கல்கி (அவதாரம்)
கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். [1]கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.
கல்கி | |
---|---|
ரவி வர்மாவின் ஓவியம் | |
தேவநாகரி | कल्कि |
வகை | திருமாலின் அவதாரங்களில் ஒன்று |
கிரகம் | பூமி |
ஆயுதம் | வாள் |
கல்கியியை பற்றிய தீர்க்கதரிசனம்
சம்பலகிராமத்தின் முக்கியஸ்தரான 'விஷ்ணுயஶஸ்' என்பவருக்கும் அவரது மனைவி 'சுமதி' என்பவருக்கும் பிறப்பார் என பாகவத புராணத்தில் அறிவிக்கபட்டுள்ளது. இங்கு சம்பல என்பதன் பொருள் அமைதி மற்றும் பாதுகாப்பு என்பதாம் அமைதியும் பாதுகாப்பும் உடையகிராமம் என்பது பொருள்.
மேலும் விஷ்ணுயஶஸ் என்பதன் பொருள்
விஷ்ணு - இறைவன்
யஶஸ் - அடிமை அல்லது அடியவர் அல்லது பக்தன் என்று தமிழில் பொருள்படும்
அதாவது விஷ்ணுவின் அடியவர் அல்லது விஷ்ணு பக்தன் என்பது பொருள்
மேலும் சுமதி என்பது அமைதியை குறிக்கும் தமிழில் சுமதி என்பதற்கு சு -நல்ல, மதி- அறிவு என்று அர்த்தப்படும்