நாரத்தம்
தமிழகத்தில் நாரத்தை, நாரத்தம்பழம், நார்த்தங்காய் என்ற நிலைகளில் பயன்பாட்டில் உள்ளது. இது ஆரஞ்சு இனம். இது ஊறுகாய் செய்யவும் சித்த மருத்துவம் மற்றும் உணவிலும் பயன்படுகிறது. எலுமிச்சை அன்று. அதை விடப் பெரியதாக தோல் தடிப்புடனும் உள்ளே வெண்சுளைகளுடன் புளிப்பாக இருக்கும்.
நாரத்தை நாரத்தம் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Sapindales |
குடும்பம்: | Rutaceae |
பேரினம்: | Citrus |
இனம்: | C. medica |
இருசொற் பெயரீடு | |
Citrus medica L. | |
வகை
- ஆரஞ்சு:இது பொதுவான ஆரஞ்சுப் பழத்தைக் குறிக்கிறது.
- சாத்துக்குடி:sour orange or Bitter orange இது பொதுவாகப் வெளிர்பச்சை அல்லது பசுமஞ்சள் நிறத்தில் இருக்கும். உள்ளே வெண்சுளைகள் இருக்கும்.
- கமலாப் பழம் அல்லது கமலா ஆரஞ்சு:இது குடம் ஆரஞ்சு அல்லது குடை ஆரஞ்சு என அழைக்கப்படுகிறது. இது அளவில் சிறியதாக இருக்கும்.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.