கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் 30வது மாவட்டமாக 2004 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியின் மொத்த பரப்பளவு 5143 சதுர கிலோமீட்டர் ஆகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம்
மாவட்டம்

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிகொங்கு நாடு
தலைமையிடம்கிருட்டிணகிரி
வட்டங்கள்கிருட்டிணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, பர்கூர் வட்டம் மற்றும் சூளகிரி
அரசு
  ஆட்சியர்எஸ். பிரபாகரன் இஆப
மக்கள்தொகை (2011)[1]
  மொத்தம்18,79,809
தமிழ், தெலுங்கு, கன்னடம்
  ஆட்சி மொழிதமிழ்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.சு.எ635xxx
தொலைபேசி குறியீட்டு எண்04343
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுTN 24, TN 70[2]
பெரிய நகரம்ஓசூர்
மையம்12°31′N 78°12′E
இணையதளம்krishnagiri.nic.in

இது கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அமைவிடம்

கிருஷ்ணகிரி மாவட்டமானது கிழக்கே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், மேற்கே கர்நாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களையும், தெற்கே தர்மபுரி மாவட்டத்தையும் வரையரையாகக் எல்லையாகக் கொண்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் பெங்களூர் முதல் சென்னை வரை உள்ள தங்க நாற்கர சாலையும், கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையிலான தேசியநெடுஞ்சாலை 7, (தற்போது காஷ்மீர் வரை தேசிய நெடுஞ்சாலை எண்.44) மற்றும் கிருஷ்ணகிாி - வாலாஜா தேசிய நெடுஞ்சாலை எண்.46, கிருஷ்ணகிாி-பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை எண். 66 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர் முதல் சேலம் வரையிலான இருப்புப் பாதையும், சென்னை சென்ட்ரல், சோலையாா் பேட்டை வழியாக சேலம் செல்லும் இருப்புப் பாதையும் இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றது.

வரலாறு

கிருஷ்ணகிரி முற்காலத்தில் "எயில் நாடு" எனவும், ஓசூர் "முரசு நாடு" எனவும், ஊத்தங்கரை "கோவூர் நாடு" எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் "நவகண்டம்" எனப்படும் நடுகற்கள் இம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் கொடை வள்ளலான அதியமான் ஆட்சி செய்து வந்த இடமாகும். சேலத்தில் சில பகுதிகளும், தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றம் மைசூர் ஆகிய இடங்கள் ஒருங்கே "தகடூர் நாடு" அல்லது "அதியமான் நாடு" எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடம் தமிழகத்தின் எல்லையாகவும் இருந்து வந்துள்ளது, இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.

இப்பகுதியில் "பாரா மகால்" என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கோட்டையாகும் சையத் பாஷா மலை. இந்த கோட்டை விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டதாகும். போசள மன்னன் வீர இராமநாதன் தற்போதய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் "குந்தானி" என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், மற்றொரு மன்னனான ஜெகதேவிராயர், ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.

முதலாம் மைசூர் போரின்போது ஆங்கிலேய படைகள் கிருஷ்ணகிரி வழியாக காவேரிப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஹைதர் அலியின் படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில் ஆங்கிலேயர்கள் படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின் போது ஹைதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடக பகுதிகள் வந்தன.

" ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை"யின் படி சேலம் மற்றும் பாரா மஹால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ராபார்ட் கிளைவ் மதராஸ் மாகாணத்தின் கவர்னராக ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக கிருஷ்ணகிரி மாறியது[3].

  • மூதறிஞர் இராஜாஜி, கிருஷ்ணகிரி மாவட்டதிலுள்ள ஓசூர் நகருக்கருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர்[3].
  • திருவள்ளுவருக்கு திருவுருவம் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா ஊத்தங்கரைக்கு அருகில் உள்ள காமாட்சிபட்டியில் பிறந்தவர்.
  • கிருஷ்ணகிரியில் [200 ஆண்டுகள் பழமைவாய்ந்த(சிறப்புமிக்க) நீதிமன்றம்] மிகச்சிறப்பாகவே செயல்பட்டுவருகிறது.
  • 2500 ஆண்டு கால சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற [ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் திருத்தலம்] கிருஷ்ணகிரிக்கு மிக அருகில் மகாராசகடை என்னும் இடத்தில் மலைமீது அமைந்துள்ளது.
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

பொருளாதாரம்

இங்கு மா சாகுபடி 300,17 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய பயிர் மாங்கனி ஆகும். மாவட்டத்தில் ஆண்டுதோறும் 300,000 டன் மா உற்பத்தி ஆகிறது. மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்நகரில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசின் சாா்பாக நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான மாம்பழ ஏற்றுமதி மண்டலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது. மாம்பழப் பதப்படுத்தும் தொழிலும் அத்துடன் வளர்ந்து வருகின்றது. தற்போது ஓசூர் நகராட்சி ஒரு தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு சிப்காட் 1 மற்றும் 2 அலகுகள் உள்ளன. டைட்டன், அசோக் லேலண்ட், டி.வி.எஸ், பிாிமியா் மில் , லட்சமி மில் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பசுமைக் குடில் அமைத்து ரோஜா மலா்ச் சாகுபடி செய்வதில் ஒசூா் நகராட்சி சிறந்து விளங்குகிறது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

இம்மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 8 வருவாய் வட்டங்களையும், 29 உள்வட்டங்களையும், 661 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[4]

வருவாய் கோட்டங்கள்

வருவாய் வட்டங்கள்

  1. கிருஷ்ணகிரி
  2. ஓசூர்
  3. போச்சம்பள்ளி
  4. ஊத்தங்கரை
  5. தேன்கனிகோட்டை
  6. பர்கூர்
  7. சூளகிரி
  8. அஞ்செட்டி வட்டம்

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

இம்மாவட்டம் 1 மாநகராட்சியையும், 1 நகராட்சியையும், 6 பேரூராட்சிகளையும்[5], 10 ஊராட்சி ஒன்றியங்களையும்[6], 333 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[7]

ஊராட்சி ஒன்றியங்கள்

மக்கள் தொகையியல்

5,129 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,879,809 ஆகும். அதில் ஆண்கள் 960,232; பெண்கள் 919,577 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 2.61% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 367 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 958 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 71.46% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 78.72% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 63.91% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 217,323 ஆக உள்ளனர்.[8]

இம்மாவட்டத்தில் இந்துக்கள் 1,723,737 (91.70%); கிறித்தவர்கள் 35,956 (1.91%); இசுலாமியர்கள் 115,303 (6.13%); மற்றவர்கள் 0.25% ஆக உள்ளனர்.

இம்மாவட்டத்தில் தமிழ், கன்னடம், ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.

அரசியல்

இம்மாவட்டம் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி மற்றும், 6 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.[9]

15வது சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதி வேட்பாளர் கட்சி
ஊத்தங்கரைமனோரஞ்சிதம் நாகராஜ் அதிமுக
பர்கூர்கிருஷ்ணமூர்த்தி அதிமுக
கிருஷ்ணகிரிகே. பி. முனுசாமி அதிமுக
வேப்பனஹள்ளிடி. செங்குட்டுவன் திமுக
ஓசூர்கோபிநாத் காங்கிரஸ்
தளிடி. ராமச்சந்திரன் அதிமுக

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் விவரங்கள்

புவியியல் அமைப்பு

வடக்கே 11012’ மற்றும் 12049’ தீர்க்கரேகை முதல் கிழக்கே 77027’ மற்றும் 78038’ அட்சரேகை வரை பரவியுள்ளது.

முக்கிய புள்ளி விவரங்கள்

தட்பவெப்பநிலை

(1) சமவெளியில்

அ. அதிகபட்சம் 37.20 C

ஆ. குறைந்தபட்சம் 16.40 C

(2) மலைப்பகுதிகள்

அ. அதிகபட்சம் இல்லை

ஆ. குறைந்தபட்சம் இல்லை

9. மழையளவு (மீ.மீட்டரில்)

(1) சாதாரணமாக

அ. தென்மேற்கு பருவமழை 399.0

ஆ. வடகிழக்கு பருவமழை 289.4

(2) உண்மையாக

அ. தென்மேற்கு பருவமழை 359.1

ஆ. வடகிழக்கு பருவமழை 442.5

விவசாய பயிரிடப்பட்ட நிலங்கள்

அ. மொத்த பயிரிடப்பட்ட பரப்பு (ஹெக்டேரில்) 2,13, 748

ஆ. நிகர பயிரிடப்பட்ட பரப்பு 1,72,884

இ. ஒன்றுக்கு மேற்பட்ட பியிரிடப்பட்ட பரப்பு 40,86

முக்கிய மற்றும் பகுதி பயிர்கள் உற்பத்தி பரப்பு

பரப்பு (ஹெக்டேரில்) பரப்பு (கி.கி)

(i) நெல் 22806 4884

(ii) கம்பு மற்றும் இதர தானியங்கள் 50529

(iii) பருப்பு வகைகள் 47645

(iஎ) கரும்பு (வெல்லம் அடிப்படையில்) 656 95

(எ) நிலக்கடலை 12587 2104

(எi) எள் 905 416

(எii) பருத்தி (ஒவ்வொரு 170கிலோ சாக்கு மூட்டைகள்) 2413 502

(எiii) புளி 1362 --

(iஒ) மாங்காய் 30,017 --

(ஒ) தென்னை 13,192 --

விவசாய நிலங்கள்

அ. குத்தகை நிலங்களின் எண்ணிக்கை (2010-11) 281392

ஆ. பரப்பு ஹெக்டேரில் 2,25,410

இ. குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களின் சராசரி பரப்பு (ஹெக்டேரில்) 0.80

முக்கிய உணவுப்பயிர்கள்

நெல், ராகி, சோளம், துவரை, உளுந்து, மாங்காய், தென்னை, முட்டைகோஸ், வாழை, தக்காளி, நிலக்கடலை

பிற பயிர்கள்

மலர் சாகுபடி (ரோஜா, மல்லிகை, முல்லை, சாமந்தி, செண்டுமல்லி) , பருத்தி, காய்கறிகள் (கேரட், முட்டை கோஸ், முள்ளங்கி, வாழை, பீன்ஸ், தக்காளி, கத்தாி)

நீர்ப்பாசனம்

அ. நிகர பாசனப்பகுதிகள் (ஹெக்டேரில்)

(i) அரசு கால்வாய்கள் 858

(ii) அரசுடமையல்லாத கால்வாய்கள் --

(iii) ஏரிகள் 8192

(iஎ) ஆழ்துழை கிணறுகள் 17674

(எ) இதர கிணறுகள் 41452

மொத்த நிகர பாசன வசதிபெறும் பகுதிகள் 57268 ஹெக்டேர்

ஆ. மொத்த பரப்பு (ஹெக்டேரில்) 68301

இ. ஆறுகளின் பெயர் பெண்ணையாறு, பாம்பாறு

ஈ. ஏரியின் பெயர் பாரூர்ரா பெரிய ஏரி

கால்நடை வளர்ப்பு

அ. கால்நடை நிறுவனங்கள்

(i) கால்நடை மருத்துவமனைகள் 2

(ii) கால்நடை மருந்தகங்கள் 67

(iii) மருத்துவர் மையங்கள் 1

(iஎ) துணை மையங்கள் 22

(எ) கிராமப்புற கால்நடை மருத்துவமனைகள் 10

காடுகள்

அ. காடுகள் பரப்பு (ஹெக்டேரில்)

1. காப்பு காடுகள் 141622.2663

2. காப்பு நிலங்கள் 8345.37

3. இனம் பிரிக்கப்படாத காடுகள் 54310

நீர்தேக்கங்கள்

1. கிருஷ்ணகிரி அணைக்கட்டு நீர்த்தேக்கம்

2.சூளகிரி-சின்னாறு நீர்த்தேக்கம்

3. தங்கரை நீர்த்தேக்கம்

4. பாம்பாறு நீர்த்தேக்கம்

5. கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம்

6. பாரூர் ஏரி நீர்த்தேக்கம்

இதன் மூலம் 18,965 ஹெக்டேர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மருத்துவம் மற்றும் சுகாதாரம் (எண்ணிக்கையில்)

(i) நவீன மருத்துவம்

அ. மருத்துவமனைகள் 6

ஆ. மருந்தகங்கள் (நுளுஐ) 4

இ. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 56

ஈ. சுகாதார துணை நிலையங்கள் 239

உ. இதர மருத்துவ நிறுவனங்கள் Pர்-Nர்ளு 41

ஊ. படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகள் துனுர் (277) ூ னுனுர் (510) ஸ்ரீ 787

எ. மருத்துவர்கள் துனுர் (125) ூ னுனுர் (183) ஸ்ரீ 308

ஏ. செவிலியர்கள் துனுர் (142) ூ னுனுர் (279) ஸ்ரீ 421

(ii) இந்திய மருத்துவம்

அ. மருத்துவமனைகள் -

ஆ. மருந்தகங்கள் -

இ. ஆரம்ப சுகாதார நிலையங்கள்(மையங்கள்) 23

ஈ. படுக்கை வசதி மற்றும் மருந்தகங்களுடன் இயங்கும் மருத்துவமனைகள் --

உ. சித்தா மருத்துவர்கள் துனுர் 21

ஊ. செவிலியர்கள் --

எ. சித்தா

(iii) ஹோமியோபதி

அ. மருத்துவமனைகள் --

ஆ. மருந்தகங்கள் --

இ. ஆரம்ப சுகதார மையங்கள் 2

ஈ. மருத்துவர்கள் 2

உ. செவிலியர்கள் --

கல்வி

  • கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 10
  • பொறியியல் கல்லூரிகள் 7
  • முதன்மை ஆரம்ப பள்ளிகள் 32
  • ஆரம்ப பள்ளிகள் 1281
  • இடைநிலை பள்ளிகள் 306
  • உயர்நிலை பள்ளிகள் 169
  • மேனிலைப் பள்ளிகள் 108
  • ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 10

போக்குவரத்து

இந்த மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை குவியும் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சாலை கீழக்கண்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பிரதான மாவட்டமாக திகழ்கிறது.

நெடுஞ்சாலைகள்

1. தேசிய நெடுஞ்சாலை -7 (கன்னியாகுமரி - காஷ்மீர்)

2. தேசிய நெடுஞ்சாலை-46 (சென்னை - பெங்களூர்)

3. தேசிய நெடுஞ்சாலை-66 (பாண்டிச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூர்)

4. தேசிய நெடுஞ்சாலை-207(சர்ஜாபூர் -பாகலூர் -ஓசூர்)

5. தேசிய நெடுஞ்சாலை-219 (கிருஷ்ணகிரி - குப்பம்)

(i) சாலையின் நீளம் (கி.மீட்டரில்)

(ய) தேசிய நெடுஞ்சாலைகள் (ளுஅகயஉநன டீவு) 191

(டி) மாநில நெடுஞ்சாலைகள் 1648.818

(உ) நகர்ப்புற சாலைகள் 385.17

(ன) பஞ்சாயத்து யூனியன் சாலைகள் 519.26

(ந) நகர பஞ்சாயத்து சாலைகள் 167.34

(க) இதர சாலைகள்(வனம் வழி சாலைகள்) 3.8

(ப) மாநில தேசிய நெடுஞ்சாலைகள் 335.553

(h) அதிகபட்ச மாவட்ட சாலைகள் 262.755

(i) இதர மாவட்ட சாலைகள் 1050.71

(த) கிராம பஞ்சாயத்து சாலைகள் 3844.75

(ம) சாலையின் மொத்த நீளம் 1635.26

(ii) பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் 1455

ய. வணிக ரீதியானது 1455

டி. வணிக ர்Pதயற்றறது 40404

இருப்புப் பாதைகளின் நீளம் (கி.மீட்டரில்)

ய. பாதையின் நீளம்

(1) அகண்ட வழிப்பாதை 106

(2) மீட்டர் வழிப்பாதை --

டி. இருப்புப்பாதையின் நீளம்

(1) அகண்ட வழிப்பாதை 50

(2) மீட்டர் வழிப்பாதை --

இரயில்வே நிலையங்களின் எண்ணிக்கை 7

தகவல் தொடர்பு

i. தலைமை தபால் நிலையங்கள் 1

2. சார் அஞ்சல் நிலையங்கள் 38

3. கிளை அஞ்சல் நிலையங்கள் 263

கூட்டுறவு நிறுவனங்கள்

i. முதன்மை வேளாண் கிராமப்புற மேம்பாட்டு வங்கிகள் 3

ii. கோ-ஆப்ரேடிவ் ஐ.டி.ஐ. பர்கூர் 1

iii.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் 21

iஎ. முதன்மை வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் 120

எ. நகர்புற கூட்டுறவு வங்கிகள் 2

எi. ஊழியர்கள் சங்கங்கள் 120

எii. உயர் பாசன கூட்டுறவு சங்கங்கள் 1

எiii. ஊழியர்கள் கடைகள் 3

iஒ. வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் 4

ஒ. ஒப்பந்த தொழிலாளர் கூட்டுறவு கடைகள் 3

காவல் துறை

காவல்ப்படை

1. உள்ளுர் 957

2. ஆயுதப்படை 279

3 காவல் நிலையங்கள் (ஆண்) 30

அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 4

சிறப்பு அலகுகள் (ஆயுதப்படை உள்பட) 19

விவசாயம்

மாவட்டத்தின் விவசாயத்தில் நெல் 20,687 ஹெக்டேரிலும், கேழ்வரகு 48,944 ஹெக்டேரிலும், பயறுவகைகள் 48,749 ஹெக்டேரிலும், கரும்பு 4,078 ஹெக்டேரிலும், மாங்கனி 30,017 ஹெக்டேரிலும், தேங்காய் 13,192 ஹெக்டேரிலும், புளி 1,362 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகின்றன.

= சுற்றுலாத் தலங்கள்

கிருஷ்ணகிரி அணை பூங்கா

கிருஷ்ணகிரி அணை

கிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரியிலிருந்து 7கி.மீ தொலைவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி பாதையில் அமைந்துள்ளது. இந்த அணையினால் அணையை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

தளி

தளி கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தளி சுற்றிலும் குன்றுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருப்பதால் இது குட்டி இங்கிலாந்து என பெயர்ப்பெற்றது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.