முக்கூர்த்தி தேசியப் பூங்கா
முக்கூர்த்தி தேசியப் பூங்கா தென்னிந்தியாவில் உள்ள நீலகிரி மேட்டுநிலத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப் பட்ட பகுதியாகும். இதன் பரப்பளவு 78.46 கி.மீ². இது இப்பகுதியின் சிறப்பான வரையாடுகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது நீலகிரி பல்லுயிர் வலயத்தின் ஒரு பகுதியாகும்.
முக்கூர்த்தி தேசியப் பூங்கா | |
— National Park — | |
style="background-color: #CDE5B2; line-height: 1.2;" | IUCN வகை II (தேசிய வனம்) | |
![]() மாண்ட்டேன் புல்வெளியில் வரையாடுகள் | |
அமைவிடம் | 11°16′N 76°28.5′E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி மாவட்டம் |
Established | 12 திசம்பர் 2001 |
அருகாமை நகரம் | உதகமண்டலம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
78.46 சதுர கிலோமீட்டர்கள் (30.29 sq mi) • 2,629 மீட்டர்கள் (8,625 ft) |
தட்பவெப்பம் • மழைவீழ்ச்சி |
• 6,330 mm (249 in) |
முக்கிய உயிரினம் | வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்கு |
Governing body | தமிழ்நாடு வனத்துறை |
இணையதளம் | www.forests.tn.nic.in/WildBiodiversity/np_muknp.html |
இப்பகுதி புல்வெளிகளும் சோலைக் காடுகளும் உள்ளடங்கியது. மேலும் பல அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களின் தாயகமாக உள்ளது. இங்கு வங்காளப் புலி, ஆசிய யானை முதலியன உள்ளன. வரையாடு இப்பகுதிக்கே உரித்தான விலங்கு. இப்பூங்கா முன்னர் வரையாட்டின் ஆங்கிலப் பெயரான நீலகிரி தார் தேசியப்பூங்கா என்றறியப்பட்டது.
இப்பகுதி கானுயிர்க் காப்பகமாக 1982 ஆகத்து 3-ஆம் நாளும் பின்னர் 1990 அக்டோபர் 15-இல் தேசியப்பூங்காவாகவும் தரமுயர்த்தப்பட்டது.
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.