திமிரி
திமிரி (ஆங்கிலம்:Timiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தின் ஆற்காடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
திமிரி | |
அமைவிடம் | 12°47′N 79°17′E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | வேலூர் |
வட்டம் | ஆற்காடு |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | அ. சண்முக சுந்தரம், இ. ஆ. ப. [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
16,246 (2011) • 2,511/km2 (6,503/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 6.47 சதுர கிலோமீட்டர்கள் (2.50 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/thimiri |
திமிரி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திமிரியில் இயங்குகிறது. இவ்வூரில் உள்ள பாஷாண லிங்கேஸ்வரர் கோயிலில் பாஷாணத்தால் ஆன லிங்கம் உள்ளது. இப்பேரூராட்சிக்கு அருகில் உள்ள குமரகிரி மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு காவடி எடுத்து வந்து பிராத்தனை செலுத்துவர். இங்கு முக்கியத் தொழில் விவசாயம், நெசவு, நவீன அரிசி ஆலைகள் ஆகும்.
அமைவிடம்
சென்னை – ஆரணி வழித்தடத்தில், ஆற்காட்டிலிருந்து 9 கி.மீ தொலைவில் திமிரி பேரூராட்சி அமைந்துள்ளது. இதன் மேற்கே வேலூர் 28 கிமீ; கிழக்கே ஆற்காடு 9 கிமீ; தெற்கே ஆரணி 22 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம், 32 கிமீ தொலைவில் உள்ள காட்பாடியில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
6.47 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 161 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,878 வீடுகளும், 16,246 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.76% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1024 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
ஆதாரங்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- திமிரி பேரூராட்சியின் இணையதளம்
- Timiri Population Census 2011