பெரிய நம்பி
ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய், அவருக்கு அடுத்தபடியாக விசிஷ்டாத்வைத சமயத்தின் ஆச்சாரியானாக மடத்தை அலங்கரித்தவர் பெரியநம்பிகள் ஆவார். இவரி மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் மகாபூரணர் எனும் இயற்பெயரில் பிறந்தார்.இராமானுசரின் ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் இவரே.
பெரியநம்பிகள் | |
---|---|
பிறப்பு | மகாபூர்ணர் திருவரங்கம்தமிழ்நாடு |
இறப்பு | காளையார் கோயில் |
ஆளவந்தாரின் சீடர்களில் ஒருவரான மாறநேரி நம்பி, தன்னுடைய ஆசிரியருக்கு இருந்த ராஜபிளவை நோயை தனக்கு வாங்கிக் கொண்டார்.[1] அதனால் இறுதிகாலத்தில் யாருமற்ற குடிசையில் மடிந்தார். அவர் தாழ்ந்த குலத்தவர் என்பதால் யாரும் இறுதிக்கடன்களை செய்ய முடியவில்லை. பெரிய நம்பி முன்வந்து மாறநேரி நம்பிக்கு இறுதிக் கடன்களை வைணவ முறைப்படி செய்தார். இதற்காக திருவரங்க வைணவர்கள் அவரை சாதியிலிருந்து தள்ளி வைத்தனர்.[1] இதனால் திருவரங்க உற்சவரான நம்பெருமாளிடம் பெரிய நம்பியின் மகள் அத்துழாய் முறையிட்டாள்.[2] நம்பெருமாள் பெரிய நம்பியின் மீது தவறில்லை எனக்கூறியமையால் அங்கிருந்த வைணவர்கள் அதனை ஏற்றனர்.
சீடர்கள்
- எம்பெருமானார் இராமானுசர்
- திருக்கச்சி நம்பிகள்
- மலைகுனிய நின்றார்
- ஆரியருள் ஸ்ரீ சடகோபதாசர்
- அணியரங்கத்தமுதனார் பிள்ளை
- திருவாய்க்குலமுடையார் பட்டர்
மற்ற பெயர்கள்
- மகாபூர்ணர்
- பராங்குச தாசர்
- பூராணாச்சாரியார்
சிறப்பு
- இராமானுசரின் ஐந்து ஆசாரியர்களில் ஒருவராய் இருந்து, ஆளவந்தார் ஆணைப்படி தானறிந்தவற்றை இராமானுசருக்கு கற்பித்தது,
- மதுராந்தகம் கோதண்டராமர் கோயிலில்(தற்போதைய ஏரிகாத்தராமர் கோயில்)இராமானுசருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்தது,
- ஆள்வந்தாரின் ஆணைப்படி இராமானுசரை திருவரங்கத்திற்கு அழைத்துவந்தது,
- ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக மடத்தை அலங்கரித்தது,
- இராமானுசரை கிருமிக்கண்ட சோழனிடமிருந்து காக்கவேண்டி கூரத்தாழ்வானோடு அவைக்கு சென்று தன் கண்களை இழந்தது,
- தாழ்த்தப்பட்ட குலத்தோராய் கருதப்பட்ட மாறனேரி நம்பிக்கு உயர்க்குடி வழக்கப்படி இறுதிக் கடன் செய்து, இறைமுன் அனைவரும் ஒன்றே எனும் வைணவத்தின் உயர்ந்த கொள்கையை இராமானுசர் மகிழும் வண்ணம் அனைவருக்கும் உணர்த்தியது.
தனியன்
வைணவத்திற்காகவும் , இராமானுசருக்காகவும் தன் கண்களையும் உயிரையும் இழந்த பெரிய நம்பிகள் தன்னுடைய நூற்றைந்தாவது அகவையில் ஜோதிஷ்குடி எனப்படும் காளையார்கோயிலில் தன் ஆச்சாரியன் திருவடி (உயிர்நீத்தல் என்பதின் வைணவச்சொல்)அடைந்தார். அவ்வாச்சாரியரின் புகழ்பாடும் வடமொழி தனியன் இதோ:
- கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா
- பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம:
ஆதாரங்கள்
- ஆன்மிகம் இதழ் 1-15 ஜூலை 2016 பக்கம் 86
- ஆன்மிகம் இதழ் 1-15 ஜூலை 2016 பக்கம் 87