காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில்
காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் (ஆனந்த ருத்ரேசம்) என்று அறியப்படும் இக்கோயில் காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் இறைவன் ருத்ரேசரின் மீது சிவஞான யோகிகள் பாடிய நூல் கச்சிஆனந்தருத்திரேசர் பதிகமாகும்.[1]
காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆனந்த ருத்ரேஸ்வரர். |
தல வரலாறு
வரலாற்று சுருக்கம்
- இக்கோயில் காஞ்சி சிவக்கொயில்களில் ஒன்றாகும்.
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை.
- இவ்விறைவர் ஆனந்த ருத்ரேசர் எனும் திருமூர்த்தியாவார்.
- மூலவர் சிவலிங்க மூர்த்தம்.
- இக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வீரபாகு, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன.
அமைவிடம்
இந்தியாவின் தென்கடை மாநிலமான தமிழ்நாட்டின் வடக்கோடி மாவட்டங்களில் ஒன்றான மாவட்டத்தின் தலைநகரான சிவகாஞ்சி என்றழைக்கப்படும் பெரிய காஞ்சிபுரத்தின் மேற்கு பிராந்தியமான பிள்ளையார் பாளையம் எனும் பகுதியில் சேர்மேன் சாமிநாத முதலியார் வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இது, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து மேற்கே 1.½ கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.