நாம்தேவ்

துறவி நாம்தேவ் (29 அக்டோபர், 1270 - 1350) (மராத்தி: संत नामदेव) அல்லது பகத் நாம்தேவ் (குருமுகி: ਭਗਤ ਨਾਮਦੇਵ) ஒரு வர்க்காரித் துறவி. இவர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இங்கோலி மாவட்டத்தில் (தற்போது நர்சி நாம்தேவ் மாவட்டம்) நர்சி-பாமனி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தாம்சேட் ஒரு தையற்கலைஞர், இவருடைய தாயார் கோனாபாய். இவருடைய சமயக்கருத்துக்கள், வாழ்க்கையை வாழும் முறை பற்றியும்(गृहस्थ जीवन), திருமணத்தின் மூலமும் குடும்ப பொறுப்பு ஏற்பதின் மூலமும் ஒருவர் வாழ்க்கையில் தெளிவு பெறலாம் என்னும் கருத்தை வலியுறுத்தின.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.