கேரளம்

கேரளம் அல்லது கேரளா (Kerala, ['keːɹəˌlə]?·i (ஆங்கிலமாக்கப்பட்டது) அல்லது [ˈkeːɾəˌɭəm] (உள்ளூர்); மலையாளம்: കേരളം, — Kēraḷaṁ) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி,கோழிக்கோடு திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு (எழுத்தறிவு) விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.

கேரளா

കേരളം

கடவுளின் சொந்த நாடு -- ദൈവത്തിന്റെ സ്വന്തം നാട്
  மாநிலம்  
இருப்பிடம்: கேரளா , இந்தியா
அமைவிடம் 8°30′27″N 76°58′19″E
நாடு  இந்தியா
பகுதி தென்னிந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டங்கள் 14
நிறுவப்பட்ட நாள் நவம்பர் 1, 1956
தலைநகரம் திருவனந்தபுரம்
மிகப்பெரிய நகரம் திருவனந்தபுரம்
ஆளுநர் ப. சதாசிவம்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (141 தொகுதிகள்:
தேர்ந்தெடுக்கப்படுவோர்: 140, நியமிக்கப்படுவோர்: 1)
மக்களவைத் தொகுதி கேரளா
மக்கள் தொகை

அடர்த்தி

3,34,06,061[3] (12th) (2011)

860/km2 (2,227/sq mi)

ம. வ. சு (2005) 0.814 (high) (1வது)
கல்வியறிவு 93.91[4][5]% (1வது)
மொழிகள் மலையாளம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 38852 கிமீ2 (15001 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL
வலைவாசல்: கேரளம்  
இணையதளம் kerala.gov.in

பெயர்க் காரணம்

கேரளா என்ற சொல், தமிழ்ச் சொல்லான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று.[6][7] இன்றைய கேரளா, வரலாற்று காலத்தில் “சேர நாடு” என்று அழைக்கப்பட்டு வந்தது. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் கேரளா - “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[8] மேலும், ரோமானிய வணிகன் பெரிபுளீஸின் நிலவரைபடத்தில், இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.[9] மலையில் (மேற்கு தொடர்ச்சி மலைகள்) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும்.

சிறப்புகள்

  • 5 ஏப்ரல் 1957ல் ஜனநாயக முறைப்படி, ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம்
  • ஆதி சங்கரர் (கி.பி.788-820) பிறந்த இடம் காலடி
  • இந்திய செவ்வியல் நடன வடிவம் "கதகளி"யின் பிறப்பிடம்
  • இரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம்
  • இந்தியாவின் நறுமணத் தோட்டம்
  • களரிப்பயிற்று தற்காப்புக் கலையின் பிறப்பிடம்
  • இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம்[10]
  • வளைகுடா நாடுகளில் பணி புரியும் இந்தியர்களில் கேரள மாநிலத்தவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் வெளிநாட்டு செலாவணி கேரளத்திற்கு கூடுதலாக கிடைக்கிறது.

புவியமைப்பு

38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள்; மேற்கில் அரபிக் கடல்; தென்கிழக்கில் தமிழ்நாடு; வடகிழக்கில் கர்நாடகம் எல்லைகளாக அமைந்துள்ளது.

ஆறுகள்

நெய்யாறு, பம்பை, மணிமலை, பெரியாறு, பாரதப்புழை, சித்தாறு மற்றும் மூவாற்றுப்புழை ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள்.

வரலாறு

பரசுராமரின் கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கதை.இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர்.[11]
போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஐரோப்பியர் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். 1947வாக்கில் கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது.
மலபார் சீரமைப்புச் சட்டம் 1956ன் படி, திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, நவம்பர் 1956ல் இன்றைய கேரளம் உதயமானது.

பொருளாதாரம்

விவசாயம் முக்கிய தொழில். உணவுப் பொருள் சாகுபடியை விட பணப்பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

ஆட்சிப் பிரிவுகள்

மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் கேரள மாவட்டங்கள் (ஒரு சதுரக் கிலோமீட்டருக்கு குடியிருப்போர் எண்ணிக்கை) ஆதாரம்:கேரள அரசு

கேரளம் பதினான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன:

கேரளத்தில் 63 வட்டங்களும், 1634 வருவாய் ஊராட்சிகளும், 978 ஊராட்சிகளும் ஐந்து நகராட்சிகளும் உள்ளன.

அரசியல்

இது இருபது மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[12] கேரள சட்டமன்றத்திற்காக, கேரளத்தை 140 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[12]

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கேரளா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 33,406,061 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 4.91% விகிதம் ஆக உயர்துள்ளது. மக்கள்தொகையில் ஆண்கள் 16,027,412 மற்றும் பெண்கள் 17,378,649 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1084 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 860 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 94.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 96.11% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 92.07% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,472,955 ஆக உள்ளது.[13]

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 18,282,492 (54.73 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 8,873,472 (26.56 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 6,141,269 (18.38 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 3,814 (0.01 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 4,489 (0.01 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 4,752 (0.01 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7,618 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 88,155 (0.26 %) ஆகவும் உள்ளது.

மொழி

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மலையாத்துடன், தமிழ், கன்னடம், உருது மற்றும் கொங்கணி மொழிகள் பேசப்படுகிறது.

கலைகள்

கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே. செண்டை மேளம் புகழ் பெற்றது.

சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்

சுற்றுலா தலங்கள்

தேக்கடி, பெரியார் தேசியப் பூங்கா, மூணார், வயநாடு, ஆலப்புழாவின் கட்டு வள்ளம்,கொச்சி மற்றும் கொல்லம்.[14]

ஆன்மிக தலங்கள்

சபரிமலை, ஆற்றுக்கால் பகவதி கோவில், சோட்டானிக்கரை பகவதி கோயில், ஆறு அய்யப்பன் கோயில்கள்,மீன்குளத்தி பகவதி கோயில்,குருவாயூர் குருவாயூரப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோவில் ஆகும்.

வைணவத் திருத்தலங்கள்

108 வைணவத் திருத்தலங்களில் 11 வைணவத் திருத்தலங்கள் கேரளத்தில் அமைந்துள்ளது. அவைகள்:

  1. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், திருவனந்தபுரம் மாவட்டம்
  2. திருக்கடித்தானம், கோட்டயம் மாவட்டம்
  3. திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், எர்ணாகுளம் மாவட்டம்
  4. திருமூழிக்களம், எர்ணாகுளம் மாவட்டம்
  5. திருப்புலியூர், ஆலப்புழா மாவட்டம்
  6. திருச்செங்குன்றூர், ஆலப்புழா மாவட்டம்
  7. திருவண்வண்டூர், ஆலப்புழா மாவட்டம்
  8. திருவல்லவாழ், பத்தனம்திட்டா மாவட்டம்
  9. திருவாறன்விளை, பத்தனம்திட்டா மாவட்டம்
  10. திருவித்துவக்கோடு, திருச்சூர் மாவட்டம்
  11. திருநாவாய், மலப்புறம் மாவட்டம்

விழாக்கள்

ஓணம் மற்றும் விஷு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது. மேலும் திருச்சூர் பூரம் திருவிழா, பெண்களின் ஐயப்பன் கோயில் எனப்படும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் மகம் திருவிழா, மகர விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.

இறைச்சி

கேரள மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் தகவல்படி 2009–2010 ஆண்டில் மட்டும் 61 லட்சம் பசு உட்பட்ட கால்நடைகள் தமிழகம் மூலம் கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு வரப்பட்டன. 18 லட்சம் கால்நடைகள் சோதனையை மீறிக் கடத்தப்பட்டவை.[15]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://india.gov.in/govt/governor.php
  2. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
  3. Census of India, 2001. Census Data Online, Population.
  4. "Literacy – officialwebsite of Govt of Kerala". பார்த்த நாள் 2010-05-25. The state ranks first in the country with a literacy rate of 94.59% (1st) The breakup shows 94.2 for males and 87.86 for females.
  5. "kerala front_ final printing 7Nov06.indd" (PDF). பார்த்த நாள் 2009-07-30.
  6. George 1968, பக். xiii, 6, 7.
  7. Smith 1999, பக். 447ff.
  8. "Carving the Buddha". Govt of Kerala. பார்த்த நாள் 3 October 2011.
  9. Asher, Kumari & 1997 pp. 100, 416.
  10. இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலமாக கேரளா தேர்வு
  11. வையவன், பக்கம் 17
  12. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) – இந்தியத் தேர்தல் ஆணையம்
  13. http://www.census2011.co.in/census/state/kerala.html
  14. https://www.keralatourism.org/destination/
  15. குமுதம் ஜோதிடம்; 5. அக்டோபர் 2012; "அனைத்து உயிர்களும் ஆண்டவனின் குழந்தைகளே..!" கட்டுரை

வெளி இணைப்புகள்

bs

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.