நான்கு உயர்ந்த உண்மைகள்
நான்கு உயர்ந்த உண்மைகள், கௌதம புத்தர் தனது சீடர்களுக்கு அருளியதாகும். [1]
மனிதர்கள் மனநிறைவான வாழ்க்கையை வகுத்துக் கொள்ள, புத்தர் அருளியதே நான்கு உயர்ந்த உண்மைகள் ஆகும். அவைகள்: [2]
- துன்பம் ("துக்கம்"): பிறப்பு, நோய், முதுமை, இறப்பு மற்றும் பசி மனிதர்களால் தவிர்க்க இயலாத துன்பங்கள். மேலும் பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவைகளையும் மனிதருக்குத் துன்பத்தைத் தருபவைகள்.
- ஆசை / பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
- துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
- எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.
இந்த நான்கு உண்மைகளை விழிப்புணர்வுடன் அறிந்து, நன்னெறியுடன் வாழ்பவர்களை, அருகத நிலையை அடைந்தவர் என பௌத்தம் கூறுகிறது.[3] [4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.