கார்கோடப் பேரரசு

கார்கோடப் பேரரசு (Karkota Empire) (ஆட்சிக் காலம்: கி பி 625 - 885 ) இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 625 முதல் 885 முடிய இருந்த அரசாகும்.[1]

பேரரசர் லலிதாத்தியன் ஆட்சிக் காலத்தில் கார்கோடகப் பேரரசின் வரைபடம், எட்டாம் நூற்றாண்டு
கார்கோடப் பேரரசு
கி பி 625–885
தலைநகரம் பரிஹாஸ்பூர், பின்னர் ஸ்ரீநகர்
சமயம் இந்து சமயம்
பௌத்தம்
அரசாங்கம் முடியாட்சி
சாம்ராட்துர்லபவர்தனன்
துர்லபஹாகன்
 - கி பி 724 –760 லலிதாத்தியன்
வரலாற்றுக் காலம் மத்தியகால இந்தியா
 - உருவாக்கம் கி பி 625
 - குலைவு 885
தற்போதைய பகுதிகள்  ஆப்கானித்தான்
 இந்தியா
 பாக்கித்தான்
Warning: Value not specified for "common_name"
லலிதாத்தியன் கட்டிய மார்த்தாண்ட சூரியக் கோயில், அனந்தநாக்
1870-1873-இல் மறுசீரமைக்கப்பட்ட மார்த்தாண்ட சூரியக் கோயில், அனந்தநாக்

கார்கோட அரசை கி பி 625-இல் நிறுவியவர் மன்னர் துர்லபவர்தனர் ஆவார். [2] கார்கோடப் பேரரசு தற்கால இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இராஜதரங்கிணி மற்றும் லலிதாத்திய முக்தபீடம் ஆகிய சமஸ்கிருத நூல்களை இயற்றிய கல்ஹானரின் கூற்றுப்படி, கி பி 740-இல் கார்கோட மன்னர்கள் கன்னோசி மன்னர் யசோவர்மனை வீழ்த்தி, துருக்கியர்கள் மற்றும் திபெத்தியர்களை வென்றார்கள் என அறியப்படுகிறது.[3][4]

இந்து சமயத்தவராக இருந்த கார்கோடகப் பேரரசர்கள் தலைநகர் பரிஹாஸ்பூரில் இந்துக் கோயில்களைக் கட்டினர்.[5][6]காஷ்மீர் சமவெளியின் அனந்தநாக் நகரத்தில் சூரியக் கடவுளான மார்த்தாண்டனுக்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டது. [7][8] மேலும் தமது பேரரசில் பௌத்த சமயத்தின் தூபிகள், விகாரைகள் எழுப்ப அனுமதித்தனர்.

வீழ்ச்சி

கி பி 885-இல் அவந்தி நாட்டு உத்பால வம்சத்தின் மன்னர் அவந்தி வர்மன், கார்கோடப் பேரரசை வீழ்த்தினார்.[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.