சுதியா நாடு

சுதியா நாடு அல்லது சுடியா நாடு (Sutiya Kingdom) (ஆட்சிக் காலம்: 1187-1673)[2]என்பது தற்கால அசாம் மற்றும் அருணாசலப் பிரதேசம் என இரண்டு மாநிலத்தின் பகுதிகளைக் கொண்டது. சுவர்ணகிரியை தலைநகராகக் கொண்டு சுதியா நாட்டை நிறுவியவர் மன்னர் பீர்பால் ஆவார். பாலப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் சடியா நகரை தலைநகராகக் கொண்டு சுதியா நாட்டை ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் ஆண்டவர்கள். சீனாவின் சிச்சுவான் மற்றும் திபெத் இனக்குழுவினரின் வழித்தோன்றல்களே சுதியா மக்கள் ஆவர்.

சுதியா நாடு
சடியா
চুতীয়া ৰাজ্য (அசாமிய மொழி)
[[காமரூபப் பேரரசு|]]
1187–1673 [[அகோம் பேரரசு|]]
தலைநகரம் சுவர்ணகிரி
(1187-1225)
இரத்தினபுரி (தற்கால மஜௌலி நகரம்
(1225-1248)
சடியா
(1248-1524)
மொழி(கள்) அசாமி, சுதியா மொழி
சமயம் இந்து சமயம், சாக்தம்[1]
அரசாங்கம் முடியாட்சி
முடியாட்சி
 -  1187 - 1210 பீர்பால் (முதல்)
 - 1522 - 1524 நித்தியபாலன் (இறுதி)
வரலாற்றுக் காலம் அசாமின் மத்தியகால வரலாறு
 - நிறுவியவர்
பீர்பால்
1187
 - கௌரிநாராயணன் காலத்தில் விரிவாக்கம் 1210 -1250
 - அகோம் - சுதியாப் போர் 1513 -17வது நூற்றாண்டு
 - சடியா முற்றுகை 17 ஏப்ரல் 1524
 - குலைவு 1673
தற்போதைய பகுதிகள் இந்தியா
Warning: Value specified for "continent" does not comply

சுதியா நாட்டின் பரப்புகள்

தற்கால அசாம் மாநிலத்தின் லக்கீம்பூர் மாவட்டம், தேமாஜி மாவட்டம், தின்சுகியா மாவட்டம், ஜோர்ஹாட் மாவட்டம், திப்ருகர் மாவட்டம், சோனித்பூர் மாவட்டம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டம், கீழ் சுபன்சிரி மாவட்டம், கீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் மற்றும் லோகித் மாவட்டங்கள் சுதியா நாட்டின் பரப்புகளாக அமைந்திருந்தன.[3]

சுதியா நாட்டின் விரிவாக்கம் (1224-1250)

சுதியா நாட்டின் பலமிக்க மன்னரான கௌரிநாராயணன் எனும் இரத்தின துவஜ பாலன் அசாமின் வடகிழக்குப் பகுதிகளை வென்று நாட்டை விரிவுபடுத்தினார்.

வீழ்ச்சி

சுதியா நாட்டின் இறுதி மன்னர் நித்தியபாலன் ஆட்சிக்காலத்தில் சுதியா நாடு கி பி 1524-இல் அகோம் பேரரசால் வீழ்ச்சி கண்டது.

ஆட்சியாளர்கள் (1187 - 1524)

  • பீர்பால் - கயாபால் 1187 - 1210
  • இரத்தினதுவஜபாலன் - கௌரிநாராயணன் 1210 - 1250
  • விஜயத்துவஜபாலன் - சிவநாராயணன் 1250 - 1270
  • விக்கிரமத்துவஜபாலன் - ஜெகத்நாராயணன் 1270- 1285
  • கௌரத்துவஜபாலன் - பிரமோநாராயணன் 1285 - 1305
  • சங்கத்துவஜபாலன் - ஹரிநாராயணன் 1305 - 1325
  • மயூரத்துவஜபாலன் - கொலுக்நாராயணன் 1325 - 1343
  • ஜெயத்துவஜபாலன் - வஜயநாராயணன் 1343 - 1360
  • கர்மத்துவஜபாலன் - நந்தேஷ்வர் 1360 - 1380
  • சத்தியநாராயணன் 1380 - 1400
  • இலக்குமிநாராயணன் 1400 - 1420
  • தர்மநாராயணன் 1420 - 1440
  • பிரத்தியுஷ்நாராயணன் 1440- 1465
  • யாஷ்நாராயணன் 1465 - 1480
  • பூர்ண தவநாராயணன் 1480 - 1500
  • தர்மதுவஜபாலன் - தீரநாராயணன் 1500- 1522
  • நித்தியபாலன் - சந்திரநாராயணன் 1522 - 1524

அடிக்குறிப்புகள்

  1. ( [[#CITEREF|]])
  2. ( [[#CITEREF|]]).The term chutiya is an expletive in Hindi language. The group name is pronounced Sutiya and not Chutiya.
  3. ( [[#CITEREF|]])

மேற்கோள்கள்

  • Prakash, Col. Ved (2007). Encyclopedia of North East India.Vol.2. Atlantic Publishers & Dist..
  • Pathak, Guptajit (2008). Assam's history and its graphics. Mittal Publications.
  • Bhusan, Chandra (2005). Assam : Its Heritage and Culture. Gyan Publishing House.
  • Gogoi, Punyadhar. War Weapons in Medieval Assam.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.