இந்தியாவில் வேளாண்மை

இந்தியாவின் வேளாண்மை பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

[0] R[1] W[2] J[3] B[4]
இந்தியாவில் சிறு பயிர்கள் விளையும் பகுதிகள்: P தானியங்கள், S கரும்பு, J சணல், Cn தென்னை, C பருத்தி மற்றும் T தேயிலை.
வளமான கங்கை நதி டெல்டா பகுதி - கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் வெப்பமண்டல சூறாவளிக்கு அறியப்பட்டது - சணல், தேயிலை மற்றும் அரிசி பயிர்செய்தலை ஆதரிக்கிறது. இந்தப் பகுதியிலிருந்து மீன் வளர்ப்பும் அதன் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

இன்று விளைநில உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வேளாண் மற்றும் அதற்குத் தொடர்புள்ள துறைகளான காடுவளம் மற்றும் மரவேலைகள் போன்றவை 2007 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டுத் தயாரிப்புகளில் 16.6 சதவீதத்தைக் கொண்டிருந்தது, மொத்த வேலைவாய்ப்பில் [1] 60 சதவீதம் விவசாயமே கொண்டும், ஒட்டுமொத்த உள்நாட்டுத் தயாரிப்பில் தன்னுடைய பங்கில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபோதிலும், இன்றுவரை அதிக பொருளாதாரத்தை ஈட்டும் துறையாக இருந்து இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஒரு பெரும்பங்கினை வகிக்கிறது.

பால், முந்திரிக்கொட்டை, தேங்காய், தேயிலை, இஞ்சி, மஞ்சள் மற்றும் கருமிளகு ஆகியவற்றை உலகிலேயே அதிகமாக உற்பத்திசெய்யும் நாடு இந்தியா.[2] உலகிலேயே அதிகமான கால்நடை எண்ணிக்கையையும் (281 மில்லியன்) அது கொண்டிருக்கிறது.[3] கோதுமை, அரிசி, சர்க்கரை, நிலக்கடலை, உள்நாட்டு மீன் ஆகியவற்றில் உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடு.[4] புகையிலை உற்பத்தியில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.[4] உலக அளவிலான பழங்கள் உற்பத்தியில் இந்தியா 10 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது, அதில் வாழை மற்றும் சப்போட்டா உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.[4]

இந்தியாவின் மக்கள் தொகையானது, அரிசி மற்றும் கோதுமை தயாரிப்பிதற்கான ஆற்றலைவிட வேகமாக அதிகரிக்கிறது.[5]

முனைப்புகள்

விற்பனை, சேமிப்பிடம் மற்றும் குளிர் பதப்படுத்தல் ஆகியவற்றின் கட்டுமான வளர்ச்சிக்கான முதலீட்டின் தேவையின் அளவு மிக அதிகமாக கணிக்கப்பட்டுள்ளது. விற்பனைக் கட்டுமானங்களில் முதலீட்டினை உருவாக்குவதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டங்களில் கிராமப்புற கிடங்குகளைக் கட்டுதல், சந்தை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வலைக்கட்டமைப்பு, வேளாண் விற்பனை கட்டுமானம், தரவரிசைப்படுத்தல் மற்றும் தர அளவுப்பாடுகளின் வளர்ச்சி/பலப்படுத்தல் ஆகியவை அடங்கும்.[6]

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஏஆர்ஐ), 1905 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது; 1970 ஆம் ஆண்டுகளின் "இந்திய பசுமைப் புரட்சி"யை ஏற்படுத்திய ஆராய்ச்சிகளுக்குக் காரணமாக இருந்தது. வேளாண்மை தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் கல்வி உட்பட இணக்கமான துறைகளுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு (ஐசிஏஆர்) தான் உயர்மட்டக் குழுவாக உள்ளது.[7] மத்திய வேளாண் அமைச்சர் தான் ஐசிஏஆரின் தலைவர் ஆவார். இந்திய வேளாண் புள்ளியல் ஆராய்ச்சி நிறுவனம் வேளாண்மைச் சார்ந்த பரிசோதனைகளின் வடிவமைப்புகளுக்குப் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறது, வேளாண்மைத் தகவல்களை ஆராய்கிறது மேலும் கால்நடை மற்றும் தாவர இனப்பெருக்கத்திற்கான புள்ளியியல் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவத்தை உருவாக்குகிறது.

வேளாண் திட்டங்களை முழுமையாக மதிப்பிடுவதற்காக இந்திய அரசாங்கம், சமீபத்தில் விவசாயிகள் ஆணையத்தை உருவாக்கியது.[8]. இருந்தாலும் பரிந்துரைகள் பல்வேறுபட்ட வரவேற்பைப் பெற்றது.

பல்வேறு வகையான வேளாண்மை

இந்தியாவில் 10 வகையான வேளாண்மை இருக்கிறது

  1. இடம்பெயர்கிற வேளாண்மை
  2. வாழ்வாதார விவசாயம்
  3. முனைப்பான வேளாண்மை
  4. பரந்தகன்ற வேளாண்மை
  5. வர்த்தகம்சார்ந்த வேளாண்மை
  6. தோட்ட வேளாண்மை
  7. கலப்பு விவசாயம்
  8. ஒற்றைப் பயிர்
  9. உலர் விவசாயம்
  10. பயிர் சுழற்சி

சிக்கல்கள்

Slow agricultural growth is a concern for policymakers as some two-thirds of India’s people depend on rural employment for a living. Current agricultural practices are neither economically nor environmentally sustainable and India's yields for many agricultural commodities are low. Poorly maintained irrigation systems and almost universal lack of good extension services are among the factors responsible. Farmers' access to markets is hampered by poor roads, rudimentary market infrastructure, and excessive regulation.

—World Bank: "India Country Overview 2008"[9]

இந்தியாவின் குறைந்த உற்பத்தி, பின்வரும் காரணங்களின் விளைவாக ஏற்பட்டவை:

  • உலக வங்கியின் "இந்தியா: வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான முன்னுரிமைகள்" கூற்றுப்படி, இந்தியாவின் மிக அதிக வேளாண்மை மானியங்கள், உற்பத்தியை மேம்படுத்தும் முதலீடுகளைப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்துகின்றன. வேளாண்மையின் அதிகக் கட்டுப்பாடுகளால் செலவுகள், விலை இடர்ப்பாடுகள் மற்றும் நிச்சயமற்றத்தன்மை அதிகரித்துள்ளது. அரசாங்கம் வேலையில், நிலத்தில் மற்றும் கடன் சந்தைகளில் தலையிடுகிறது. இந்தியா தேவைக்குக் குறைவான கட்டுமானங்கள் மற்றும் சேவைகளைக் கொண்டிருக்கிறது.[10] தண்ணீர் திறனற்ற, தக்கவைத்துக்கொள்ள இயலாத மற்றும் நியாயமற்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் உலக வங்கி கூறுகிறது. நீர்ப்பாசனக் கட்டுமானம் தரமிழந்து வருகிறது.[10] மிக அதிக தண்ணீர் பயன்பாடு தற்போது அதிகமாக பம்பிங்க் செய்யும் அக்யுஃபெர்களால் உள்ளடக்கப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் அடி கணக்கில் குறைந்துவருவதால், இது ஒரு சிறிதளவேயான வளஆதாரமாகும்.[11]
  • எழுத்தறிவின்மை, பொதுவான சமூகப்-பொருளாதார பின்தங்கிய நிலை, நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் தாமதமான முன்னேற்றம் மற்றும் விளைநில பொருட்களுக்குப் பற்றாக்குறையான அல்லது திறனற்ற நிதிஆதாரம் மற்றும் விற்பனைச் சேவைகள்.
  • நில உடைமையின் சராசரி அளவு மிகக் குறைவாக இருக்கிறது (20,000 m² க்கும் குறைவு) மேலும் இது நில உச்சவரம்பு சட்டங்கள் மற்றும் சில வழக்குகளில், குடும்பப் பூசல்கள் காரணமாகக் கூறுபாட்டுக்கு உள்ளாகிறது. அத்தகைய சிறு நிலஉடைமைகள் பெரும்பாலும் அதிக ஆட்களைக் கொண்டிருப்பதால் மறைமுகமான வேலையின்மை மற்றும் குறைந்த தொழிலாளர் உற்பத்தித்திறனை உண்டாக்குகிறது.
  • நவீன வேளாண் நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மிகக் குறைவாக இருக்கிறது, அத்தகைய நடைமுறைகளை அறியாதிருத்தல், கூடுதலான விலை மற்றும் சிறு நில உடைமைகள் விஷயங்களில் நடைமுறைப்படுத்தமுடியாத நிலை ஆகியவை இடையூறுகளாக இருக்கின்றன.
  • நீர்ப்பாசன வசதிகள் போதுமானதாக இல்லை, 2003-04 ஆம் ஆண்டுகளில் 52.6% நிலம் மட்டுமே நீர்ப்பாசனம் செய்யப்பட்டுள்ளது என்னும் மெய்ம்மையால் இது வெளிப்படுகிறது[12], இதனால் விவசாயிகள் இன்னமும் மழையை, குறிப்பாக பருவகாலத்தை, நம்பியிருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு நல்ல பருவகாலம் ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்திற்கு ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது, அதேநேரத்தில் பற்றாக்குறையான பருவகாலம் மந்தமான வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது.[13] விவசாயக் கடன் நபார்ட்டால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது துணைக்கண்டத்தில் உள்ள கிராமப்புற வளர்ச்சிக்கான சட்டரீதியான தலைமைப் பிரதிநிதி. அதே நேரத்தில் பண உதவிகள் மூலம் சாத்தியப்படுத்தப்பட்ட மின்சார ஆற்றலினால் அதிகமாக பம்பிங்க் செய்வது ஆக்யூஃபெர் நிலைகளின் அபாயகரமான வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.[14][15][16]

வரலாறு

ஆரம்பகாலங்களிலேயே தாவரங்களைப் பயிரிட்டும் பயிர்கள் மற்றும் விலங்குகளைக் குடும்பச் சூழல்களில் பயன்படுத்தியும் இந்திய வேளாண்மை கி.மு. 9000 இல் துவங்கிவிட்டது.[17] நிலைபெற்ற வாழ்க்கையைத் தொடர்ந்து, விரைவிலேயே விவசாயத்திற்கான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாகின.[18][19] இரட்டைப் பருவகாலங்கள், ஒரே ஆண்டில் இரண்டு அறுவடைகளுக்கு வழிவகை செய்தது.[20] முன்னரே இருந்த வர்த்தக இணைப்புகள் வழியாக இந்தியப் பொருட்கள் விரைவிலேயே உலகெங்கும் சென்றது மேலும் அன்னியப் பயிர்களும் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[20][21] இந்தியர்கள், தாங்கள் தொடர்ந்து வாழ அத்தியாவசியமாக கருதப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் போற்றவும் வணங்கவும் செய்தனர்.[22]

இந்தியாவில் நீர்ப்பாசன கால்வாய்கள் ஒரு புதிய நிலை பண்பாட்டினை ஏற்படுத்தியதை மத்திய காலங்கள் கண்டன, மேலும் இந்தியப் பயிர்கள் இஸ்லாமிய ஆதரவினைப் பெற்றிருந்த உலகத்தின் பல பிரதேசங்களின் பொருளாதாரத்தைப் பாதித்தது.[23][24] சமச்சீர் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் நிலம் மற்றும் நீர் நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்பட்டன.[25][26] பிந்தைய நவீன காலத்தில் சிறு தேக்கங்கள் இருந்தபோதிலும் சுதந்திர இந்தியக் குடியரசால், விசாலமான வேளாண்சார்ந்த திட்டங்களை உருவாக்க முடிந்தது.[27][28]

இந்தியாவில் வேளாண்மையின் இன்றைய நிலை

இந்தியாவில் இன்றைய தலையாயப் பிரச்சனை விவசாய விளை நிலங்களின் ஆக்கிரமிப்பு. விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வளர்ந்ததால் , இன்று வழி வழியாக விவசாயத் தொழிலையே கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்த பல குடும்பங்களின் வாரிசுகள் அதனை விட்டு வேளியே வரத் துணிந்ததோடு அவ் விளை நிலங்கள் இன்று குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும் உரு மாறிக் கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவீதமாக குறைந்துவிட்டது என்ற அபாயகரமான செய்தி தமிழக அரசின் 11வது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக விவசாயத்துறையில் இன்றைய நிலை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 1993, 94ல் 25 சதவீதமாக இருந்த வேளாண்மை உற்பத்தி 2005, 2006ல் 13.03 சதவீதமாக சரிந்துள்ளது. அதே போல் 2001, 02ல் 76.89 லட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2004, 05ல் 61.40 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.[29]

முதல் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட முதலீடு 15 சதம். 2002-2007ல் வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்தது வெறும் 1.3 சதம்.[30] மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, வயல்வெளிகளில் வீட்டுமனைகள் தோற்றம் பெற்றமை ஆகியவையும் வேளாண்மைக்கான ஒரு சிக்கலாக உள்ளது. முற்காலத்தில் ஆட்சியின் பெரும் வருவாயக நிலவரி இருந்தது. இதனால் விவசாயிகளுக்கும் சமூகத்தில் மரியாதை இருந்தது. இன்றைய இந்தியாவில் ஆட்சியின் வருவாய் வருமான வரி, தொழில் வரி, சுங்க வரி, விற்பனை வரி என்று வேறு தொழில்களிலிருந்து பெறப்படுகிறது.

சிறப்புப்பொருளாதார மண்டலங்கள்

இன்று விளை நிலங்களை வணிக மயமாக்கும் கொள்ளைத் திட்டங்களால் உணவுப் பாதுகாப்பு, நீர்வளப் பாதுகாப்பு ஆகியவை கேள்விக்குறியாகி, இந்தியாவில் ஏழை விவசாயிகளின் நிலங்கள் வன்முறையாகப் பறிக்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வேளாண் துறையில் அயல் நாட்டு முதலீடுகளை அனுமதிப்பதன் மூலமும் நடைபெற்று வருகிறது. தற்போது 148 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் அதிகமானவை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களாகும்.

நகரமயமாக்கல்

மேலும், நகர மயமாக்கல், சுரங்கம் தோண்டி கனிம வளங்களைச் சுரண்டுதல், தொழிற்சாலைகளை அமைத்தல், அதி விரைவு நெடுஞ்சாலைகள் அமைத்தல் போன்றவற்றிற்காகவும் விவசாய விளை நிலங்கள் பெருமளவு வன்முறையாகப் பறிக்கப்பட்டு வருவதும் வருத்தத்திற்குரிய செயலாகும். உத்திரப் பிரதேசத்தில் யமுனா மகா நெடுஞ்சாலைத் திட்டத்தில் ஜேபி இன்ஃப்ரா டெக் நிறுவனமும், ஒரிசாவில் போஸ்கோ நிறுவனமும், ஜைதாபூரில் அணுமின் நிலையத் திட்டத்திற்காக பிரான்ஸ் நாட்டு நிறுவனமான அரேவாவிற்கும் விவசாய நிலங்களே பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதும் வேதனைக்குரிய செய்தியாகும்.[31]

வறுமை

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற பாரம்பரியச் சிந்தனை, செயல்முறை அழிக்கப்படுவதும் இன்றைய நலிவிற்கு ஒரு முக்கிய காரணமாகலாம். இந்தியா தன்னை ஒரு மிகப்பெரிய வளரும் பொருளாதார நாடாகவும், வல்லரசாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டு வரும் அதே வேளையில் 40% குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாத சூழல் உள்ளது. இன்று உலகெங்கிலும் உணவின்றி பட்டினி கிடக்கும் 2.6 கோடிப் பேரில் கால் பகுதியினர் – அதாவது 65 இலட்சம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.[31] 1951ல் மக்கள் தொகையில் 72 சதம் விவசாயிகள். ஆனால் தற்போது 58 சதம் மட்டுமே. ஆட்சியாளர்கள் விவசாயத்தை புறக்கணித்து விட்டனர் என்ற கொள்கை நிலவுகிறது. இதுவரை (1997லிருந்து 2008 வரை) தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,82,936. ஆனால், இன்று வரை 2 லட்சத்து 20 ஆயிரம் என்று தற்கொலை எண்ணிக்கை கூடியுள்ளது. இவர்களின் சராசரி வயது 25லிருந்து 45 வரை ஆகும். விவசாய செய்நிலங்கள் பரப்பு குறைந்துவிட்டது. நகர விரிவாக்கத்தில் வயல்கள், நீர்நிலைகள் வீடுகளாகிவிட்டன. எதிர்காலத்தில் விவசாய பூமிகள், மொகஞ்சதாரா, ஹரப்பா போன்ற வரலாற்றுச் சின்னங்களாகக் காட்சி அளிக்கலாம் என்ற கவலை முன்வைக்கப்படுகிறது. [31]

மானியங்கள் மற்றும் கடன்கள்

இன்று மானியங்கள் விவசாயிகளுக்கு இல்லை. விவசாய மானியம் என்ற பெயரில் ரசாயன உரக் கம்பெனிக்கும், பூச்சி மருந்து நிறுவனங்களுக்கும், டிராக்டர் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.[32] விவசாயிகள் கடன் தொல்லைகள் சென்ற ஆண்டில் உழவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காண்டேசு என்ற பகுதியில் கடந்த 8 மாதங்களில் 81 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முன்பு 74 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பட்ஜெட் 2006ல் நாடாளுமன்றத்தில் உழவர்கள் தற்கொலை குறித்த 6 மாநிலங்களின் பட்டியல் தரப்பட்டது. அது ஆந்திராவில் 1322, மராட்டியத்தில் 666, கர்நாடகாவில் 323, கேரளாவில் 136, ஒரிசாவில் 5 என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் வளர்ந்த நாடுகளாகிய அமெரிக்காவில் 2 விழுக்காடு மக்களும் ஜப்பானில் 5 விழுக்காடு மக்களும் வளம் குறைந்த நாடாகிய இஸ்ரேலில் 10 விழுக்காடு மக்களும் மக்கள் தொகை மிகுந்த நாடான சைனாவில் 60 விழுக்காடு மக்களும் வேளாண்மை செய்து வருகின்றனர். இந்த நாடுகளில் பல ஆண்டுகட்கு முன் கூடுதலான மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இந்தியாவில் பன்னெடுங்காலமாகவே 70 விழுக்காடு மக்கள் வேளாண்மைத் தொழிலையே தாய்த் தொழிலாகச் செய்து வருகின்றனர்.அறிவியல் வளர்ச்சி வேளாண் கருவிகள் பயன்பாடு, பிறதொழில் நாட்டம் என்ற பல்வேறு சூழ்நிலையில் வேளாண்மை செய்வோர் தொகை குறைந்து வருகின்றது. இது வளர்ச்சி நோக்கிய மாற்றம் அல்ல.

கால்நடைகள்

தமிழ் மண்ணின் அடையாளமாக விளங்கும் காங்கேயம் காளைகள் விவசாயிகளுக்கு காலம் காலமாகப் பயன்பட்டது. எங்கு நோக்கினும் தமிழகத்தின் அனைத்து மூலைகளிலும் இக்காளைகள் இருந்தன. கடந்த 15 ஆண்டுகளாகப் படிப்படியாக அழிவின் நிலைக்கு இந்த இனம் வந்துவிட்டது. குறைந்த தீவனம் உண்டு, அதிக உழைப்பைத் தரும். விவசாயிகளின் தோழனாக இருந்து அதிக பாரம் இழுத்துச் செல்லும் வண்டிகளில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது வறட்சி, கடன் என்ற தொல்லையால் விவசாயிகளால் இந்தக் காளைகளின் பெருக்கத்தில் கவனம் காட்ட இயலாமல் கறவை மாடுகளில் கவனம் செலுத்து கின்றனர். நாட்டுப்புறவியல் கதைகள், குறிப்பாக கொங்கு மண்டல கிராமியக் கதைகளிலும் காங்கேயம் காளைகள் பரவலாக இடம் பெற்றுள்ளன.

மேலும் பார்க்க

  • இந்தியாவில் வனவியல்
  • இந்தியாவில் மீன்பிடிப்பு
  • இந்தியாவில் கால்நடைகள்

காட்சிக்கூடம்

குறிப்புகள்

  1. "CIA Factbook: India". CIA Factbook. Central Intelligence Agency. பார்த்த நாள் 2008-06-10.
  2. வேளாண்மைத் துறை இன்டோ பிரிட்டிஷ் பார்ட்னர்ஷிப் நெட்வர்க், டிசம்பர் 2007 ஆம் ஆண்டில் மீட்டெடுக்கப்பட்டது
  3. லெஸ்டர் ஆர். பிரௌன் அதிகரித்து வரும் அழுத்தத்தால் சீர்கெட்டுவரும் உலகத்தின் மேய்ச்சல்நிலங்கள் எர்த் பாலிசி இன்ஸ்டிட்யூட், ஃபிப்ரவரி 2008 ஆம் ஆண்டில் மீட்டெடுக்கப்பட்டது
  4. இந்திய வேளாண்மை அக்ரிபிசினஸ் இன்ஃபர்மேஷன் சென்டர், ஃபிப்ரவரி 2008 ஆம் ஆண்டில் மீட்டெடுக்கப்பட்டது
  5. "The Food Chain in Fertile India, Growth Outstrips Agriculture". New York Times. 22 June 2008. http://www.nytimes.com/2008/06/22/business/22indiafood.html?_r=1.
  6. வேளாண்மை விற்பனை india.gov ஃபிப்ரவரி 2008 ஆம் ஆண்டில் மீட்டெடுக்கப்பட்டது
  7. நோக்கங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், டிசம்பர் 2007 ஆம் ஆண்டில் மீட்டெடுக்கப்பட்டது
  8. விவசாயிகள் ஆணையம்
  9. "India Country Overview 2008". World Bank (2008).
  10. "India: Priorities for Agriculture and Rural Development". World Bank.
  11. வடமேற்கு இந்தியாவின் உணவுக்கூடை தண்ணீரில்லாமல் போகிறதா?
  12. Multiple authors (2004). Agricultural Statistics at a Glance 2004. http://dacnet.nic.in/eands/4.6(a)All%20lndia%20Area,%20Production%20and%20Yield%20of%20Rice.xls.
  13. Sankaran, S. "28". Indian Economy: Problems, Policies and Development. பக். 492–493.
  14. வட இந்தியாவின் மறைந்துபோகும் தண்ணீருக்கான இரகசியத்தை செயற்கைக்கோள்கள் விடுவிக்கின்றன
  15. இந்தியாவில் தண்ணீர் பாதுகாப்பு குறித்த கொலம்பியா மாநாடு
  16. கீபர்ஸ் ஆஃப் தி ஸ்பிரிங்: ரீக்ளெய்மிங் அவர் வாட்டர் இன் ஆன் ஏஜ் ஆஃப் குளோபலைசேஷன், ஃப்ரெட் பியர்ஸ், பக்கம் 77.
  17. குப்தா, பக்கம் 54
  18. ஹார்ரிஸ் & கோஸ்டன், பக்கம் 385
  19. Lal, R. (August 2001), "Thematic evolution of ISTRO: transition in scientific issues and research focus from 1955 to 2000", Soil and Tillage Research, 61 (1–2): 3–12 [3], doi:10.1016/S0167-1987(01)00184-2
  20. வேளாண்மை, பற்றிய வரலாறு . என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா 2008
  21. ஷாஃப்பெர், பக்கங்கள் 310-311
  22. குப்தா, பக்கம் 57
  23. இக்டிதார் ஹுசெய்ன் சித்திக், "வாட்டர் வர்க்ஸ் அண்ட் இரிகேஷன் சிஸ்டம் இன் இன்டியா டியூரிங் ப்ரீ-முகல் டைம்ஸ்", ஜர்னல் ஆஃப் தி எகனாமிக் அண்ட் சோஷியல் ஹிஸ்டரி ஆஃப் தி ஓரியண்ட் , தொ.29, எண். 1 (ஃபிப்ரவரி 1986), பக். 52–77.
  24. ஷாஃப்பெர், பக்கம் 315
  25. பாலாட், பக்கம் 63
  26. குமார், பக்கம் 182
  27. ராய் 2006
  28. குமார் 2006
  29. http://www.tamilsigaram.com/Linkpages/special/disp.php?MessageId=1209
  30. http://www.natpu.in/?p=3472
  31. http://www.vallamai.com/common/5031/
  32. http://tamilnewspapers.blogspot.in/2007/09/blog-post_3253.html

வெளிப்புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.