நர-நாராயணன்

நர-நாராயணன் (Nara-Narayana) (சமக்கிருதம்: नर-नारायण; nara-nārāyaṇa) இந்து சமயம் கூறும் இரு தேவர்கள் ஆவார். ஆதிசேஷன் மற்றும் திருமாலின் அவதார இரட்டையர்களான நர-நாராயணர்கள், பூவுலகில் தருமத்தை நிலை நிறுத்த தோன்றினார்கள். மேலும் நர-நாராயாணத் தத்துவம், நிலையற்ற சீவாத்மாவான நரன் (மனிதன்), நிலையான, தெய்வீக பரமாத்மாவான நாராயாணனை அடைய வேண்டியதாக கருதப்படுகிறது.

நர நாராயணர்கள்
நர-நாராயணர்கள், சுவாமிநாராயணன் கோயில், அகமதாபாத், இந்தியா
தேவநாகரிनर-नारायण
சமசுகிருதம்nara-nārāyaṇa
வகைதிருமாலின் அவதாரம்
இடம்பத்ரிநாத்

இந்து சமய காவியமான மகாபாரதம், கிருஷ்ணரை நாராயணனாகவும், அருச்சுனனை நரனாகவும் குறிக்கிறது. பாகவத புராணத்தில் நர-நாராயணர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. இரட்டையர்களான நர-நாராயணர்கள் பத்ரிநாத் கோயிலில் குடிகொண்டுள்ளதாக இந்துக்கள் நம்புகின்றனர்.

சுவாமிநாராயண் இயக்கத்தினரின் கோயில்களில் நர-நாராயணர்களை மூல தெய்வங்களாக வழிபடும் முறை உள்ளது. மேலும் சுவாமிநாராயணனை நாராயணனின் அவதாரமாக கருதுகின்றனர்.

மகாபாரத காவியத்தில், அருச்சுனனை நரனாகவும், கிருஷ்ணரை நாராயணனாகவும் குறிக்கப்பட்டுள்ளது.[1]

மகாபாரதம், அரி வம்சம் மற்றும் புராணங்களின் படி நரன் ஆதிசேசனின் அவதாரமாகவும்; நாராயணன் திருமாலின் அவதாரமாகவும் கருதப்படுகிறது. [2]

படக்காட்சிகள்

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.