நடபைரவி

நடபைரவி கருநாடக இசையின் 20 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 வது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள. இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது அசாவேரி தாட்.

இலக்கணம்

நடபைரவி் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ ரி221 ப த1 நி2 ஸ்
அவரோகணம்:ஸ் நி21 ப ம12 ரி2
  • வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 2 வது இராகம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ரி, நி ஆகிய சுரங்கள் தீர்க்கமாக இசைக்கப்படுகின்றன.

சிறப்பு அம்சங்கள்

உருப்படிகள்[1]

வகைஉருப்படிஇயற்றியவர்தாளம்
கிருதிபருலசேவா இராமனாதபுரம் சீனிவாச ஐயங்கார்ரூபகம்
கிருதிஸ்ரீ வள்ளி தேவசேனாபதேபாபநாசம் சிவன்ஆதி
கிருதிஎண்ணுவதெல்லாம்பெரியசாமி தூரன்ஆதி
கிருதிஅம்போருகபாதமேகோடீஸ்வர ஐயர்ரூபகம்
கிருதிஐயனே நடனமாடியமுத்துத் தாண்டவர்மிஸ்ர ஜம்பை
கிருதிநீ பாதமுலனுமுத்தையா பாகவதர்ஆதி
பதம்கையுடன் கூட்டிவாடிமாயூரம் விஸ்வநாத சாஸ்திரிஆதி

ஜன்ய இராகங்கள்

நடபைரவியின் ஜன்ய இராகங்கள் இவை.

திரையிசைப் பாடல்கள்

நடபைரவி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

  • அம்மாவும் நீயே அப்பாவும் நீயே :- களத்தூர் கண்ணம்மா
  • திருக்கோயில் வாசலில்  :- முத்து

மேற்கோள்கள்

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.