சூரன் குறுவை (நெல்)

சூரன் குறுவை அல்லது சூரக் குறுவை (Sooran Kuruvai) பாரம்பரிய நெல் வகையைச்சார்ந்த இது, தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “வெள்ளப்பழம்” மற்றும் “கீவலுார்” போன்றப் பகுதிகளில் நன்கு வளரக் கூடிய நெல் இரகமாகும். 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், 30 - 35 நாட்கள் நாற்றங்கால் கால அளவு கொண்டதாகும். சூரன் குறுவையின் நெல் தானியமணி கரும்பழுப்பு நிறமாகவும், பெரு நயத்துடனும் காணப்படும்.[1]

சூரன் குறுவை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1200 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

பருவகாலம்

மத்திய, மற்றும் நீண்டகாலப் பருவங்களுக்கு ஏற்ற இரகமான சூரன் குறுவைக்கு, ஆகத்து மாதம் தொடங்கும் சம்பா பட்டமும், மற்றும் செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பட்டம் போன்ற பருவங்கள் ஏற்றதாகும். மேலும், இப்பட்டத்தில் (பருவத்தில்) தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. [2][1]

குறிப்புகள்

  • சூரன் குறுவையின் அரிசியில் இட்லி, மற்றும் தோசை தயாரிக்க ஏற்றதாக உள்ளது.[3]
  • சூரன் குறுவையின் ஈட்டம் (Yield), ஒரு ஏக்கருக்கு சுமார் 1200 கிலோ.[1]

இவற்றையும் காண்க

சான்றுகள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.