சதுர்மகாராஜாக்கள்

சதுர்மகாராஜாக்கள் என்பவர்கள் பௌத்தத்தில் நான்கு திக்குகளின் பாதுகாவலர்கள் ஆவார். இவர்கள் நால்வரும் முறையே நான்கு திசைகளை பாதுகாக்கின்றனர். அவர்களின் பெயர் வெவ்வேறு மொழிகளில் பின்வருமாறு அறியப்படுகிறது.

  • சமஸ்கிருதம்: சதுர்மகாராஜா (चतुर्महाराज) "நான்கு பேரரசர்கள்" or லோகபாலர்கள் "உலகை காப்பவர்கள்"
  • சீனம்: டியான்வாங் (天王) "விண்ணரசர்கள்" or ஸி டியான்வாங் (四天王) "நான்கு விண்ணரசர்கள்"
  • கொரிய.: சியோன்வாங் (천왕) "விண்ணரசர்கள்" or ஸசியான்வாங் (사천왕) "நான்கு விண்ணரசர்கள்"
  • ஜப்.: ஷிடென்னோ (四天王) "நான்கு விண்ணரசர்கள்"
  • திபெ.: rgyal.chen bzhi "நான்கு பேரரசர்கள்"
விரூபாக்‌ஷன்

இவர்கள் நால்வரும் சாதுர்மகாராஜிக(चातुर्महाराजिक) உலகில் வாழ்கின்றனர். இந்த உலகம் சுமேரு மலையின் கீழ்ப்பகுதியில் உள்ளது. தேவர்கள் வசிக்கும் ஆறு உலகங்களின் மனித உலகத்துக்கு மிகவும் அருகாமையில் உள்ளது இந்த உலகமே. சதுர்மகாராஜாக்கள் தீயதை எதிர்த்து போரிட்டு நமது உலகத்தை காப்பாற்றுபவர்கள்.

அவர்களின் வெவ்வேறு கூறுகள் பின்வருமாறு

சமஸ்கிருதம் Name குபேரன் (வைஷ்ரவணன்) விருடாகன் திருதிராஷ்டிரன் விரூபாக்‌ஷன்
பாளி பெயர் வேஸ்ஸவணன் (குவேரன்) விரூல்ஹகன் ததராட்டன் விரூபக்கன்
பொருள் “அனைத்தையும் கேட்பவர்” “He who enlarges” or “Patron of Growth” "He who maintains the state" or “Watcher of the Lands” "அனைத்தையும் பார்ப்பவர்"
நிறம் மஞ்சள் நீலம் வெள்ளை சிவப்பு
சின்னம் குடை, கீரிப்பிள்ளை வாள் பீபா(சீன குழலிசைக்கருவி) நாகம், சிறிய ஸ்தூபம் அல்லது முத்து
கனம் யக்‌ஷர் கும்பாண்டர் கந்தர்வர் நாகர்
திசை வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு

இவர்கள் நால்வரும் திராயஸ்திரிம்ச உலகத்து தேவர்களின் தலைவனான இந்திரனின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள். ஒவ்வொரு சந்திர மாதத்தின் எட்டாவது, பதினான்காவது மற்றும் பதினைந்தாவது நாட்களில் நால்வரும் நேரடியாகவோ அல்லது தூதுவர்கள் மூலமோ மனிதர்களின் உலகத்துக்கு சென்று தர்மமும் நியாயமும் எவ்வாறு உள்ளது என தெரிந்து கொள்கின்றனர். பின்பு தாங்கள் தெரிந்து கொண்டதை திராயஸ்திரிம்ச உலகத்து தேவர்களின் அவையில் நிலைமையை தெரிவிக்கின்றனர்.

இந்திரனின் உத்தரவின் படி, அசுரர்கள் தாக்குதல்களில் இருந்து திராயஸ்திரிம உலகத்தை காக்கின்றனர். மேலும் புத்தரையும் தர்மத்தையும் புத்தரை பின்பற்றுபவர்களையும் காப்பதாக இவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

சதுர்மகாராஜாக்கள் .இடமிருந்து வலம்: குபேரன், விரூடாகன், திருதிராஷ்டிரன் மற்றும் விரூபாக்‌ஷன்

வசுபந்துவின் படி, சாதுமகாராஜிக உலகில் வசிக்கும் தேவர்கள் கால் குரோசம்(சுமார் 750 அடி) உயரம் உள்ளனர். இவர்களின் ஆயுள் 500 வருடங்கள். அவர்களின் ஒரு நாள் மனித உலகத்தின் 50 வருடங்களுக்கு சமம். எனவே மனித கணக்குப்படி இவர்களின் ஆயுள் 90 லட்சம் வருடங்கள்.

விரூபாக்‌ஷன்

மேற்கோள்கள்

  • Chaudhuri, Saroj Kumar. Hindu Gods and Goddesses in Japan. New Delhi: Vedams eBooks (P) Ltd., 2003. ISBN 8179360091.
  • Nakamura, Hajime. Japan and Indian Asia: Their Cultural Relations in the Past and Present. Calcutta: Firma K.L. Mukhopadhyay, 1961. Pp. 1–31.
  • Potter, Karl H., ed. The Encyclopedia of Indian Philosophies, volume 9. Delhi: Motilal Banarsidass, 1970–. ISBN 8120819683, ISBN 8120803078 (set).
  • Thakur, Upendra. India and Japan: A Study in Interaction During 5th cent.–14th cent. A.D.. New Delhi: Abhinav Publications, 1992. ISBN 8170172896. Pp. 27–41.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.