அத்தி (தாவரம்)
அத்தி (
அத்தி | |
---|---|
![]() | |
அத்தி மரம் மற்றும் பழம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | இருவித்திலைத் தாவரங்கள் |
வரிசை: | Rosales |
குடும்பம்: | மோராசியே |
சிற்றினம்: | அத்தி மரம் (பைகஸ்) |
பேரினம்: | அத்தி மரம் (பைகஸ்) |
துணைப்பேரினம்: | Ficus |
இனம்: | F. carica |
இருசொற் பெயரீடு | |
Ficus carica L. | |

அதவம்
சங்ககாலத்தில் இந்த மரத்தின் பெயர் அதவம். ஆற்றங்கரையில் இருந்த அதவ மரத்தின் பழம் ஒன்று விழுந்ததாம். ஆற்றுநீரில் வாழ்ந்த ஏழு நண்டுகள் அதனை ஏறி மிதித்தனவாம். காதலன் தன்னுடன் இல்லாதபோது தன் காதலனைப் பற்றி அலர் தூற்றுவோர் நாக்கு ஏழு நண்டு மிதித்த ஒரு அத்திப்பழத்தைப் போலத் துன்புறட்டும் எனக் காதலி ஒருத்தி சாபம் இடுகிறாள்.[1]
விஞ்ஞான ஆராய்ச்சி
அத்திப்பழத்தை ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீமை அத்திப்பழம்
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள்.
அடிக்குறிப்பு
-
ஆற்றயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழைய கொடியோர் நாவே - குறுந்தொகை 24