திருவரங்கத்தமுதனார்

திருவரங்கத்தமுதனார் வைணவப் பெரியார்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் தெரிந்திலது. அமுதனார் என்பது இராமானுசர் இவருக்கு இட்ட பெயர். இவரது ஆசிரியர் கூரத்தாழ்வார்.[1] இவர் இயற்றிய நூல்கள் திருப்பதிக் கோவை மற்றும் இராமானுச நூற்றந்தாதி எனும் இரு பிரபந்தங்கள்.

திருவரங்கரத்தமுதனாருக்கு திருவரங்கத் திருக்கோவிலில் சிலை உள்ளது. [2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.