ஆனந்தபைரவி
ஆனந்தபைரவி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகம் இந்தியாவின் நாட்டுப்புற பாடல்களில் பிரபலமானது.
இலக்கணம்
ஆரோகணம்: | ஸ க2 ரி2 க2 ம1 ப த1 ப நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க2 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இது ஒரு ஸம்பூர்ண இராகம் என்றாலும் ஒரு மேளகர்தா இராகம் ஆகாது, ஏனெனில் இதில் வக்ர ஆரோகணம் உள்ளது.
- இது ஒரு பாஷாங்க இராகம். இன்த இராகத்தில் மூன்று அன்னிய சுரங்கள் வருகின்றன. இவை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் வரவில்லை, ஆனால் சில பிரயோகங்களில் வருகின்றன.
உருப்படிகள்
- சியாமா சாஸ்திரிகள் இந்த இராகத்தில் நிறைய உருப்படிகள் இயற்றினார். அவர் இந்த இராகத்தை தற்போதய உருவிற்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கிருதி | கலைஞர் |
---|---|
மரிவேரே கதி | சியாமா சாஸ்திரிகள் |
ஓ ஜகதம்பா | சியாமா சாஸ்திரிகள் |
மானஸ குருகுஹ | முத்துசாமி தீட்சிதர் |
தியாகராஜ யோக வைபவம் | முத்துசாமி தீட்சிதர் (தியாகராஜ சுவாமிகளை போற்றி) |
ஸாமகாண ப்ரியே | பெரியசாமி தூரன் |
ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்
- கொஞ்சநாள் பொறு தலைவா :- ஆசை
- போய்வா மகளே :- கர்ணன்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புக்கள்
- Raga Anandabhairavi - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.