ஜாலவராளி

ஜாலவராளி இராகம் கருநாடக இசையின் 39வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 39வது இராகத்திற்கு தாலிவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்

ஜாலவராளி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ ரி112 ப த1 நி3 ஸ்
அவரோகணம்:ஸ் நி31 ப ம21 ரி1
  • ரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) 3 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு விவாதி மேளம்.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் கானமூர்த்தி (03) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்

வகைஉருப்படிஇயற்றியவர்தாளம்
கிருதிஅனாத ரக்ஷகாகோடீஸ்வர ஐயர்ஆதி
கிருதிமாதவ தய்யமங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாஆதி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.