காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில்

காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் (தீர்த்தேஸ்வரம்) என விளங்கும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். இது, சர்வ தீர்த்தம் மேற்கு கரையில் உள்ள கிழக்கு பார்த்த சன்னதியாகும் மேலும், இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

காஞ்சிபுரம் தீர்த்தேஸ்வரம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் தீர்த்தேஸ்வரம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தீர்த்தேஸ்வரர்.
தீர்த்தம்:சர்வ தீர்த்தம்.

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: தீர்த்தேஸ்வரர்.
  • தீர்த்தம்: சர்வ தீர்த்தம்.
  • வழிபட்டோர்: அனைத்து தீர்த்தங்களும்.

தல வரலாறு

  • காமாட்சி தேவியார் பூசனை செய்யும் காலத்தில் சிவபெருமான் ஏவிய தீர்த்தங்களெல்லாம் திரண்டு வேகமாய் வந்து பெருமானைக் காமாட்சி தேவியார் தழுவியிருத்தலைக் கண்டு வேகமடங்கித் தாழும் சிவார்ச்சனை செய்ய ஆசைகொண்டு தீர்த்த ராசனென்று பிரதிட்டை செய்து பூசித்தனர்.
  • உமாதேவி மணலால் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டுக்கொண்டிருந்தபோது, இறைவன், அம்மை தன்னைத் தழுவும் வகையில் அனைத்து தீர்த்தங்களையும் அழைத்தார். அவ்வாறே அனைத்துத் தீர்த்தங்களும் நதியுருகொண்டு காஞ்சிக்கு வந்தன. தேவி அஞ்சி, இறைவனை தழுவினார். பின்பு இத்தீர்த்தங்கள் இங்கேயே தங்கி தீர்த்தேசுவரர் என்ற பெயரில் சிவலிங்கம் தாபித்து வழிபட்டன, என்பதே இத்தல வரலாறாக காணப்பட்டது.[2]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் வேலூர் செல்லும் சாலையிலுள்ள சர்வதீர்த்தத்தின் (குளத்தின்) மேற்கு கரையில் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. மற்றும் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து, காஞ்சி கச்சபேசுவரர் கோயிலின் வழியாக காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[3]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.