பாஞ்சசன்யம்

'பாஞ்சசன்யம் அல்லது பாஞ்சன்னிபம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும். [1] இந்த சங்கானது கடலில் கிடைக்கும் வலம்புரி சங்கின் வகையைச் சார்ந்தாக கருதப்பெறுகிறது.[2]ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் இந்த சங்கின் அம்சமாக கருதப்பெறுகிறார். பாஞ்சசன்யம் சங்காயுதம் என்றும், பொதுவாக சங்கு என்ற பெயரிலும் அறியப்பெறுகிறது.

சங்காயுதம்

பாஞ்சஜன்யம் சப்தப்ரம்ம வடிவம்.[3]

பெயர்க்காரணம்

இந்த சங்கு பாஞ்சன் என்ற அசுரனிடம் இருந்ததாகவும் திருமால் அவனை போரில் வென்று சங்கினை பெற்றுக்கொண்டதால் பாஞ்சசன்யம் என்று பெயர் வந்தது. பஞ்ச இந்திரியங்களை அடக்குவதைக் குறிக்கவும் இப்பெயர் வழங்கப்படலாயிற்று. [4]

சிவபெருமான் தந்தமை

தலைச்சங்காடு சிவத் தலத்தில் கடுந்தவம் புரிந்து திருமால் பாஞ்சசன்ய சங்கினை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இந்த சங்கானது உலக உயிர்களை காப்பதற்காக பெறப்பட்டதாகவும், திருமாலுக்கு சங்கினை வழங்கிய காரணத்தினால் சிவபெருமான் சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்றும் அழைக்கப்பெறுகிறார். [5]


காண்க

  • தலைச்சங்காடு

ஆதாரம்

  1. http://ammandharsanam.com/magazine/Deepawali2012unicode/page021.php
  2. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=26897&Print=1
  3. ஸ்ரீமந்நாராயணீயம்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம்
  4. http://cinema.maalaimalar.com/2012/12/26141552/vishnu-mahalakshmi-worship.html
  5. http://www.thiruthalam.com/temple_detail.php?id=181
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.