அரியான் (நெல்)

அரியான் (Ariyaan) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, மணற்பாங்கானப் பிராந்தியமாகக் காணப்படும் ரெகுநாதபுரம் பகுதிகளில் பிரதானமாக விளைவிக்கக்கூடிய இந்நெற்பயிர், நீர்நிலைகளின் கரையோர மணல் கலந்த மண் இதற்கு மிகவும் ஏற்றது.[1]

அரியான்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
மகசூல்
2000 - 2100 கிலோ, 1 எக்டேர்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

பருவம்

நான்கு வகையான அரியான் நெற்பயிர்களும், பொதுவாக நவரை பட்டமான ஒக்டோபர் மாதம் முதல், நவம்பர் மாதம் முடிய உள்ள (ஐப்பசியில்) விதைத்து, சனவரியில் (தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.[2]

காலம்

குறுகியக் கால நெற்பயிரான இது, 120 நாட்களில் வறட்சியைத் தாங்கி மிக உயரமாக 5,½ - 6,½ அடி வரையில் வளரக்கூடிய இந்த நெல் இரகம், கடலோரப்பகுதிகளிலும், மற்றும் ஆற்றுப்படுகைகளிலும் காணப்படும் மணற்பாங்கான நிலங்களில் நன்கு செழிக்கும்.

மகசூல்

ஒரு ஏக்கருக்கு 2000 - 2100 கிலோ வரையிலும் மகசூல் கிடைப்பதாக கருதப்படும் இந்த வகை நெற்பயிருக்கு, முதல் 3 மாதகால இடையில் ஒருமுறை மழையிலேயே சிறந்த மகசூலை தரக்கூடியதாகும்.[1]

குறிப்புகள்

  • அரியான் நெல் வகையில், (அ) வெள்ளை அரியான் (ஆ) கருப்பு அரியான் (இ) சிவப்பு அரியான் மற்றும் (ஈ) வாழை அரியான் என நான்கு வகைகள் உள்ளன.
  • அரியான் நெல் வகை அறுவடையை, முதலில் மேற்புற நெற்கதிர்களையும், இரண்டாவது நடுவக வைக்கோலையும், பிறகு அடித்தண்டு என மூன்று நிலைகளில் அறுவடை செய்யப்படுகிறது.
  • இவ்வகை நெற்பயிர்கள், இலை சுருட்டுப் புழுக்களாலும, தண்டு துளைப்பான் பூசிக்களாலும் எளிதில் பாதிக்கக்கூடிய நெற்பயிர் எனக் கூறப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க


சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.