மாயாதேவி கோயில்

மாயாதேவி கோயில் (Maya Devi Temple) நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களமான லும்பினியில் அமைந்துள்ள பண்டைய பௌத்தக் கோயில் ஆகும். இக்கோயில் கௌதம புத்தரின் அன்னையான மாயாதேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் கட்டப்பட்ட இடத்தில் மாயாதேவி கௌதமபுத்தரை ஈன்றதாகக் கருதப்படுகிறது. இக்கோயில் அருகே ஒரு குளம் மற்றும் புனித தோட்டம் அமைந்துள்ளது. மாயாதேவி கோயில், கி மு மூன்றாம் நூற்றாண்டில் அசோகரால் கட்டப்பட்டது.[1]

மாயாதேவி கோயில், லும்பினி
மாயாதேவி கோயில், லும்பினி, நேபாளம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்லும்பினி
புவியியல் ஆள்கூறுகள்27.469554°N 83.275788°E / 27.469554; 83.275788
சமயம்பௌத்தம்
கட்டிடக்கலை தகவல்கள்
நிறைவுற்ற ஆண்டுகி மு 300
அளவுகள்

2013-ஆம் ஆண்டில் இக்கோயில் அருகே அகழ்வாய்வு செய்யும் போது, கி மு ஆறாம் நூற்றாண்டு காலத்திய மரக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டது.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Lumbini, the Birthplace of the Lord Buddha". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்த்த நாள் 26 November 2013.
  2. Coningham, R.A.E.; K.P. Acharya; K.M. Strickland; C.E. Davis; M.J. Manuel; I.A. Simpson; K. Gilliland; J. Tremblay et al. (2013). "The earliest Buddhist shrine: excavating the birthplace of the Buddha, Lumbini (Nepal)". Antiquity. 338 87: 1104–1123. http://antiquity.ac.uk/ant/087/ant0871104.htm. பார்த்த நாள்: 26 November 2013.

வெளி இணைப்புகள்

மேலும் படிக்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.