அனுராதபுர இராச்சியம்

அனுராதபுர இராச்சியம் (Anuradhapura Kingdom) அல்லது அனுராதபுர இராசதானி (சிங்களம்: අනුරාධපුර රාජධානිය என்பது பண்டைய இலங்கையின் இரண்டாவது இராச்சியம் ஆகும். கி.மு. 377 ஆம் ஆண்டில் பண்டுகாபய மன்னானால் இவ்விராச்சியம் நிறுவப்பட்டது. இது இலங்கையில் அதிக காலம் ஆட்சியில் இருந்த இராசதானி ஆகும். அவனே அனுராதபுரத்தைத் தலைநகரமாக மாற்றினான். அனுராதபுர இராச்சியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக நாட்டிற்கு புத்த மதம் அறிமுகமானதைக் குறிப்பிடலாம். இவ்விராச்சியம் கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் இருந்தது. இவ்விராச்சியத்தின் அதிகாரம் நாடு முழுவதும் நீடித்திருந்தது. எனினும் ஆங்காங்கே சில சுதந்திரப் பிரதேசங்களின் வளர்ச்சியை இவ்விராச்சியத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அனுராதபுர இராச்சியம்
Kingdom of Anuradhapura
අනුරාධපුර රාජධානිය

கிமு 377–கிபி 1017
தலைநகரம் அனுராதபுரம்
மொழி(கள்) சிங்களம்,தமிழ்
சமயம் பௌத்தம்
அரசாங்கம் மன்னராட்சி
அதிபர்
 -  கிமு 377 - கிமு 367 பண்டுகாபயன்
 - 982 – 1017 ஐந்தாம் மகிந்தன்
வரலாறு
 - உருவாக்கம் கிமு 377
 - குலைவு கிபி 1017
கூட்டம் பொகுண அல்லது கூட்டத் தடாகங்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.