தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் 33 வது மாவட்டமாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.[4] [5] இம்மாவட்டத்தின் தலைநகரம் தென்காசி நகரம் ஆகும். புதிய இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். [6] 22 நவம்பர் 2019 அன்று இம்மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தமிழக முதல்வர் முறைப்படி துவக்கி வைத்தார்.[7][8]
தென்காசி மாவட்டம் | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
வட்டம் | கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில்,ஆலங்குளம், சிவகிரி,வீரகேரளம்புதூர்,தென்காசி , |
மாவட்ட துவக்கம் | 22 நவம்பர் 2019 [1] |
தலைமையகம் | தென்காசி |
மிகப்பெரிய நகரம் | தென்காசி |
மாநகரம் | தென்காசி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[2] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[3] |
மாவட்ட ஆட்சியர் | ஜி. கே. அருண் சுந்தர் தயாளன், இ. ஆ . ப |
சட்டமன்றம் (தொகுதிகள்) | 5 (5) |
மொழிகள் | தமிழ் |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தட்பவெப்பம் வெப்பநிலை |
• 37 °C (99 °F) |
குறியீடுகள்
|
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[9]
வருவாய் கோட்டங்கள்
- தென்காசி
- சங்கரன்கோவில்
வருவாய் வட்டங்கள்
நகராட்சிகள்
பேரூராட்சிகள்
ஊராட்சி ஒன்றியங்கள்
இம்மாவட்டம் 9 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.
அரசியல்
தென்காசி மாவட்டம் தென்காசி மக்களவைத் தொகுதியும் மற்றும் கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம் என 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.
ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்
- தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
- சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
- குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
- குற்றாலம்
- பண்பொழி திருமலைமுருகன் கோவில்
- இலஞ்சி குமரன் கோவில்
- இலத்தூர் சனீஸ்வரன் ஆலயம்
- புளியரை தட்சிணாமுர்த்தி ஆலயம்
நீர்த்தேக்கங்கள்
- ராமநதி
- கடனாநதி
- குண்டாறு
- அடவிநயினார்
- கருப்பாநதி
- மோட்டை
அருவிகள்
- பேரருவி
- பழைய குற்றால அருவி
- சிற்றருவி
- ஐந்தருவி
- புலியருவி
- செண்பகாதேவி அருவி உள்ளிட்ட 9 அருவிகளை கொண்டது தென்காசி மாவட்டம்.
நதிகள்
- சிற்றாறு
- குண்டாறு நதி
- ஹரிஹர நதி ஆகிய நதிகளின் பிறப்பிடமாக தென்காசி மாவட்டம் விளங்குகிறது.
மேற்கோள்கள்
- தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
- புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்
- தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்
- தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழா
- மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு
வெளி இணைப்புகள்
- தென்காசி மாவட்டம்: 17 ஆகஸ்டு 2019 அன்று கருத்துக் கேட்பு கூட்டம்
- 33 ஆண்டுக்கு பின் உருவானது தென்காசி மாவட்டம்|ஒன் இந்தியா செய்தி
- தென்காசி மாவட்ட செய்திகள்