குறுவைக் களஞ்சியம் (நெல்)
குறுவைக் களஞ்சியம் (Kuruvai Kalanchiyam) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்தித்தில், பிரதானாமாக விளைவதாக கருதப்படும் இந்நெல் வகை, பொய்க்காத பருவமழைக் காலத்தில் ஒரு ஏக்கருக்கு சுமார் 1500 - 2000 கிலோ தானிய மகசூலும், 1 டன் அளவுக்கு வைக்கோலும் கிடைப்பதாக கூறப்படுகிறது.[1]
குறுவைக் களஞ்சியம் |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
105 - 110 நாட்கள் |
மகசூல் |
ஏக்கருக்கு 1500 - 2000 கிலோ |
தோற்றம் |
பண்டைய நெல் இரகம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
பருவகாலம்
குறுகியக்கால பயிரான 110 நாட்கள் வயதுடைய இந்நெல் இரகத்தை, செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் ( தமிழ் மதம் ஆவணியில்) விதைத்து, சனவரியில் (தமிழ் மதம் தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2]
குறிப்புகள்
- குறுவைக் களஞ்சிய நெல் வகை நேரடி விதைப்பு முறையில், ஏக்கருக்கு 40 - 50 கிலோ விதை அளவு தேவைப்படுகிறது.[1]
- சிவப்பு சித்திரை கார் அரிசி கஞ்சியை விட குறுவை களஞ்சியத்தின் அரிசிக் கஞ்சி வேறுபடுவதோடு, சமைக்கப்பட்ட சோறு இரண்டு நாட்களுக்குப் பிறகும் சிறந்த சுவையுடன் இருக்கும் என கூறப்படுகிறது.[1]
- குறுவைக் களஞ்சிய நெல் சொரசொரப்புடைய கடினமான நெல் வகையாகும்.[3]
இவற்றையும் காண்க
சான்றுகள்
- "Traditional Varieties grown in Tamil nadu - Kuruvai kalanchium". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) (© 2014 TNAU). பார்த்த நாள் 2017-02-10.
- பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்
- 10. Kuruvai Kalanchiyam
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.