டரும் ஓர் இடத்தைக் கூற, அங்கே சிவபெருமானை பிரதிஷ்டை செய்து, புத்திரகாமேஷ்டி யாகம் மேற்கொண்டார். அந்த யாகத்தின் பலனாக தசரதருக்கு நான்கு புத்திரர்கள் பிறந்தனர். அதன்பின்னர் தசரதர் இந்தத் தலத்தே ஆலயம் எழுப்பி, சிவபெருமானை வழிபட்டு, அவருக்கு புத்திரகாமேட்டீஸ்வர் என்ற திருநாமம் சூட்டினார் என்று தலபுராணம் கூறுகிறது.

ஒரு முறை ஜமதக்னி முனிவரின் கமண்டலத்தில் இருந்து கீழே சிதறிய நீர், ஆற்று நீர்போல் பெருக்கெடுத்து ஓடியது. அதுவே கமண்டல நதி ஆனது. இந்த நதியின் கரையில்தான் புத்திரகாமேட்டீஸ்வரரின் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் எதிரில் மட்டும், நதி வடக்கில் இருந்து கிழக்காகத் திரும்பி பின்னர் மீண்டும் திசை திரும்பி ஓடுகிறது. தற்போது மழைக்காலங்களில் மட்டுமே பெருக்கெடுத்து ஓடும் நதியாகிவிட்டது.

இந்தத் தலத்தில், மூலவர் புத்திர காமேட்டீஸ்வரர், உற்ஸவர் சோமாஸ்கந்தர், அம்பாளின் திருப்பெயர் பெரியநாயகி. இங்கே கருவறையில் படமெடுத்தாடும் ஒன்பது தலை நாகம் குடையாகப் பிடித்திருக்க அதன் அடியில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் திருக்காட்சி அளிக்கிறார். இங்கே பெருமானுக்கு பெüர்ணமிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது சுவாமி புறப்பாடு கண்டருள்கிறார்.

அம்பாள் பெரியநாயகிக்கு தனி சந்நிதி உள்ளது. சந்நிதி தனி கொடிமரத்துடன் திகழ்கிறது. கோயிலுக்கு வெளிப்புறத்தில் தசரத மன்னருக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கே தசரதர், சக்ரவர்த்தி அலங்காரத்தில் இல்லாமல், யாகம் செய்யும் எளிய கோலத்தில் கைகளில் ருத்திராட்ச மாலை, கமண்டலம் ஆகியவற்றோடு முனிவர் போல் காட்சி தருகிறார். உற்ஸவ நாட்களில் இவருக்கும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

குழந்தை பாக்கியம் பெற: திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாமல் வருத்தம் கொண்டவர்கள், இங்கே புத்திர காமேட்டீஸ்வரரை நம்பிக்கையுடன் வழிபட, விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கே தசரதச் சக்ரவர்த்தியே யாகம் செய்து புத்திர பாக்கியம் பெற்றார் என்பதால், இந்தத் தலத்தின் இறைவன் குழந்தை பாக்கியம் அருளும் ஈசனாகத் திகழ்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதற்கான சிறப்பு வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். வீட்டில் மழலைச் சத்தம் கேட்க வேண்டும் என்ற மனம் நிறைந்த ஆசையுடனும் வேண்டுதலுடனும், ஏழு திங்கள் கிழமைகள் விரதம் இருக்கின்றனர். விரதம் மேற்கொள்ளும் ஆறு வாரங்களுக்கும் குழந்தைகளுக்கு அன்னம் அளித்து, விரதம் இருந்து பின்னர் தாங்கள் அன்னம் உண்டு வழிபாட்டை மேற்கொள்கின்றனர். பின்னர் ஏழாவது வார திங்கள் கிழமையில் புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளிப் பூ சாற்றி, கோயிலில் உள்ள பவள மல்லி மாலை அணிவித்து, வெண்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுகின்றனர்.

ஆனி மாத பெளர்ணமி தினத்தில் சிவபெருமானுக்கு 11 சிவாச்சாரியர்கள், புத்திர காமேஷ்டி யாகம் செய்கின்றனர். இதிலும் அன்பர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனைகளை மேற்கொள்ளுகின்றனர்.

ஜாதகத்தில் புத்திர பாக்கிய ஸ்தானமான 5ஆம் இடத்தில் ராகு, கேது, செவ்வாய், சனி, சூரியன் என இருந்து தோஷம் ஏற்பட்டால், அந்த தோஷத்தினைப் போக்க, கோயிலில் உள்ள வேம்பு, ஆலம் மரத்தின் அடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். மேலும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தும் வழிபட்டு வேண்டியன நிறைவேறப் பெறுகிறார்கள். இவற்றுக்கென்று சிறப்புக் கட்டணங்களும் கோயிலில் உண்டு.

இங்கு நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகப் பெருமானும், அவருக்கு எதிரே அனுமனும் சந்நிதி கொண்டுள்ளனர். தாங்கள் செய்யத் தொடங்கும் புதிய செயலின் துவக்கத்தில், விநாயகப் பெருமானை வணங்கிச் சென்று, அச்செயல் சிறப்பாக முடிந்ததும் அனுமனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கே ஆஞ்சநேயர் கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளது சிறப்பு.

கோயில் பிராகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதி, ஸ்வர்ணவிநாயகர், அம்பிகையருடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்ரலிங்கம், காளி, வீரபத்திரர், வள்ளி தெய்வானையுடன் அறுமுகப் பெருமான், பாமா-ருக்மிணி சமேத கோபாலகிருஷ்ணர், காலபைரவர், சனீஸ்வரர், சூரியன் என அனைவருக்கும் கோஷ்டத்திலும் சந்நிதிகளிலும் காட்சி தருகின்றன .

பெரியநாயகி அம்மன் ஆலயம்

பெரியநாயகி அம்மன் ஆலயம்

பெரியநாயகி அம்மன் ஆலயம் தேவிகாபுரம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. ஆரணியிலிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை கோயிலுக்கு அடுத்த நிலையில், நீண்ட நெடிது உயர்ந்த கோபுரங்களுடனும், ஈடு இணையற்ற சிற்ப எழில் கொஞ்சும் நீண்ட நெடிய மதில்களுடனும் காட்சி தரும் மாட்சிமை உடையது இத்திருத்தலமாகும். இக்கோயிலில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் பெரியநாச்சியார் என்னும் பெரியநாயகி என்று கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. தற்போது வடமொழி சொல்லால் ப்ருகதாம்பாள் என்று வழங்குகின்றனர். தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 475 அடி நீளமும் வடக்கு தெற்காக 250 அடி அகலமும் 30 அடி உயரம் கொண்ட அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய மதில் சுவர்களுடன் விளங்குகிறது. இம்மதிலின் முகப்பில் இராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் உடையதாகவும் ஏழு நிலைகளையும் ஒன்பது கலசங்களையும் கொண்டுள்ளது. இக்கோபுரத்திற்கு எதிரே நான்கு கால்களைக் கொண்ட உயர்ந்த மண்டபம் ஒன்றுள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்குப்பக்கம் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்மண்டபம் காணப்படுகிறது. இத்தேர் மண்டபம் கிழக்கு தெற்கு ஆகிய இரு திசைகளையும் நோக்கின வகையில் அமைந்துள்ளது.


ஆலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்த லிங்கோற்பவர், நரசிம்மர், காலபைரவர், அதிகாரநந்தி, நடன மாதர், துவாரக பாலகர் போன்ற அற்புதமான சிற்பங்களைக் காணலாம். முகம்மதியர் படையெடுப்பால் இவற்றில் சில சிற்பங்கள் சிதைந்து காணப்படுகின்றன. அடுத்து மகாமண்டபத்துடன் கூடிய ஐந்து நிலைக்கோபுரம் உள்ளது. இம்மகாமண்டபம் 36 கால்களைக் கொண்டது. இம்மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி இருந்தது. அது தற்போது வடக்குப்பிரகாரத்தில் தனிக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கடந்து உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரத்தை அடையலாம். அங்கு வலப்புறம் விநாயகர் சந்நிதியும் மற்றும் நவராத்திரி கொலு மண்டபமும் உள்ளன. இந்தப்பிரகாரத்தில் தான் மிகுதியான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

ஆரணியிலுள்ள பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா

இதனைக்கடந்து அர்த்த மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கியவாறிருக்கும் நடராசமூர்த்தி உள்ளார். மேற்படி மண்டபத்தின் தென்பகுதியில் உற்சவமூர்த்திகளும் அடுத்து விநாயகர், நால்வர், சேக்கிழார் ஆகியோரின் திருவுருவங்களும் (மூலவர்கள்) முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளின் உருவங்களும் உள்ளன. இதையுங்கடந்து உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். இப்பிரகாரத்தில் விநாயகர், திருமால், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டீஸ்வரர் ஆகிய உருவங்களைக் காணலாம். இவ்வாறு அனைத்து தெய்வங்களையும் அடுத்து உள் மண்டபத்தில் மேற்கில் அமைந்த கருவறையில் அருளே வடிவான அன்னை பெரியநாயகி காட்சி தருகிறாள். அன்னை மேல் இருகரங்களில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டு நின்ற கோலத்தில் அழகுறக் காட்சியளிக்கின்றாள் .

எந்திர சனீஸ்வரர் கோயில்

ஏரிக்குப்பம் சனீஸ்வரர் கோயில், ஆரணி - படவேடு சாலையில் ஏரிக்குப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது எந்திர சனீஸ்வரர் ஆலயம். சனிபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நவக்கிரக தலங்களுள் ஒன்று, சனி பகவான் இந்த கோயிலில் சிவலிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒர முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்துள்ள திறந்த வெளி கருவறையில் சுமார் 5 அடி உயரமும் 2 அடி அகலமும் உடைய ஸ்ரீ சனீசுவர பகவானின் யந்திர நடுவில் அறுகோண வடிவமும், அதன் ஆறுமுனைகளில் திரிசூலமும் அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமன் ஆகியோரது வடிவங்களும் இடம் பெற்றுள்ளன. நெற்றி போன்ற மேற்பகுதியில் சூரியன், சந்திரன் வடிவங்களும் அவற்றின் இடையே ஒரு காகத்தின் உருவமும் உள்ளது. . நுழைவாயிலில் சனி பகவான் காகங்கள் இழுத்துச்செல்லும் ரதத்தில் அமர்ந்து இருப்பதுபோன்ற சிற்பம் உள்ளது. இங்குள்ள முன்மண்டபத்தில் அனைத்து நவகிரகங்களும் அதன் வாகனங்களுடன் ஓவியமாக வரையப்பட்டுள்ளது .

அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில்

ஆரணி அருகே உள்ள முனுகப்பட்டு பச்சையம்மன் மன்னார்சாமி பழமையானது திருக்கோயில் ஆகும். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குலதெய்வக்கோயிலாக இக்கோயில் திகழ்கிறது. ஆடி மாதம் முதல் 10 திங்கட்கிழமைகளில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.. கருவறையில் அன்னை பச்சையம்மன் கருணை த்தும்பும் விழிகளுடன் நின்ற கோலத்தில் கிழக்குத் திசை நோக்கி அருள் பாலிக்கின்றாள். அவளுக்குப் பின்புறமாக அமர்ந்த கோலத்தில் அன்னையின் சுதையுருவத் திருமேனியுள்ளது.மகாமண்டபத்தில் அன்னையின் தோழிகளும் கிராம தேவைதைகளும் உள்ளனர். எழிலான கற்கோயிலாக இத்தலம் உள்ளது. வெளிப்பிரகாத்தில் காவல் தெய்வங்கள் வீற்றிருக்கின்றன .

கல்வி

ஆரணி பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி
ஆரணி பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி நுழைவு வாயில்

ஆரணி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு தனி கல்வி மாவட்டம் ஆகும். தலைமை கல்வி மாவட்ட அலுவலகம் ஆரணியில் அமைந்துள்ளது. இங்கு அரசு பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி, பள்ளிகள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரணியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை 1915 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஒரு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளது. இவற்றில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒரு நூற்றாண்டை கடந்த பள்ளியாகும். ]. அதுமட்டுமின்றி, ஆரணியில் ஒரு பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, தச்சூரில் இயங்கி வருகிறது. இது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு அரசுப் பொறியியல் கல்லூரி ஆகும்.இந்தக் கல்லூரி 2009 ஆம் ஆண்டு வரை ஆரணிக் கோட்டையில் செயல்பட துவங்கியது. கல்லூரிக்கென சொந்தக் கட்டிடம் கட்டப்பட்ட பிறகு தேவிகாபுரம் சாலையிலுள்ள தச்சூரில் செயல்படத் துவங்கியது.

ஆரணியிலுள்ள கல்வி நிலையங்கள்

  • சுப்ரமணிய  சாஸ்திரி உயர்நிலைப்பள்ளி
  • அரசுசிறுவர்கள் உயர்நிலைப்பள்ளி
  • அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி
  • சி. எஸ். ஐ பள்ளி
  • செயின்ட் மேரி உயர்நிலைப்பள்ளி
  • கண்ணம்மாள் மழலையர் ஆரம்பப்பள்ளி
  • ஏ. சி. எஸ் மேல் நிலைப்பள்ளி
  • ஆரஞ்சு சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.ஜி.சி.எஸ்.சி பள்ளி
  • பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • எய்ம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, ஆரணி[9]
  • AISECT affiliated Arni Branch IT/ITES Training Centre: MTECH Solutions, Opp RCM Church Arni.
  • A.C.S குழுமம் பொறியியல் கல்லூரி - இரும்பேடு
  • Dr.M.G.R தொழில்நுட்பக் கல்லூரி - இரும்பேடு
  • Dr.M.G.R சொக்கலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - இரும்பேடு
  • பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - குன்னத்தூர்
  • CSC - Common Service Centre/ Digital Seva Centre - Opp RCM Church. Arni.Contact VLE: Mr.V. Clement Raja. (Ph.D)
  • AWERD NGO, (A Voluntary Organization working for Women, Youths and Children's with various Welfare activities, since 2000

ஆகிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆரணி நகரிலும் மற்றும் ஆரணி புறநகர் பகுதிகளிலும் அமைந்துள்ளது.

முக்கிய நபர்கள்

ஆரணியில் சில குறிப்பிட்ட முக்கிய நபர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பெயர்கள்.

படங்கள்

ஆரணி நகரில் தயாரிக்கப்படும் பட்டுப் புடவைகள்
ஆரணியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவில்
தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் காணப்படும் சிற்பம்
திருமலை சமணர் கோயில்
ஆரணியில் பட்டு நெசவு செய்யப்படும் முறை

இதனையும் காண்க

குறிப்புகள்

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). பார்த்த நாள் 21 June 2017.
  2. "Arani". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  3. "Climatological Information for arani,India". India Meteorological Department. பார்த்த நாள் 2012-12-29.
  4. "Census Info 2011 Final population totals". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India (2013). பார்த்த நாள் 26 January 2014.
  5. "Census Info 2011 Final population totals – Arani". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India (2013). பார்த்த நாள் 26 January 2014.
  6. "Population By Religious Community – Tamil Nadu" (XLS). Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India (2011). பார்த்த நாள் 13 September 2015.
  7. "Population Details". arani municipality (2011). பார்த்த நாள் 2012-12-29.
  8. Harvey p.82-83
  9. "College Website".

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.