சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம்
சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் (Suchindram Theroor Birds Sanctuary) ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாகும். இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சுசிந்திரம் குளம் மற்றும் தேரூர் குளம் ஆகியவற்றை உள்ளடக்கியப் பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலை 47-ன் அருகே அமைந்துள்ளது. இது மத்திய ஆசியாவின் தென்கோடி எல்லையில் அமைந்துள்ளதால் இடம்பெயர் பறவைகளுக்கு முக்கியமான இடமாகும். 2002 ஆம் ஆண்டு இப்பகுதியைப் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கக் கோரிக்கைவிடப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. [1][2]சுசீந்திரம் குளத்தின் அமைவிடம் 8°7′30″N 77°27′30″E ஆகும். தேரூர் குளத்தின் அமைவிடம் 8°10′45″N 77°27′45″E ஆகும். இச்சரணாலயத்தின் குறியீட்டு எண் IN279 ஆகும்.[3]


குளங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு குளங்கள் அமைந்துள்ளன. மொத்தம் 2,058 நன்னீர் குளங்கள் உள்ளன. சுசிந்திரம் தேரூர் தவிர பறக்கை, தத்தியார் குளம், வேம்பனூர் குளம், சுங்கான்கடை குளம், புத்தேரிக் குளம், தாழக்குடி குளம் மற்றும் மணவாளக்குறிச்சி குளம் போன்றவை பறவைகளின் முக்கியமான இடங்களாகும். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் எல்லையான குமரி மாவட்டத்தில் புலிகள் வாழும் காட்டுயிர்ச் சரணாலயம் ஒன்றும் உள்ளது.
மேற்கோள்கள்
- "Policy Note on Forest and Environment 2002–2003, Demand No. 14". Government of Tamil Nadu (July 7, 2003). மூல முகவரியிலிருந்து 2003-11-25 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-11-02.
- "11 more wildlife, bird sanctuaries". The Hindu. Apr 30, 2002. http://www.hindu.com/thehindu/2002/04/30/stories/2002043002910100.htm. பார்த்த நாள்: 2009-01-08.
- BirdLife International Suchindram Therur, Vembanoor