கொச்சி இராச்சியம்

கொச்சி இராச்சியம் (Kingdom of Cochin, அல்லது பெரும்படப்பு சுவரூபம்[1], மட-ராஜ்யம், கோசிறீ இராஜ்யம், குரு சுவரூபம்; மலையாளம்: കൊച്ചി Kocci அல்லது പെരുമ്പടപ്പ്‌ Perumpaṭappu) இடைக்கால இந்து இராச்சியம் ஆகும். பின்னர் பிரித்தானிய இந்தியப் பேரரசின் கீழான மன்னர் அரசாக விளங்கியது. ஒருகாலத்தில் பொன்னானியிலிருந்து கொச்சி வரையிலான மலபார் பகுதியை ஆண்டுவந்த இந்த இராச்சியத்தின் ஆட்சிப்பகுதி கோழிக்கோட்டின் சமோரின் அரசரின் கைப்பற்றுகைகளால் வெகுவாக குறைந்திருந்தது. போர்த்துக்கேய கப்பற்தொகுதிகள் இந்தியா வந்தடைந்தபோது கொச்சி சமோரினின் கட்டுப்பாட்டில் இருந்தது. சமோரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற எண்ணிய கொச்சி அரசர் உண்ணி கோடா வர்மா திருமுல்பாடு திசம்பர் 24, 1500இல் பெட்ரோ ஆல்வாரெசு காப்ராலை வரவேற்று போர்த்துக்கல்லிற்கும் கொச்சினிக்கும் இடையே சமோரினுக்கு எதிராக உடன்படிக்கை செய்து கொண்டார்; இதன்படி கொச்சி நீண்டகால போர்த்துக்கேய காப்பரசாக (1503–1663) மாறியது. போர்த்துக்கேயர்களுக்குப் பின்னர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியும் (1663–1795) அதன்பின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமும் (1795–1858, உறுதியாக 6 மே 6, 1809) கொச்சி அரசுக்குப் பாதுகாப்பு வழங்கின. பெரும்படப்பு சுவரூபம் என அறியப்பட்ட கொச்சி இராச்சியம் நடுக்காலத்தில் பிற்காலச் சேரர்களின் கீழ் இருந்தது. பெரும்படப்பின் (பொன்னானி வட்டத்தில் உள்ள வன்னேரிநாடு சித்திரகூடம்) பிராமணத் தலைவர் கடைசி சேர அரசரான இராம வர்மா குலசேகராவின் உடன்பிறப்பை மணந்திருந்தார். இதன் விளைவாக சேரர்களிடமிருந்து திருவஞ்சிக்குளம் கோவிலையும் பிற உரிமைகளையும் பெற்றார்.[2] 12வது நூற்றாண்டில் மகோதயாபுரம் சேரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பெரும்படப்பு சுவரூபமும் மற்ற மாநிலங்களைப் போலவே தன்னாட்சி பெற்ற அரசியல் தனிவுருவானது. இருப்பினும், போர்த்துக்கேய குடியேற்றவாதிகளின் வருகைக்குப் பிறகே பெரும்படப்பு சுவரூபம் அரசியல் முக்கியத்துவம் பெற்றது. பெரும்படப்பு ஆட்சியாளர்களுக்கும் எடப்பள்ளி நம்பூதிரி ஆட்சியாளர்களுக்கும் இடையே குடும்ப உறவுகள் இருந்தன. இவர்களிடமிருந்து கொச்சியும் வைப்பினும் பெரும்படப்பிற்கு கிடைத்தன; இதனால் கொச்சி அரசர்கள் என அறியப்படலாயினர். கடற்பளபதி செங் ஹேயுடன் பயணித்த மொழிபெயர்ப்பாளரும் முசுலிம் பயணியுமான மா உவான் கொச்சி அரசர் பௌத்த சமயத்தவராக விவரித்துள்ளார்.

கொச்சி இராச்சியம்
കൊച്ചി
പെരുമ്പടപ്പ് സ്വരൂപം
பிரித்தானிய இந்தியப் பேரரசின் மன்னர் அரசு

அண் 12வது நூற்றாண்டு–1947
கொடி சின்னம்
குறிக்கோள்
"അന്തസ്സ് നമ്മുടെ കുടുംബ നിധി"

"மாட்சிமையே எங்கள் குடும்பச் சொத்து"

நாட்டுப்பண்
"ஓம் நமோ நாராயணா"
தலைநகரம் மகோதயபுரம் (திருவஞ்சிக்குளம்)
வன்னேரி
கொச்சி
திருப்பூணித்துறை
திருச்சூர்
மொழி(கள்) மலையாளம், ஆங்கிலம்
அரசாங்கம் முழுமையான மன்னராட்சி
மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) (1814–1947)
வரலாறு
 - உருவாக்கம் அண் 12வது நூற்றாண்டு
 - குலைவு 1947
நாணயம் ரூபாய் மற்றும் பிற உள்ளூர் நாணயங்கள்
யானை மீது கொச்சி அரசர் - யான் ஹூகன் வான் லின்சோடென் ஓவியம்
பரிவாரத்துடன் கொச்சி அரசர் Histoire générale des Voyages

இதனையும் காண்க

மேற்சான்றுகள்

  1. Kerala.com (2007). "Kerala History". பார்த்த நாள் 7 January 2008.
  2. Pillai, Elamkulam Kunjan (1970). Studies in Kerala History.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.