தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ் நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.[1][2]
இக்கட்டுரை ![]() |
தமிழக முதலமைச்சர்
| |
---|---|
நியமிப்பவர் | தமிழக ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | ஏ. சுப்பராயலு |
உருவாக்கம் | 17 டிசம்பர் 1920 |

தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைச் சார்ந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பெற்று அவர்களின் பரிந்துரையின் படி தமிழத்தின் ஆளுநரால் ஆளுமை புரிய அழைத்ததின் பேரில் தமிழகத்தின் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆளுமை புரிய கடமைபட்டவராவார்.
இவரே தமிழகத்தின் முதன்மை செயலாட்சியர் ஆவார். இவருக்கென்று தனியான துறைகள் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் சிறப்புத் துறைகளை இவர் கவனிப்பார். மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசு ஆணைகள், செயல் அலுவலர்களின் பணி மாற்றம் போன்ற அனைத்தும் நிர்வாக செயல்திட்டங்களும் இவரால் மேற்கொள்ளப்படும்.
இவரின் அலுவலகம் மற்றும் இவரது அமைச்சரவையின் அலுவலகமும் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளத் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ளது. இவருக்கு துணை புரிய ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் முதன்மை செயலாட்சியர்களாக இருப்பர்.
முதலமைச்சர்களின் பட்டியல்
சென்னை மாகாணம்

சென்னை மாகாணம் இன்றைய தமிழ் நாடு, வடக்கு கேரளாவின் மலபார் பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மற்றும் ராயல்சீமா பகுதிகள், மற்றும் கர்னாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடா, மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கிலேயரின் இந்திய ஆட்சிப்பகுதியாக இருந்தது.
சென்னை பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆளுமை எல்லைகளாக தொடங்கிய சென்னை மாகாணம் ஆங்கில-பிரென்சு (Anglo-French) யுத்தத்திற்கு பிறகு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஆற்காட் நவாப் உடன்படிக்கைக்கு பின்னர் வடக்கு சர்க்கார் தொடங்கி குமரி முனை வரை விரிந்து பரவியது. 1670-ல் பொதுத்துறையில் ஒரு செயலருடன் தொடங்கிய தலைமைச்செயலகம்[3] 1920 ஆம் ஆண்டில் ஆறு துறைகளும் அதனை மேற்பார்வையிட ஒரு தலைமைச் செயலாளரும் கொண்ட கட்டமைப்பாக உருப்பெற்றது. இந்திய அரசு சட்டம், 1919 இயற்றப்பட்டபின் இங்கு 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவை யின் ஆட்சிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தது. 132 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
இந்திய அரசு சட்டம், 1935இன்படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும் 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் முதல் சட்டப் பேரவை பதவியேற்றது. சட்ட மேலவை (The legislative council)[4], எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மூன்றாண்டு காலத்தில் ஓய்வு பெரும்படியான ஒரு நிரந்தர அமைப்பு.
1939-ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா மாகாண அரசாங்கங்களை கலந்து பேசாமலே இரண்டாம் உலகப்போரில் இந்தியா பங்கேற்கும் என பிரகடணம் செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து தன் கட்சியின் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்தவர்களையும் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகக் கோரியது.[5] 1946-ல் பின்னர் நடந்த மாகாண தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.[6]
சென்னை மாநிலம்

சென்னை மாநிலம், தற்போதைய தமிழ் நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-இல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ் நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச்சு 1, 1952-ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது.[11] சென்னை மாநிலம் பிற்பாடு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மாறியமைப்புச் சட்டம், 1956-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின் கேரள மாநிலமும், மைசூர் மாநிலமும் சென்னை மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் ஆந்திர சென்னை மாநிலங்கள் எல்லை மாற்றச் சட்டம், 1959ன் கீழ் ஏப்ரல் 1, 1960 முதல் திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் வட்டத்தின் துணைவட்டமான பள்ளிப்பட்டு ஆகியவை சென்னை மாநிலத்தோடும், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள் ஆந்திர மாநிலத்தினோடும் இணைக்கப்பட்டன.[3]
#[7] | பெயர் | ஓவியம் | தொடக்கம் | முடிவு | முறை[8] | கட்சி | |
---|---|---|---|---|---|---|---|
1 | பி. எஸ். குமாரசுவாமிராஜா | ![]() |
26 ஜனவரி, 1950 | 9 ஏப்ரல், 1952 | 1 | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2 | சி. இராஜகோபாலாச்சாரி | ![]() |
10 ஏப்ரல், 1952 | 13 ஏப்ரல், 1954 | 2 | இந்திய தேசிய காங்கிரஸ் | |
3 | கே. காமராஜ் | ![]() |
13 ஏப்ரல், 1954 | 31 மார்ச்சு, 1957 | 1 | இந்திய தேசிய காங்கிரஸ் | |
4 | 13 ஏப்ரல், 1957 | 1 மார்ச்சு, 1962 | 2 | இந்திய தேசிய காங்கிரஸ் | |||
5 | 15 மார்ச்சு, 1962 | 2 அக்டோபர், 1963 | 3 | இந்திய தேசிய காங்கிரஸ் | |||
6 | எம். பக்தவத்சலம் | ![]() |
2 அக்டோபர், 1963 | 6 மார்ச்சு, 1967 | 1 | இந்திய தேசிய காங்கிரஸ் | |
7 | சி. என். அண்ணாத்துரை | ![]() |
6 மார்ச்சு, 1967 | ஆகஸ்டு, 1968 | 1 | தி.மு.க. |
தமிழ் நாடு
.svg.png)
சென்னை மாகாணம் - 14 ஜனவரி 1969 அன்று தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[12] தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் "தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம், 1986" (Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986) எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர் 1986 முதல் அமல்படுத்தப்படுமாறு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது. தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது.[4]
முதலமைச்சரின் பதவிக்காலம் சட்டப்பேரவையின் நம்பிக்கை அவர் மீது உள்ளவரை நீளும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் முதல்வராக இருப்பவர் பதவி விலகவேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைக்கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 பிரிவில் (Article 356) குறிப்பிட்டுள்ள ஒர் தகவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு உண்டு. 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.[13] முதலமைச்சராக உள்ள ஒருவர் இறப்பதாலோ, பதவி விலகுவதாலோ அல்லது பதவி நீக்கம்செய்யப்பட்டாலோ உருவாகும் காலியிடத்திற்கு, மாநில ஆளுனர் மற்றொருவரை அமைச்சரவை அமைக்க அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளலாம். எவரொருவருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவை கலைக்கப்படும் அல்லது ஆளுனர் ஆட்சி அமைக்கப்படும் அல்லது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெரும்வரை இடைக்கால பொறுப்பாட்சி அமையும் நிலை எற்படும்.
குறிப்பிடத்தக்க பதிவுகள்
- மிக நீண்ட காலம் (தொடர்ந்து) பொறுப்பிலிருந்த முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆவார். ஆண்ட காலம் 10 வருடம், 5 மாதம் 25 நாட்கள்
- 30 ஜூன், 1977 முதல் அவர் இறந்த நாளான 24 டிசம்பர், 1987 வரை.
- மிகக்குறுகிய காலம் (24 நாட்கள்), பொறுப்பிலிருந்தவர் ஜானகி இராமச்சந்திரன்
- அதிக முறை (5) பொறுப்பேற்ற முதல்வர் மு. கருணாநிதி.
- 10 பிப்ரவரி, 1969–4 ஜனவரி, 1971,
- 15 மார்ச்சு, 1971–31 ஜனவரி, 1976,
- 27 ஜனவரி, 1989–30 ஜனவரி, 1991,
- 13 மே, 1996–13 மே, 2001,
- 13 மே, 2006–13 மே, 2011.
- அதிக முறை (6) பொறுப்பேற்ற முதல்வர் ஜெ. ஜெயலலிதா.
- 24 ஜூன், 1991–12 மே, 1996,
- 14 மே, 2001–21 செப்டம்பர், 2001,
- 2 மார்ச், 2002–12 மே, 2006,
- 16 மே, 2011–27 செப்டம்பர், 2014,
- 23 மே, 2015 - 23 மே , 2016
- 23 மே , 2016–.05 டிசம்பர், 2016
இவற்றையும் பார்க்கவும்
அடிக்குறிப்புகளும் உசாத்துணைகளும்
- தமிழ் நாடு அரசு (Government of Tamil Nadu) — தமிழக முதலமைச்சர்கள் (Chief Ministers of Tamil Nadu since 1920)
- Government of Tamil Nadu — Assemblies — An Overview
- தமிழ் நாடு அரசு — தலைமைச் செயலகம் — சுருக்கமான வரலாறு
- Legislative bodies of India - Tamil Nadu Legislative Assembly
- The Telegraph - Own Goal - Partition became inevitable once the Congress resigned in 1939
- Pakistan - toward partition
- The colours indicate the political party affiliation of each Chief Minister.
- The ordinal number of the term being served by the person specified in the row in the corresponding period
- World Statesmen.org — Provinces of British India
- Justice party was in power except for a brief period. (apparently that of ப. சுப்பராயன்) The Congress fought the elections for the first time in the Madras Presidency in 1937. Therefore, this tenure should have been that of the Justice Party.
- தமிழ்நாடு அரசு — மாநில சட்டப் பேரவை — துவக்கமும், படிமலர்ச்சியும்
- World Statesmen.org — Indian states since 1947
- The Hindu - Delhi's warning
- தமிழக அரசியல் வரலாறு-பாகம் 2, ஆர்.முத்துகுமார்
- On செப்டம்பர் 21, 2001, a five-judge இந்திய உச்ச நீதிமன்றம் of the இந்திய உச்ச நீதிமன்றம் ruled in a unanimous verdict that "a person who is convicted for a criminal offence and sentenced to imprisonment for a period of not less than two years cannot be appointed the Chief Minister of a State under Article 164 (1) read with (4) and cannot continue to function as such". Thereby, the bench decided that "in the appointment of Ms. Jayalalithaa as Chief Minister there has been a clear infringement of a Constitutional provision and that a writ of quo warranto must issue". In effect her appointment as Chief Minister was declared null and invalid in retrospect. Therefore, technically, she was not the Chief Minister in the period between மே 14, 2001 and செப்டம்பர் 21, 2001 (The Hindu — SC unseats Jayalalithaa as CM, full text of the judgment from official Supreme Court site).
- "Jayalalitha is the first CM to lose post in a graft case" (27 September 2014).