நியமம்

பதஞ்சலி முனிவர் அருளிய எண்வகை யோகங்களில் நியமம் இரண்டாம் நிலையாகும். முதல் நிலை இயமம் ஆகும். நியமம் என்பது தவம், மனத்தூய்மை, வாய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல் மற்றும் ஆத்ம நெறிகளைப் பின்பற்றுதல் ஆகும்.[1]

தூய காற்று, தூய நீர், தூய உணவுடன் நல்ல பழக்க வழக்கங்கள், நற்பண்புகள், நல் வாழ்க்கை விதிகள் முதலிய அனைத்து நல்லவைகளையும் நாள்தோறும் வாழ்க்கையில் கடைப்பிடித்து இயற்கை வாழ்வு வாழ முயலுவதாகும். சுருங்கச் சொன்னால் அனைத்து இயற்கை வழிகளையும் வாழ்வில் கடைப்பிடித்தொழுகி, இயற்கையயொடியைந்த வாழ்வு வாழ முயலுவதே நியமம் எனக் கொள்ளலாம். தூய்மை, போதுமென்ற மனம், உண்ணா நோன்பு, வேத பாராயணம் கடவுள் வழிபாடு ஆகியனவும் நியமத்தில் அடங்கும்.

இதனையும் காண்க

உசாத்துணை

விஞ்ஞான நோக்கில் நோய் நீக்கும் மூலிகைகள்: அறந்தாங்கி மருத்துவர் சுப சதாசிவம் எம்.டி,பி.எச்.டி.

வெளி இணைப்புகள்

  1. திருமந்திரம் 555-557
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.