நர-நாராயணன்
நர-நாராயணன் (Nara-Narayana) (சமக்கிருதம்: नर-नारायण; nara-nārāyaṇa) இந்து சமயம் கூறும் இரு தேவர்கள் ஆவார். ஆதிசேஷன் மற்றும் திருமாலின் அவதார இரட்டையர்களான நர-நாராயணர்கள், பூவுலகில் தருமத்தை நிலை நிறுத்த தோன்றினார்கள். மேலும் நர-நாராயாணத் தத்துவம், நிலையற்ற சீவாத்மாவான நரன் (மனிதன்), நிலையான, தெய்வீக பரமாத்மாவான நாராயாணனை அடைய வேண்டியதாக கருதப்படுகிறது.
நர நாராயணர்கள் | |
---|---|
தேவநாகரி | नर-नारायण |
சமசுகிருதம் | nara-nārāyaṇa |
வகை | திருமாலின் அவதாரம் |
இடம் | பத்ரிநாத் |
இந்து சமய காவியமான மகாபாரதம், கிருஷ்ணரை நாராயணனாகவும், அருச்சுனனை நரனாகவும் குறிக்கிறது. பாகவத புராணத்தில் நர-நாராயணர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. இரட்டையர்களான நர-நாராயணர்கள் பத்ரிநாத் கோயிலில் குடிகொண்டுள்ளதாக இந்துக்கள் நம்புகின்றனர்.
சுவாமிநாராயண் இயக்கத்தினரின் கோயில்களில் நர-நாராயணர்களை மூல தெய்வங்களாக வழிபடும் முறை உள்ளது. மேலும் சுவாமிநாராயணனை நாராயணனின் அவதாரமாக கருதுகின்றனர்.
மகாபாரத காவியத்தில், அருச்சுனனை நரனாகவும், கிருஷ்ணரை நாராயணனாகவும் குறிக்கப்பட்டுள்ளது.[1]
மகாபாரதம், அரி வம்சம் மற்றும் புராணங்களின் படி நரன் ஆதிசேசனின் அவதாரமாகவும்; நாராயணன் திருமாலின் அவதாரமாகவும் கருதப்படுகிறது. [2]
படக்காட்சிகள்
- 5-ஆம் நூற்றாண்டின் நரநாராயணர்கள் சிற்பம், தசாவதாரக் கோயில்
- நர-நாராயணர்கள்
- நர-நாராயணர்கள் நாரதருக்கு உபதேசித்தல்
- பத்ரிநாத் கோயிலில் நர-நாராயணர்கள்
மேற்கோள்கள்
- Ramakrishna Gopal Bhandarkar (1995). Vaisnavism Saivism and Minor Religious Systems. Asian Educational Services. பக். 238. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0122-X
- Swami Vijnanananda (2004). The Sri Mad Devi Bhagavatam: Books One Through Twelve Part 1. Kessinger Publishing. பக். 624. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7661-8167-7
- Swaminarayan Temple Cardiff - Murtis - NarNarayan Dev