திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் (ஆங்கிலம்: Tirupathur District) இந்திய நாடு, தமிழ்நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்ட 35-வது மாவட்டமாகும். இம்மாவட்டத்தை வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து ஆகஸ்டு 15.8.2019 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் திருப்பத்தூர் அகும். [2]
திருப்பத்தூர் மாவட்டம் TIRUPATHUR DISTRICT | |
---|---|
மாவட்டம் | |
வேலூர் மாவட்டத்துடன் ஒருங்கிணைந்த திருப்பத்தூர் மாவட்டம் | |
நாடு | |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பத்தூர் |
நிறுவப்பட்ட நாள் | 28 நவமப்ர் 2019 |
நிர்மாணித்தவர் | தமிழ்நாடு அரசு |
மண்டலம் | தொண்டை நாடு |
அரசு | |
• வகை | மாவட்டம் |
• Body | திருப்பத்தூர் மாவட்டம் |
• பெரிய நகரம் | திருப்பத்தூர் |
• மக்களவைத் தொகுதிகள் | 1 |
• சட்டமன்றத் தொகுதிகள் | 4 |
• மாவட்ட ஆட்சியர் | திரு.சிவன் அருள் [1] |
• வட்டங்கள் | 4 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 635601, 635602 |
வாகனப் பதிவு | TN 83 |
நகரங்கள் | ஆம்பூர், வாணியம்பாடி |
வருவாய் கோட்டங்கள் | 2 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 6 |
பேரூராட்சிகள் | 4 |
நகராட்சிகள் | 4 |
காவல்துறை கண்காணிப்பாளர் | திரு.விஜயகுமார் |
வரலாறு
19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது.வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது. பின்னர் வேலூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 15 ஆகஸ்டு 2019 அன்று திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.[3]புதிய திருப்பத்தூர் மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி. கே. பழனிச்சாமி முறைப்படி துவக்கி வைத்தார்.[4]
மாவட்ட நிர்வாகம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்களும், 4 வருவாய் வட்டங்களும் கொண்டது.[5]
வருவாய் வட்டங்கள்
உள்ளாட்சி அமைப்புகள்
அரசியல்
இம்மாவட்டத்தின் பகுதிகள் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ளது. மேலும் இம்மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி என 4 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டுள்ளது.