இந்திய தேசிய காங்கிரசு

இந்திய தேசிய காங்கிரஸ் (ஆங்கிலம்:Indian National Congress) ('காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் (I) என்றும் அழைக்கப்படுகிறது, சுருக்கமாக ') இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 15வது இந்திய நாடாளுமன்றத்தில் 206 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இக்கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.

இந்திய தேசிய காங்கிரசு
தலைவர்ராகுல் காந்தி
நாடாளுமன்ற குழுத்தலைவர்சோனியா காந்தி
மக்களவைத் தலைவர்மல்லிகார்ச்சுன் கர்கெ
தொடக்கம்28 திசம்பர் 1885 (1885-12-28)
தலைமையகம்24, அக்பர் தெரு, புது தில்லி 110001
செய்தி ஏடுகாங்கிரஸ் சந்தேஷ்
இளைஞர் அமைப்புஇளைஞர் காங்கிரசு
பெண்கள் அமைப்புமகிளா காங்கிரசு
உறுப்பினர்~20 மில்லியன்[1]
நிறங்கள்    
இ.தே.ஆ நிலைதேசியக்கட்சி[2]
கூட்டணிஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) (UPA)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
52 / 545
[3](currently 542 members + 1 Speaker)
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
69 / 245
[4](currently 243 members)
தேர்தல் சின்னம்
இணையதளம்
www.inc.in

வரலாறு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை விடுதலைக்கு முன்பு, விடுதலைக்கு பின்பு என இரு கால பகுதிகளாக பிரிக்கலாம்.

விடுதலைக்கு முன்பான கால பகுதி

1885 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக் என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.

இதன் இரண்டாம் கூட்டம் 1886 டிசம்பர் 27 ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால் "Indian National Congress" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜியின் "Indian National Union" காங்கிரசுடன் இனைக்கப்பட்டது.

முன்றாவது மாநாடு சென்னையில் 1887 டிசம்பர் 27 ல் நடைபெற்றது.

பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.

இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. காங்கிரசின் வரலாற்றை "பட்டாபி சித்தாராமைய" எழுதி உள்ளார். இவா் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று கூறிப்பிட்டு உள்ளார். உமேஸ் சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி "The Saftey Wall Theory "-யை கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக "Allan Octavian Hume"-யின் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார்.

காந்தியின் கால பகுதி

காந்தி 1915ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக அறவழிப்போர் நடத்தியதால் அவர் புகழ் இந்தியாவிலும் பரவியிருந்தது. தாயகம் திரும்பியதும் தன்னை இந்திய விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டார். அறவழிப்பாதையை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். காங்கிரசு இயக்கம் அன்னி பெசன்ட் அவர்களின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்து முசுலிம் ஒற்றுமை வேண்டி காலிபத் இயக்கத்தை ஆதரித்தார். டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தெரிவானார்.

விடுதலைக்கு பிந்தய கால பகுதி

ஜவகர்லால் நேரு கால பகுதி

இந்திரா காந்தி கால பகுதி

நேருவின் மறைவுக்குப் பின் இவர் லால் பகதூர் சாசுத்திரியின் அரசில் இந்திய மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சராக பணியாற்றினார். லால் பகதூர் சாசுத்திரியின் திடீர் மறைவை ஒட்டி பிரதமர் ஆனார். அதற்கு அப்போதைய காங்கிரசு தலைவர் கு. காமராசின் முயற்சியும் காரணமாகும். பின் 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார். காங்கிரசு கொள்கைகளுக்கு மாறாக நடந்ததாக கூறி இந்திரா காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இடதுசாரி கொள்கையுடன் இருந்து அவர்கள் பொருளாதார திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்கு காரணம் என கருதப்படுகிறது. இதனால் காங்கிரசு இரு குழுக்களாக பிரிந்தது. மாநில காங்கிரசு நிருவாகிகள் இந்திரா குழுவுக்கு ஆதரவளித்ததால் இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசிய காங்கிரசு என அறிவித்தது. அதனால் எதிர் குழு நிறுவன காங்கிரசு என்ற பெயரை சூட்டிக்கொண்டது. 1970ம் ஆண்டு இவரது ஆட்சியில் பசுமை புரட்சி நடந்தது. 1971ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையிலான காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1972 டிசம்பர் மாதம் பாக்கித்தானுடன் நடந்த போரில் வெற்றிபெற்று வங்காள தேசம் உருவாக காரணமாக இருந்தார். 1974ல் சிரிக்கும் புத்தர் என்ற பெயரில் அணு சோதனை நடத்தினார்.

இந்திரா காந்திக்கு பிந்தய கால பகுதி

சின்னம்

பூட்டிய இரட்டை மாடுகள் இதன் சின்னமாக 1969 பிளவுக்கு முன் வரை இருந்தது. பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்திரா பிரிவுக்கு இரட்டை மாடு சின்னத்தை ஒதுக்கியது. இதை எதிர்த்து ஸ்தாபன காங்கிரசு (சிண்டிகேட் என இதை அழைப்பார்கள்) பிரிவு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இச்சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.[5][6]

இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதை அடுத்து 1978ல் இரண்டாக பிளவுபட்டது. இந்திரா தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுவரன் சிங் தலைமையிலான பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். சுவரண் சிங் தலைமையிலான குழுவுக்கு பசுவும் கன்றும் சின்னம் கிடைத்தது, இது காங்கிரசு (S) என அழைக்கப்பட்டது. இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டது.2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தேர்தலில் வென்றனர்.[7]

மாநில அரசுகளில் காங்கிரஸ்

Current ruling parties in India
  பாஜக
  பாஜக கூட்டணி
  இதேகா
  இதேகா கூட்டணி
  மற்ற கட்சிகள்

திசம்பர் 2018இன் படி, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்திய விடுதலை பெற்றது முதல் காங்கிரஸ் கட்சி இதுவரை பெரும்பான்மையான மாநிலங்களில் ஆட்சி புரிந்துள்ளது.

தற்போது காங்கிரஸ் மற்றும் ஐமுகூ ஆளும் மாநிலங்கள்

மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் முதலமைச்சர் கட்சி/கூட்டணி கட்சி பதவியேற்ற நாள் சட்டமன்ற பலம் தேர்தல்
புதுச்சேரி வே. நாராயணசாமி (இதேகா) இதேகா (15), திமுக (2) 6 சூன் 2016 17/30 16 மே 2016
பஞ்சாப் அமரிந்தர் சிங் (இதேகா) இதேகா (78) 16 மார்ச் 2017 78/117 4 பிப்ரவரி 2017
சத்தீஸ்கர் பூபேஷ் பாகல் (இதேகா) இதேகா (68) 17 டிசம்பர் 2018 68/91 11 டிசம்பர் 2018
ராஜஸ்தான் அசோக் கெலட் (இதேகா) இதேகா (100), பசக (6), இபொக(மா) (02), பாபக (2), ராலோத (1), சுயேச்சை (9) 17 டிசம்பர் 2018 120/200 11 டிசம்பர் 2018
மத்தியப் பிரதேசம் கமல் நாத் (இதேகா) இதேகா (118), பசக (2), சக (1) 17 டிசம்பர் 2018 121/230 11 டிசம்பர் 2018

காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர்கள்

-
பிரதமர் ஆட்சிக்காலம்
ஜவஹர்லால் நேரு 1947 முதல் 1964 முடிய
குல்சாரிலால் நந்தா 1965 மே மற்றும் ஜீன், மீண்டும் ஜனவரி 11, 1966 முதல் ஜனவரி 24, 1966 முடிய
லால் பகதூர் சாஸ்திரி ஜூன் 9, 1964 முதல் ஜனவரி 11, 1966 முடிய
இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 முதல் மார்ச் 24, 1977 முடிய மீண்டும் ஜனவரி 14, 1980 – அக்டோபர் 31, 1984
ராஜீவ் காந்தி அக்டோபர் 31, 1984 முதல் டிசம்பர் 2, 1989 முடிய
பி. வி. நரசிம்ம ராவ் ஜீன் 21 1991 முதல் மே 16 1996 முடிய
மன்மோகன் சிங் 22 மே 2004 முதல் 25 மே 2014 முடிய

மேற்கோள்கள்

  1. "Indian National Congress - Policy and structure". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்த்த நாள் 17 November 2014.
  2. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013". India: Election Commission of India (2013). பார்த்த நாள் 9 May 2013.
  3. "Lok Sabha Official Website" (2014-09-09). பார்த்த நாள் 2014-09-09.
  4. "Rajya Sabha Official Website" (2014-09-09). பார்த்த நாள் 2014-09-09.
  5. 320 Million Judges By G.G. Mirchandani பக்கம் 45
  6. President Shankar Dayal Sharma, the scholar and the statesman பக்கம் 80
  7. Indira: the life of Indira Nehru Gandhi - பக்கம் 425
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.