தனுர் வேதம்

தனுர் வேதம், தனுஷ் என்ற சமசுகிருத சொல்லிற்கு வில் என்றும், வேதம் என்பதற்கு அறிவு என்றும் பொருள்படும். நேரடி பொருளில், இச்சொல் வில் வித்தையை குறிக்கும். இதிகாச புராணங்களில் இப்பொருளில்தான் தனுர்வேதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் தனுர் வேதம் என்ற சொல், வாள், ஈட்டி, கதாயுதம், கத்தி போன்றவைகளுடன் போரிடும் கலைகளையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

பண்டைய இந்திய இதிகாசங்களில் வில் வித்தையில், இராமன், இலக்குவன், பீஷ்மர், துரோணர் அருச்சுனன், கர்ணன் மற்றும் ஏகலைவன் புகழ் பெற்றவர்களாக விளங்கினர். கதாயுதப் போரில், பலராமன், பீமன், துரியோதனன் மற்றும் துச்சாதனன் சிறந்து விளங்கினர்.

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.