வேதகாலம்

வேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது.[1] [2][3]

வேத கால இந்தியா
Geographical rangeஆசியா
காலப்பகுதிஇரும்புக் காலம்
காலம்c. 1500 – 500 BCE
முந்தியதுசிந்து வெளி நாகரீகம்
பிந்தியதுஹரியங்கா வம்சம், மகாஜனபதங்கள்
தெற்காசிய வரலாறு

அகண்ட இந்தியாவின் வரலாறு
கற்காலம்கிமு 70,0007000
மெஹெர்கர் பண்பாடுகிமு 70003300
சிந்துவெளி நாகரிகம்கிமு 33001700
ஹரப்பா பண்பாடுகிமு 17001300
வேதகாலம்கிமு 1500500
- இரும்புக்கால அரசுகள்- 1200700 BC
மகாஜனபதம்கிமு 700300
மகதப் பேரரசுகிமு 684 - 26
- மௌரியப் பேரரசு- கிமு 321 - கிமு 184
சாதவாகனர்கிமு 1-ஆம் நூற்றாண்டு – கிபி 2-ஆம் நூற்றாண்டு
- குப்தப் பேரரசுகிபி 240 - 550
தென்னிந்திய அரசுகள்கிமு 600 - கிபி 1600
- பண்டைய தமிழ்நாடு- கிமு 200 - கிபி 200
- குசான் பேரரசு- கிமு 60 - 240
- சாளுக்கியப் பேரரசு- கிபி 5431200
- பாண்டியர்கிமு 600 - கிபி 1600
- சோழர்கிமு 400 – கிபி 1279
-சேரர்கிமு 500 – கிபி 1102
களப்பிரர்கிபி 250 – 600
பல்லவர்கிபி 300– 850
இஸ்லாமிய பேரரசுகள்1210 -1596
- தில்லி சுல்தானகம்- 12101526
- பாமினி பேரரசு- 13471527
- தக்காணத்து சுல்தானகங்கள்- 14901596
ஹொய்சலப் பேரரசு10401346
விஜயநகரப் பேரரசு13361565
முகலாயப் பேரரசு15261707
மராட்டியப் பேரரசு16741818
குடியேற்றவாதக் காலம்17571947
தற்கால நாடுகள்1947 க்குப் பின்னர் நாட்டு வரலாறுகள்
இந்தியா · பாகிஸ்தான் · வங்காளதேசம் · இலங்கை · நேபாளம் · பூட்டான் · மாலைதீவு·
பிரதேச வரலாறுகள்
பஞ்சாப் · தென்னிந்தியா · அசாம் · திபெத் · சிந்து · தமிழகம் · ஆந்திரம் · கேரளம் · கர்நாடகா· தெலுங்கானா · மகாராஷ்டிரம் · கோவா
சிறப்பு வரலாறுகள்
வம்சங்கள் · பொருளியல் · மொழி
இலக்கியம் · கடல்சார் · படை · கணிதவியல்
அறிவியலும் தொழில் நுட்பமும் · காலவரிசை

இக் காலப்பகுதியோடு தொடர்புடைய பண்பாடு சில சமயங்களில் வேத நாகரிகம் எனக் குறிக்கப்படுவதும் உண்டு. இந் நாகரிகம், வடக்கு இந்தியாவையும், வடமேற்கு இந்தியாவையும் மையப்படுத்திச் செழித்து இருந்தது. இதன் முதற் கட்டத்தில் பழங்கால இந்தியாவில் பல்வேறு அரசுகள் தோன்றின. கிமு 600 ஆம் ஆண்டளவில் தொடங்கி மகத நாடு போன்ற மகாஜனபதங்கள் என சமசுக்கிருதத்தில் குறிப்பிடப்படும் சிறிய நாடுகள் உருவாகின. தொடர்ந்து கிமு 320 ஆம் ஆண்டில் மௌரியப் பேரரசு உருவானது.

வரலாறு

வேதகால இந்தியாவின் வரலாறு பெரும்பாலும் அக்காலத்து நூல்களை அடிப்படையாகக் கொண்டே மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. மொழியியல் அடிப்படையில் வேதகால நூல்கள் ஆறு காலவரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1. ரிக் வேத காலம்: ரிக் வேதமே தற்போது கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய நூலாகும். அத்துடன், இதன் உள்ளடக்கமும், மொழியும் பொது இந்திய, ஈரானியக் கூறுகளை உள்ளடக்கி உள்ளது. இது பிற வேத நூல்களில் காணப்படவில்லை. ரிக் வேதம் பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாக உருவாகியதாகத் தெரிகிறது. இதன் பிற்காலத்துப் பகுதிகள் தவிர்ந்த பிற பகுதிகள் கிமு 1000 ஆவது ஆண்டளவில் முற்றுப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

2. மந்திர மொழிக் காலம்:

3. சங்கிதைக் காலம்:

4. பிராமணக் காலம்:

5. சூத்திரங்களின் காலம்:

6. இதிகாசக் காலமும், பாணினிய சமசுக்கிருதக் காலமும்:

மேற்கோள்கள்

  1. Vedic Age
  2. Civilization overview and history: The Vedic Age of Ancient India
  3. Vedic Culture / Hinduism: A Short Introduction
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.