போதி மரம்

போதி மரம் (Bodhi Tree) (சமசுகிருதம்: बोधि) என்பதற்கு தமிழில் அரசமரம் எனப் பொருளாகும். இந்தியாவில் பிகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் உள்ள போதி மரத்தை பௌத்தர்களால் மகாபோதி என அழைக்கப்படுகிறது. புத்தர் எந்த அரசமரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டு காலம் தியானம் செய்து ஞானம் அடைந்தாரோ, அந்த போதி (அரசமரம்) மரம் தற்போது புத்தகயாவில் போதி மண்டா எனப்படும் மகாபோதி கோயில் பாதுகாப்பாக காக்கப்பட்டு, அனைத்துலக பௌத்தர்களால் புனித மரமாக வணங்கப்படுகிறது.[1]

போதி மரத்தடியில் கி பி 800-ஆம் ஆண்டு சிற்பம்

போதி மர வரலாறு

போதிமரத்தடியில் அமைந்த போதி மந்தா விகாரத்தின் ஓவியம், ஆண்டு 1810[3]
புத்தகயாவில் உள்ள தற்போதைய போதி மரம்

புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் அரசமரத்தை மகாபோதி என்பர். [4]புத்தர் தாம் வாழ்ந்த காலத்திலேயே இப்போதி மரத்தை, பௌத்தர்களால் புனித மரமாக போற்றப்பட்டது. பேரரசர் அசோகர் இந்த போதி மரத்தை வணங்கியும், அதனைப் போற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் விழா எடுத்தார். [5] இப்போதி மரத்தை ஒட்டி போதிமந்த எனும் விகாரம் எழுப்பப்பட்டது. பௌத்த குரு சித்தகுத்தா தலைமையில் முப்பதாயிரம் பிக்குகள் இவ்விடத்தில் பௌத்தக் கல்வி பயின்றனர்.[6]

கி பி இரண்டாம் நூற்றாண்டில் இப்போதி மரத்தை புஷ்யமித்திர சுங்கன் என்ற மன்னராலும், கிபி ஆறாம் நூற்றாண்டில் சசாங்கன் என்ற மன்னராலும் இப்போதி மரம் வெட்டப்பட்டதாக கிபி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங் தமது பயணக் குறிப்புகளில் குறித்துள்ளார். இப்போதி மரம் வெட்டப்படும் பொழுதெல்லாம் மீண்டும் அதே இடத்தில் புதிய அரச மரம் பௌத்தர்களால் நடப்பட்டு வந்தது. [7]

ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் தொல்லியல் ஆய்வறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்காம் முயற்சியால் இப்போதி மரம் அமைந்த மகாபோதி கோயிலை இந்தியாவின் முதல் தொல்லியல் களமாக 1862-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வக பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.[8]

1876-இல் இப்போதி மரம் சூறாவளிக் காற்றில் அடியோடு முறிந்து விழுந்தது. அலெக்சாண்டர் கன்னிங்காம் அதே இடத்திலேயே புதிய அரச மரத்தை நட்டார்.[9][10]

மகாபோதி மரத்தின் கிளைகள்

பிரம்மஞான சபை கட்டிட வளாகத்தில் 1950-ஆம் ஆண்டில் நடப்பட்ட மகாபோதி மரத்தின் கிளை

புத்தகயா மகாபோதி கோயிலின் போதி மரத்தின் விதைகளைக் கொண்டும், போதி மரத்தின் இளங்கன்றுகளைக் கொண்டும் உலகில் பல இடங்களில் புத்தர் காலத்திலிருந்தே போதி மரங்கள் நடப்பட்டது. அவைகளில் சில;

இதனையும் காண்க

மகாபோதி கோயில்

மேற்கோள்கள்

  1. Simon Gardner, Pindar Sidisunthorn and Lai Ee May, 2011. Heritage Trees of Penang. Penang: Areca Books. ISBN 978-967-57190-6-6
  2. http:www.//westproxy.lib.hawaii.edu:2051/hottopics/lnacademic/ verb=sr&csi=235865&sr=BYLINE(David)%2Bw%2F3%2BSelf)%2BAND%2BHLEAD(Dates+for+assembly)%2BAND%2BDATE%2BIS%2B2005-12-2|title= University of Hawaii}}
  3. Bodhi Tree British Library
  4. Animisalocana cetiya
  5. "CHAPTER XVII_The Arrival Of The Relics". Mahavamsa, chap. 17, 17..
  6. "CHAPTER XXIX_The Beginning Of The Great Thupa". Mahavamsa, chap. 29, 41..
  7. J. Gordon, Melton; Martin, Baumann (2010). Religions of the World: A Comprehensive Encyclopedia of Beliefs and Practices, Second edition. ABC-CLIO, Santa Barbara. பக். 358. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1598842048. https://books.google.com/books?id=v2yiyLLOj88C.
  8. Archaeological Survey of India, Volume 1, Four Reports Made During the Years 1862-63-64-66
  9. "Buddhist Studies: Bodhi Tree". Buddhanet.net. பார்த்த நாள் 2013-08-01.
  10. Mahâbodhi, or the great Buddhist temple under the Bodhi tree at Buddha-Gaya, Alexander Cunningham, 1892: "I next saw the tree in 1871 and again in 1875, when it had become completely decayed, and shortly afterwards in 1876 the only remaining portion of the tree fell over the west wall during a storm, and the old pipal tree was gone. Many seeds, however, had been collected and the young scion of the parent tree were already in existence to take its place."
  11. "Rain-makers: The Sacred Bodhi Tree Part 2". Srimahabodhi.org (2003-04-24). பார்த்த நாள் 2013-08-01.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.