சேரர்

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரைச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக் கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. பெரும்பாலும் இன்றைய தமிழகத்தின் கொங்கு நாட்டுப்பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. மேலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டி நாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது[1].

சேர நாடு
கி.மு. 500–கி.பி. 1102


கொடி

{{{common_name}}} அமைவிடம்
தலைநகரம் கரூர்
மொழி(கள்) தமிழ்
சமயம் வைணவம்
அரசாங்கம் முடியாட்சி
வரலாற்றுக் காலம் சங்க காலம், மத்திய காலம்
 - உருவாக்கம் கி.மு. 500
 - இரண்டாம் சேரர்கள். கி.பி. 800
 - குலைவு கி.பி. 1102
தற்போதைய பகுதிகள்  இந்தியா
Warning: Value not specified for "common_name"
சங்ககாலச் சேரர் ஆட்சி
சேர மன்னர்களின் பட்டியல்
மூன்றாம் கழகக்காலச் சேரர்கள்
பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்கி.பி. 45-70
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்கி.பி. 71-129
பல்யானைச் செல்கெழுகுட்டுவன்கி.பி. 80-105
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்கி.பி. 106-130
சேரன் செங்குட்டுவன்கி.பி. 129-184
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்கி.பி. 130-167
அந்துவஞ்சேரல் இரும்பொறை(காலம் தெரியவில்லை)
மாந்தரஞ்சேரல் இரும்பொறை(காலம் தெரியவில்லை)
வாழியாதன் இரும்பொறைகி.பி. 123-148
குட்டுவன் இரும்பொறை(காலம் தெரியவில்லை)
பெருஞ்சேரல் இரும்பொறைகி.பி. 148-165
இளஞ்சேரல் இரும்பொறைகி.பி. 165-180
பெருஞ்சேரலாதன்கி.பி. 180
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை(காலம் தெரியவில்லை)
குட்டுவன் கோதைகி.பி. 184-194
மாரிவெண்கோகாலம் தெரியவில்லை
வஞ்சன்காலம் தெரியவில்லை
மருதம் பாடிய இளங்கடுங்கோகாலம் தெரியவில்லை
கணைக்கால் இரும்பொறைகாலம் தெரியவில்லை
கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதைகாலம் தெரியவில்லை
பிற்காலச் சேரர்கள்
பெருமாள் பாஸ்கர ரவிவர்மாகி.பி. 8ஆம் நூற்றாண்டு

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்

சங்க காலச் சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்[1].

கேரளதேசம் சோழதேசத்திற்கு மேற்கிலும், அரபிக்கடலும் தென்கடலும் கூடுமிடத்திலுள்ள கன்னியாகுமரி முதல் வடபாகமாக நீண்டு, கர்னாடகதேசத்திற்கு தெற்கிலும் ஓர் அகன்று பரவி இருந்த தேசம்.[2]

இருப்பிடம்

இந்த கேரளதேசத்தில் பூமி கிழக்கே உயரமாகவும், மேற்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும். வடகேரளம், தென்கேரளம் என இரு பிரிவாகவும், தென்கேரளத்திற்கு அனந்தபுரம் என்றும், வடகேரளத்திற்கு கொச்சி என்றும் பெயர் வழங்கிவருகிறது.[3]

மன்னர்கள்

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

சங்ககாலச் சேரர்கள்

சங்ககால நூல்கள் பலவற்றில் சேர வேந்தர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. குறிப்பாக, சங்ககால நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, பத்து சேர வேந்தர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர வேந்தன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

சேர வேந்தனின் பெயர்தந்தை பெயர்தலைநகரம்ஆட்சி செய்த காலம்ஆட்சியாண்டுகள்[4][5]
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்வஞ்சி(திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூர்)
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்58 ஆண்டுகள்
பல்யானைச் செல்கெழு குட்டுவன்சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்25 ஆண்டுகள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்25 ஆண்டுகள்
சேரன் செங்குட்டுவன்சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்வஞ்சி(திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூர்)55 ஆண்டுகள்
சேரமான் பெருஞ்சேரலாதன்கி.மு. 145[6]
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்நறவூர்38 ஆண்டுகள்
சோழிய ஏனாதி திருக்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை[7]
சேரமான் கோக்கோதை மார்பன்[8]
குட்டுவன் கோதை[9]
சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறைகருவூர்
செல்வக் கடுங்கோ வாழியாதன்சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறைகருவூர்25 ஆண்டுகள்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைசெல்வக் கடுங்கோ வாழியாதன்கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர்[10]17 ஆண்டுகள்
இளஞ்சேரல் இரும்பொறைதகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைகருவூர்[11]16 ஆண்டுகள்
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைசேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறைகருவூர், மாந்தைகி.பி.141[12][13][14]
சேரமான் மாரிவெண்கோ[15]
சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறைகருவூர்
சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைகருவூர்
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்கருவூர்(பொருநை நதி பாயும் வஞ்சி)
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
கோதை மார்பன்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
பாலை பாடிய பெருங்கடுங்கோ
சேரமான் வஞ்சன்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

பிற்காலச் சேரர்கள்

  • சேரமான் பெருமாள் நாயனார் (கி.பி724-756)
  • சேரமான் ஐயனாரிதனார் (கி.பி756-800)
  • குலசேகார வர்மன் (கி.பி800-820)
  • ராஜசேகர வர்மன் (கி.பி820-844)
  • சாந்தனு ரவி வர்மன் (கி.பி844-885)
  • ராம வர்மா குலசேகர (கி.பி885-917)
  • கோதை ரவி வர்மா (கி.பி917-944)
  • இந்து கோதை வர்மா (கி.பி944-962)
  • பாஸ்கரா ரவி வர்மன் I (கி.பி962-1019)
  • பாஸ்கரா ரவி வர்மன் II (கி.பி1019-1021)
  • வீர கேரளா (கி.பி1021-1028)
  • ராஜசிம்மா (கி.பி1028-1043)
  • பாஸ்கரா ரவி வர்மன் III (கி.பி1043-1082)
  • ரவி ராம வர்மா (கி.பி1082-1090)
  • ராம வர்மா குலசேகர (கி.பி1090-1102)
மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள்

படைபலம்

"முத்தமிழரசரிடமும் யானைப்படை மிகுதியாயிருந்தது. சோழவேந்தனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததாக ஒரு சீன வழிப்போக்கன் கூறியிருப்பதால், யானை இயல்பாகக் கூட்டங் கூட்டமாய் வாழும் குடமலைத் தொடரையுடைய சேரனிடத்தும் பாண்டியனிடத்தும், அவை எத்துணைப் பெருந்தொகையினவாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகித்துணர்ந்து கொள்ளலாம்."

- பாவாணர்[16]

நகரங்கள்

கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்[1]. தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).

8 நாடு (மகா சாமந்தம்) பிரிவுகள்

சேர மன்னர்களில் சேரமான் பெருமாள்கள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 8 (சாமந்தம் = கப்பம் செலுத்தும் நாடு) பிரிவுகளாக பிரித்து 8 மகா சாமந்த மன்னர்கள் ஆண்டுவந்தனர். அவர்கள் மகா சாமந்தர்கள் என அறியப்பட்டனர். அவை:[2]

- சாமந்தம் பெயர் தலைநகர் பெயர்
1ஏரநாடுகோழிக்கோடு
2வேணாடுபத்மநாபபுரம்
3ஓனாடு--
4கோனாடு--
5கொடுக்குன்னி நாடு--
6கோலத்து நாடு--
7போல நாடு--
8தெக்கன் வடக்கன் கூறு--

12 ( சுதந்திர நாடு) பிரிவுகள்

சேர மன்னர்களில் இறுதி மன்னன் மாகோதையார் என்ற சேரமான் பெருமாள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 12 (ஸ்வரூபம் = சுதந்திர நாடு) பிரிவுகளாக பிரித்து 12 மன்னர்களிடம் (குருநில மன்னர்கள்) பிரித்து வழங்கப்பட்டது. அவை:[2]

- ஸ்வரூபம் பெயர் தற்போதைய பகுதி
1நெடியிருப்புகோழிக்கோடு
2ஆரங்கோடுவள்ளுவநாடு
3பெரும்படப்புகொச்சி
4திருப்பாப்பூர்திருவிதாங்கூர்
5குறும்பியாதிரிகுறும்ப நாடு
6புறநாட்டுக்கரைகோட்டையம்
7கோளத்திரிசிரக்கல்
8போர்ளாத்திரிகடத்த நாடு
9தரூர்பாலக்காடு
10பாப்புக்கோயில்பெய்ப்பூர்
11பரப்புக்கோயில்பரப்ப நாடு
12ஒன்றில்பரப்ப நாட்டின் ஒருபகுதி

மலை, காடு, விலங்குகள்

இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள பூமியில் சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் மலையம், தர்துரம், என்னும் பெரிய மலைகளும், வருசகிரி, வராககிரி, போன்ற சிறு மலைகளும் இருக்கும் இவற்றில் அகில், சந்தனமரங்களும், மந்தம், மிருகம் என்ற யானைகளும் இருக்கும்.[3]

நதிகள்

இந்த பாண்டியதேசத்தில் பொதியம் மலையில் உற்பத்தியாகும் முரளா, கேரளதேசத்தை செழிக்க வைக்கின்றது.[17]

வேளாண்மை

இந்த கேரளதேசத்தில் நெல், வாழை, கரும்பு, ஏலம், கிராம்பு, போன்ற பயிர்களும், பயறு வகைகளும் விளைகின்றன.

கருவி நூல்

மேலும் காண்க

மேற்கோள்

  1. Nagaswami, R. (1995), Roman Karur: A peep into Tamil's past, Brahad Prakashan, Madras
  2. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  3. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்]] - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 283 -
  4. பதிற்றுப்பத்து
  5. சு. இரத்தினசாமி, சங்க கால அரசரக்ள் (கால வரைசைப்படி), மணிவாசகர் பதிப்பகம், 8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108, பதிப்பாண்டு 1995.
  6. இவன், கரிகால் சோழனுடன் போரிட்டதால், அவனுடைய காலத்தவன் எனக்கொள்ளலாம். மேலும், சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இடையே போர் நடந்தது. இப்போரை, கழாத்தலையார், பரணர் ஆகிய இருவரும் பாடியுள்ளனர். இவர்களில், கழாத்தலையார், சேரமான் பெருஞ்சேரலாதனையும், பரணர், சேரன் செங்குட்டுவனையும் பாடியுள்ளார்கள் என்பதால், இவன், சேரன் செங்குட்டுவனின் சற்றேறக்குறைய சமகாலத்தவன். மேலும், கழாத்தலையார், சேரமான் பெருஞ்சேரலாதனையும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும் பாடியுள்ளார் என்பதால் இருவரும் சற்றேறக்குறைய சமகாலத்தவர்.
  7. இவனுக்கும், சோழன் செங்கணானுக்கும் இடையே போர் நடந்தது என்பதால் இவனை சோழன் செங்கணானின் சமகாலத்தவன் எனக்கொள்ளலாம். மேலும், இவனைப் பாடிய பொய்கையார் சேரமான் கோக்கோதை மார்பனையும் பாடியுள்ளார் என்பதால், சேரமான் கோக்கோதை மார்பனும் இவனின் சற்றேறக்குறைய சமகாலத்தவன் எனலாம்.
  8. சேரமான் கணைக்கால் இரும்பொறையின் சற்றேறக்குறைய சமகாலத்தவன்.
  9. இவனைப் பாடிய கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும் பாடியுள்ளார் என்பதால் இவர்கள் சற்றேறக்குறைய சமகாலத்தவர்கள் எனலாம். மேலும், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனைப் பாடிய காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனாரும் உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் புகழூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்படும் பிட்டங்கொற்றனையும் பாடியுள்ளார்கள் என்பதால், இவனை, பிட்டங்கொற்றனின் சற்றேறக்குறைய சமகாலத்தவன் எனலாம். புகழூர்க் கல்வெட்டை தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை வெட்டியதால், இவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் சற்றேறக்குறைய சமகாலத்தவன்.
  10. புகழூர்க் கல்வெட்டு வெட்டிய இவன், ஜம்பைக் கல்வெட்டு வெட்டிய அதியமான் நெடுமான் அஞ்சியுடன் போர் புரிந்தவன் என்பதால் இவன் அவன் காலத்தவன் எனலாம். மேலும், மலையமான் திருமுடிக்காரி மற்றும் வல்வில் ஓரியின் சமகாலத்தவன்.
  11. இவன், பெரும்பூட் சென்னியுடன் போர் புரிந்ததால் அவன் காலத்தவன் எனலாம்.
  12. பதிற்றுப்பத்தில் இவனது இறப்பு எரிமீன் விழுவதுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இதே போல் பல்வேறு பண்பாடுகளில் எரிமீன் விழுவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எரிமீன் ஹேலியின் வால்வெள்ளியாகும்.
  13. Williams, John (1871), Observations of Comets, from B.C. 611 TO A.D. 1640, Royal Astronomical Society. London:Strangeways and Walden. Extracted from the Chinese Annals: ...and a Chinese celestial Atlas.
  14. இவன், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியுடன் போரிட்டதால் அவன் காலத்தவன்.
  15. இவன், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி மற்றும் பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகியோரின் சமகாலத்தவன். மேலும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் இடையே போர் நடந்தது என்பதால், இவன், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் சற்றேறக்குறைய சமகாலத்தவன்.
  16. பழந்தமிழாட்சி, மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பக்கம் - 42
  17. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 284-
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.