பௌளி

பௌளி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

பௌளி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
பௌளி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்:ச ரி13 ப த1 ச்
அவரோகணம்:ச் நி31 ப க3 ரி1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சாடவ" இராகம் என்பர்.

உருப்படிகள்[1]

வகைஉருப்படிஇயற்றியவர்தாளம்
கீர்த்தனைமேலுகோவைய்யாதியாகராஜ சுவாமிகள்ஜம்பை
கிருதிகருணாநிதியேபாபநாசம் சிவன்திரிபுடை
கிருதிஸ்ரீ பார்வதிமுத்துசுவாமி தீட்சிதர்ஆதி
கிருதிசம்போ மகாதேவாநீலகண்ட சிவன்ஆதி
கிருதிதூய நெஞ்சமுள்ளஇலட்சுமணப்பிள்ளைஆதி
கிருதிநீ தயவாய்முத்துத்தாண்டவர்ஆதி
கிருதிஎன் முறை கேட்டுபெரியசாமித் தூரன்ஆதி
கிருதிபார்வதி நாயகாசுவாதித் திருநாள் ராம வர்மாஆதி


இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.