மல்கோவா மாம்பழம்

மல்கோவா மாம்பழம் (Mulgoba) என்பது தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவிலும் முதன்மையாக பயிரிடப்படும் மாம்பழ வகைகளில் ஒன்று ஆகும். வியாபார ரீதியாக பயிரிடப்படும் இரகங்களில் ஒன்று ஆகும். இந்த இரகம் இயற்கையிலேயே பூக்கள் குறைவு இதனால் குறைவாகவே விளைச்சல் தரக்கூடியது ஆகும். இதன் பழங்கள் பெரியவை. நல்ல மணம் உள்ளவை. பழங்கள் தரம் மிக உயர்வானது. இந்த பழம் இனிப்பாக சாறும், மஞ்சல் நிறச் சதைப்பற்றுடன், நல்ல இருப்புத் தன்மை உடையதாகவும், கெட்டியான தோல் கொண்டதாக உள்ளதால் நீண்டதூரம் எடுத்துச் செல்ல ஏதுவாக உள்ளபழம் ஆகும்.[1]

மல்கோவா மாம்பழம்

.

மேற்கோள்

  1. ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர்,கிருட்டிணகிரி, ஏற்றுமதிக்கேற்ற மா ரகங்கள். கட்டுரை.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.