நாகர்கோவில்

|மாவட்ட ஆட்சியர்=பிரசாந்த் மு.வடநேரே நாகர்கோவில் (Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமும் நாகர்கோவில் ஆகும். இம்மாநகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர் நாகர்கோவில் என அழைக்கப்படுகிறது.[3] இம்மாநகரின் வழியாக பழையாறு ஓடுகிறது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக திருநெல்வேலி மாவட்டமும் கேரள மாநிலமும் அமைந்துள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழைகளால் மழை பெறும் மாவட்டமாகும்.நாகர்கோவில் மாநகரம் ஆனது தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு இயற்கை மாநகரம் (greenest city) ஆகும்.

  நாகர்கோவில் மாநகராட்சி  
நாகர்கோவில்
இருப்பிடம்: நாகர்கோவில்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°10′N 77°26′E
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப.
மாநகராட்சி தலைவர் தற்போது காலியாக உள்ளது
மக்கள் தொகை 2 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


13 மீட்டர்கள் (43 ft)

நாகர்கோவில் நகராட்சி ஆனது பிப்ரவரி 14 , 2019 அன்று தமிழக அரசால் நாகர்கோவில் மாநகராட்சியாக முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களால் தரம் உயர்த்தப்பட்டது .[4][5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8.17°N 77.43°E / 8.17; 77.43 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் பிரதிநிதிகள்

  • சட்டமன்ற உறுப்பினர்=சுரேஷ் ராஜன்
  • நாடாளுமன்ற உறுப்பினர்=வசந்தகுமார்
  • மாவட்ட ஆட்சியர்=பிரசாந்த் மு. வடநேரே

பொருளாதாரம்

மீன்வலை தயாரிப்பு வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்று. வணிக மீன் பிடிப்புக்காக உள்நாட்டுச் சந்தைகளிலும் ஏற்றுமதிச் சந்தைகளிலும் இவ்வலைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. தென்னை நார் தயாரிப்பு, பூ வணிகம், கைத்தறி நெசவு, ரப்பர் பொருள்கள் தயாரிப்பு, உணவு பதனிடுதல், ஏற்றுமதிச் சந்தைக்காக பின்னற்பட்டி தயாரிப்பு போன்ற குடிசைத் தொழில்களும் இங்கு நடைபெறுகின்றன.

கோயில்கள்

  • துவராகபதி விநாயகர் திருக்கோவில்,பரசுராமன் பெருந்தெரு
  • நாகராஜா கோவில்
  • அழகம்மன் கோவில்
  • ஸ்ரீ அற்புத வினாயகர் கோவில் மீனாட்சிபுரம்
  • மணியடிச்சான் கோவில்,அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோவில்
  • கிருஷ்ணன் கோவில்
  • இடர்தீர்த்த பெருமாள் கோவில்

வடிவீஸ்வரம்

கிறிஸ்தவ ஆலயம்

பள்ளிகள்

  • சதாவதானிசெய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி,

இடலாக்குடி.(எஸ்.எஸ்.பி)

  • ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி
  • இராணி சேது இலக்குமிபாய் அரசு மேல்நிலைப் பள்ளி(எஸ்.எல்.பி.)
  • கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி
  • ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி
  • லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளி
  • கார்மல் மேல்நிலைப் பள்ளி
  • புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி
  • கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி
  • டதி மேல்நிலைப் பள்ளி
  • தேசிக விநாயகம் தேவஸ்தானம் மேல்நிலைப் பள்ளி(டிவிடி)
  • புனித மிக்கேல் உயர்நிலை பள்ளி (வேதநகர்)

கல்லூரிகள்

  • பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி
  • தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி
  • ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி
  • அரசினர் கலைக் கல்லூரி
  • அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி
  • அரசினர் பொறியியல் கல்லூரி
  • அரசு தொழிற்பயிற்சி கல்லூரி
  • சிவந்தி ஆதித்தினார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • ‌‌‌வைகுண்டர் தொழில்நுட்பக் கல்லூரி
  • கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி
  • புனித சவேரியார் பொறியியல் கல்லூரி
  • பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி
  • மார்னிங் ஸ்டார் தொழில்நுட்பக் கல்லூரி
  • காமராஜ் தொழில்நுட்பக் கல்லூரி
  • காமராஜ் கல்வியியல் கல்லூரி *கலைவாணர் பொறியியல் கல்லூரி
  • கலைவாணர் தொழில்நுட்பக் கல்லூரி

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 51 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 59,997 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 2, 24,849 ஆகும். அதில் 109,938 ஆண்களும், 114,911 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 95% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,045 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20241 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,000 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,427 மற்றும் 381ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 61.06%, இசுலாமியர்கள் 8.89%, கிறித்தவர்கள் 29.94% மற்றும் பிறர் 0.11% ஆகவுள்ளனர்.[7]

கோயில்கள்

இதன் அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவில். நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா எனும் கோவிலின் பெயராலே இவ்வூருக்கு நாகர்கோவில் எனும் பெயர் வந்தது. இக்கோவில் சமணர்களால் கட்டப்பட்டது.மேலும் பரசுராமன் தெரு 500ஆண்டுகள் பழமையான துவராகபதி விநாயகர் திருக்கோவில் உள்ளது.

புகழ் பெற்றவர்கள்

போக்குவரத்து

பேருந்து நிலையம்

அண்ணா பேருந்து நிலையம்

குறுகிய தொலைவுப் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம்

தொலைதூரப் பேருந்துகள் இந்நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

தொடர்வண்டி நிலையம்

நாகர்கோவில் மாநகரம் இரண்டு தொடர்வண்டி நிலையங்களைக் கொண்டது,

  1. நாகர்கோவில் சந்திப்பு
  2. நாகர்கோவில் மாநகரம்

இதில் நாகர்கோவில் சந்திப்பு நிலையம் முக்கியத் தொடர்வண்டி நிலையமாகும்.


சுற்றுலாத் தலங்கள்

நாகர்கோவில் மாநகரத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

போன்றவை முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "நாகர்கோயில் - பெயர்க்காரணம் ?".
  4. நாகர்கோவில் மாநகராட்சியாகிறது
  5. CM Approved Nagarkovil Municipality into Municipal Corporation
  6. "Nagercoil". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  7. நாகர்கோவில் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.