இந்தியாவின் தட்பவெப்ப நிலை

இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை (Climate of India) (இந்தியாவின் தட்பவெப்பக்காலநிலை) பலதரப்பட்டதாக உள்ளது. அதனால் தட்பவெப்பக்காலநிலை இந்நாட்டு மக்களின் வேளாண் முறை, உணவு, உறைவிடம், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித இனம் இன்றும் பூமியில் நிலைத்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பூமியில் அமைந்துள்ள சாதகமான சூழ்நிலை. காற்று[1], நீர், மண், மற்றும் வேளான்மை ஆகிய நான்கும் மனிதன் இன்னும் புவியில் உயிருடன் இருக்க காரணமான முக்கிய இயற்கை சக்திகள். தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களான வெப்பநிலை, காற்று அழுத்தம், காற்று வீச்சு, ஈரப்பதம் மற்றும் மழையானது (இது நீராகவோ, உறைந்த தூவிப்பனி வீழ்வாகவோ இருக்கலாம்) இப்பூமியில் இடத்துக்கு இடம் மாறுபட்டுள்ளது. தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களின் உள்ள மாறுபாடுகள் பலதரப்பட்ட தாவர வகை அல்லது செடிகொடி முளைக்கும் முறை (vegetation) அமைகிறது.

அடிக்குறிப்புகள்

  1. தமிழில் காற்றை, வளி, கால் என்றும் அழைப்பதுண்டு

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.