ஆனந்தபைரவி

ஆனந்தபைரவி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகம் இந்தியாவின் நாட்டுப்புற பாடல்களில் பிரபலமானது.

இலக்கணம்

ஆரோகணம்:ஸ க2 ரி221 ப த1 ப நி2 ஸ்
அவரோகணம்:ஸ் நி21 ப ம12 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு ஸம்பூர்ண இராகம் என்றாலும் ஒரு மேளகர்தா இராகம் ஆகாது, ஏனெனில் இதில் வக்ர ஆரோகணம் உள்ளது.
  • இது ஒரு பாஷாங்க இராகம். இன்த இராகத்தில் மூன்று அன்னிய சுரங்கள் வருகின்றன. இவை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் வரவில்லை, ஆனால் சில பிரயோகங்களில் வருகின்றன.

உருப்படிகள்

  1. சியாமா சாஸ்திரிகள் இந்த இராகத்தில் நிறைய உருப்படிகள் இயற்றினார். அவர் இந்த இராகத்தை தற்போதய உருவிற்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கிருதிகலைஞர்
மரிவேரே கதிசியாமா சாஸ்திரிகள்
ஓ ஜகதம்பாசியாமா சாஸ்திரிகள்
மானஸ குருகுஹமுத்துசாமி தீட்சிதர்
தியாகராஜ யோக வைபவம்முத்துசாமி தீட்சிதர் (தியாகராஜ சுவாமிகளை போற்றி)
ஸாமகாண ப்ரியேபெரியசாமி தூரன்

ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

  1. கொஞ்சநாள் பொறு தலைவா :- ஆசை
  2. போய்வா மகளே :- கர்ணன்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

    வெளியிணைப்புக்கள்

    • Raga Anandabhairavi - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.