ஆடுதுறை - 15 (நெல்)

ஏ டி டீ - 15 (ADT 15) (வட்டார வழக்கு செங்குறுவை (Senkuruvai) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 4 நெல் இரகத்திலிருந்து சடுதிமாற்றம் (Mutantion) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

ஆடுதுறை - 15
ADT 15
வேளாண் பெயர்
செங்குறுவை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஏடிடீ-4 சடுதிமாற்றம்
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
4200 கிலோ எக்டேர்
வெளியீடு
1937
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1937 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 105 - 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற குறைந்த கால நெற்பயிர்கள், குறுவை பட்டத்திற்கு (பருவம்) ஏற்றதாக கூறப்படுகிறது.[1]

சாகுபடி

குட்டையாகவும் மற்றும் தடித்தும் காணப்படும் இதன் தானிய மணிகள், ஒரு எக்டேருக்கு சுமார் 4200 கிலோவரை மகசூல் தரக்கூடியது.[1] தஞ்சை, திருச்சி மற்றும் செங்கை போன்ற மாவட்டங்களில் அதிக விளைச்சல் தரும் இந்த நெற்பயிர்கள், நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் பரவலாக சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது.[2]

குறிப்புகள்

  • வெண்ணிற அரிசியுடைய நெல் இரகம்.
  • தூர் அழுகல் நோயை எதிர்க்கும் திறன்கொண்டது.[1]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-13.
  2. "Rice Knowledge Management Portal ADT 15". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2019-04-23.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.