ஜெயநாராயணி
ஜெயநாராயணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்

ஜெயநாராயணி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

ஜெயநாராயணி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஜெயநாராயணி இராகத்தில் சட்சம் (ச), சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச க2 ம1 ப த2 ச் |
அவரோகணம்: | ச் நி2 த2 ப ம1 க2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ-சம்பூர்ண" இராகம் எனப்படுகின்றது.
உருப்படிகள்
- கீர்த்தனை: " மனவினி வினுமா... "
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.